Please Visite here - www.cenimagallary.blogspot.com

Wednesday, June 24, 2009

உயிர் தப்பிய நடிகை யமுனா!

சென்னை: நடிகை யமுனாவின் கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் நடிகை யமுனா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

பொறந்த வீட்டுப் பட்டுப் புடவை, மௌனப் போராட்டம் போன்ற படங்களில் நடித்தவர் யமுனா. இப்போது அரவிந்தராஜ் இயக்கத்தில் அம்மன் எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் இது.

இந்தத் தொடரின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்து வந்தது. நேற்று படப்பிடிப்பை முடித்துக் கொண்டு பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார் யமுனா.

கரூர் அருகே அவரது கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு டேங்கர் லாரி மோதியது. மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரியத் துவங்கியது. உடனடியாக காரிலிருந்து குதித்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் யமுனா.

ஆனால் அந்தக் கார் முற்றாக எரிந்துபோனது. கார் டிரைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. யமுனாவும் டிரைவரும் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

'அம்மன் தொடரில் நடித்து வரும் என்னை அந்த அம்மன்தான் இவ்வளவு பெரிய விபத்திலிருந்து காப்பாற்றினார்' என யமுனா நிருபர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment