Please Visite here - www.cenimagallary.blogspot.com

Friday, June 26, 2009

விபச்சாரம் , புது நடிகை-2 இயக்குநர்கள் கைது!

சென்னை: சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட புதிய பட கதாநாயகியை மாநகர் போலீச்ர் கைது செய்தனர். அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரு இயக்குநர்களும் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.

சென்னையில் விபசாரத்தில் ஈடுபடுவோரை பிடிக்க விபசார தடுப்பு பிரிவு போலீசார் மீண்டும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வடபழனி பஸ் நிலையம் அருகே இரு திரைப்பட இயக்குநர்கள் இளம்பெண்களின் படங்களைக் காட்டி இளைஞர்களை விபச்சாரத்துக்கு அழைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக மாநகர விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீசார், துணை கமிஷனர் விஜயகுமாரி, உதவி கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையில் சம்பவ இடத்துக்கு கிளம்பினர். அனைவரும் சாதாரண உடையில் களமிறங்கினர்.

அப்போது சுமார் நடுத்தர வயது ஆள் ஒருவர் போலீசாரிடம் சென்று, ரூ 5000 கொடுத்தால் சினிமா நடிகை போன்ற அழகான பெண்னுடன் செக்ஸ் வைத்து உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்தாராம். உடனே ஒப்புக்க கொண்ட போலீசார், அந்த நபரின் காரைப் பின்தொடர்ந்துள்ளனர். சின்மயா நகரில் ஒரு வீட்டின் முன் நின்றது அந்தக் கார்.

உடனடியாக போலீசார் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரிய வந்தது.

விபச்சாரத்தில் வீணா (19) என்ற சினிமா நடிகையும் ஈடுபட்டிருந்தார். இவர் கேரளத்துப் பெண். உனக்காகப் பிறந்தேன் என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். முருகதாஸ் எனும் புதிய படத்தில் நாயகியாகவும் நடிக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் விபசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் வீணா.

"படங்களில் நடிக்க அடிக்கடி சென்னை வந்து செல்வேன்.இப்போது இரு புதிய படங்களில் நடித்துக் கொண்டுள்ளேன். அவற்றில் உனக்காகப் பிறந்தேன் விரைவில் வெளியாக உள்ளது. முருகதாஸ் படப்பிடிப்பில் உள்ளது. அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் விபச்சாரத்தில் ஈடுபட்டேன்..." என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

வீணாவை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பழம் பெரும் நாடக நடிகரும், சினிமா டைரக்டருமான விஜயகுமார் என்ற விஜயசாரதி (70) மற்றும் மலையாள பட டைரக்டர் ஜோசப் என்ற வர்கீஸ் (38) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

விஜயசாரதியின் சொந்த ஊர் சேலம் ஆத்தூர். இவர் கடந்த 40 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வருகிறார்.

விஜயசாரதி மற்றும் வர்கீஸ் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வீணா, பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment