Tuesday, July 14, 2009
ஷ்ரியா 'சைஸ் ஜீரோ'!
ஒல்லிபிச்சான் என்பதைத்தான் படு நேக்காக சைஸ் ஜீரோ என்று ஜென்டிலாக சொல்லிக் கொள்கிறார்கள். கிட்டப் போய்ப் பார்த்தால் லேசாக எலும்பு எட்டிப் பார்க்கும். அப்படி ஒரு மெலிசான உடம்பை எட்டுவதற்குப் பெயர்தான் சைஸ் ஜீரோ.
இந்த சைஸ் ஜீரோ என்ற வார்த்தை மிகவும் பிரபலமானவது கரீனா கபூரால்தான். அவர் தான் முதன் முதலில் தனது உடலை படு ஒல்லியாக மாற்றி அனைவரையும் வியக்க வைத்தார்.
அவரைத் தொடர்ந்து ஏகப்பட்ட நடிகைகள் சைஸ் ஜீரோவுக்கு மாறினார். ஷில்பா ஷெட்டி கூட சைஸ் ஜீரோவுக்கு மாறினார். இப்போது அந்த வரிசையில், ஷ்ரியாவும் இணைந்துள்ளார்.
சிவாஜி பட நாயகியான ஷ்ரியா, இந்தியிலும் தனது தடத்தை அழுத்தமாக பதிக்க முயன்று வருகிறார். அதற்கு முதல் படியாக சைஸ் ஜீரோவுக்கு மாறியுள்ளாராம்.
கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, வாய்க் கட்டுப்பாடு என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து இந்த சாதனையைப் படைத்துள்ளாராம் ஷ்ரியா.
பாலிவுட் இளசுகளுக்கு மத்தியில் எனது மெலிசு உடம்பு ரொம்பவே டாப்பாக இருக்கும் என்று பெருமையுடன் கூறுகிறாராம் ஷ்ரியா.
ஷ்ரியாவின் இந்தப் புதிய கோலத்தை கோலிவுட் ரசிகர்களும் காணலாம். கந்தசாமி படத்தில் சில காட்சிகளில் தனது உடல் அழகை எடுப்பாக காட்டும் வகையிலான காஸ்ட்யூம்களை அணிந்து ஆடியுள்ளாராம் பாடல் காட்சிகளில்.
ரஜினியோட நடிக்கணும்...' - நமீதாவின் கனவு!
கவுதமிக்கு முதல் படத்திலேயே (குரு சிஷ்யன்) அந்த அந்தஸ்து வந்துவிட்டது. நயன்தாராவுக்கோ இரண்டாவது படத்தில் (சந்திரமுகி) அந்தக் கிரீடம் கிடைத்துவிட்டது. சிவாஜி என்ற ஒரே படம் ஸ்ரேயாவை சிகரத்தில் ஏற்றிவிட்டது. இந்த வரிசையில் அம்பிகா, ராதா, மீனா, சவுந்தர்யா, ரூபினி... இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம்.
இதையும் தாண்டி அசின், த்ரிஷா போன்ற நாயகிகள் முன்னணியில் இருக்கவே செய்கிறார்கள்.
நமீதாவுக்கு எப்படியும் முதல் நிலை நடிகையாக வரவேண்டும் என்ற கனவு நீண்ட நாட்களாகவே உள்ளது. ரஜினி அல்லது கமலுடன் நடித்தால் எப்படியும் முதல் நிலைக்கு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு.
சில ஆண்டுகளுக்கு முன் கமலுடன் ஒரு படம் நடிக்க வாய்ப்பு வந்து பின் நழுவிப் போனது.
இப்போது எப்படியாவது ரஜினி படத்தில் தலைகாட்டிவிட வேண்டும் எனத் துடிக்கிறாராம் நமீதா. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்றும், அவருடன் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் போதும், தனது சினிமா கனவு முழுவதும் நிறைவேறிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எந்திரனுக்குப் பிறகு ரஜினி படம் நடிப்பாரா என்பதைப் பொறுத்துதான் நமீதா ஆசை நிறைவேறுவதும் நிறைவேறாததும்.
எதுக்கும் ஒரு நடை ராகவேந்திரா மண்டபம் வரை போய் ரஜினியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கங்க நமீதா... இப்போதைக்கு உடனடியாக நடக்கக் கூடியது அதுதான்!
இந்திரவிழா விமர்சனம்.
தியேட்டரில் என்னையும் என் நண்பனையும் சேர்த்து சுமார்
இருபது பேர் படம் பார்த்தோம்.இது போன்று படங்கள் எடுப்பதில்
இயக்குனர்க்கு என்ன லாபமோ என்று தெரியவில்லை(இரண்டு
கதாநாயகிகள் தவிர).சில சுவையான சம்பவங்கள் படத்தின்
உள்ளேயும் வெளியேயும்:
********************************
# தியேட்டர் உள்ளே செல்லும் போதே செக்யூரிட்டி அங்கிள்
ஒன்னுக்கு ரெண்டு வாட்டி சொன்னாரு "தம்பி இந்திரவிழா
இந்திரவிழா படம் தான் ஓடுது வாமனன் காலையலே மட்டும் தான்"."இந்திரவிழா படத்துக்கு தான் வந்தோம், படம் போடுறிங்க
இல்ல, ஒரு வண்டியையும் காணோம்" என்று கேட்டேன் நான்.
"போங்க தம்பி இன்னும் படம் ஆரம்பிக்கல" என்றார்.
#படம் பார்த்த பத்தாவது நிமிடத்திலேயே படம் தேறாது என்று
தெரிந்த பின்னும் கனவு நாயகி நமீதா இன்னும் வரவில்லை
என்ற ஒரே காரணத்தால் படத்தை விழித்து கொண்டு
பார்த்தோம்.
#என்கிட்டே ஒரு கெட்ட பழக்கம்ங்க படம் மொக்கையா
இருந்துச்சுன்னா கொஞ்சம் கமெண்ட் அடிப்பேன். இந்த படத்துக்கு
சொல்லவே வேணாம். ஆனால் நான் கமெண்ட் அடிப்பதால்
முன்இருக்கை நபருக்கு கோபம் வந்து விட்டது.அது ஒன்னும்
இல்லைங்க மேல ஒரு நமீதா படம் இருக்குல அதுக்கு நான்
ஒன்னும் பெருசா சொல்லலங்க ,பக்கத்துல என் நண்பன்கிட்ட
தான் சொன்னேன்
"மேல பாருடா புலி தோலு, நடுவுல வரிக்குதிரை தோலு,
கிழே கறுப்பாடு தோலு. ஒரு தோலை மறைக்க எத்தனை
தோலு மச்சான்"(ஜெட்லி தத்துவம் நெ:356)
#ஒரு வழியா இன்டெர்வல் முடிஞ்சு வெளியே வந்தோம்,
திரும்பவும் நம்ம செக்யூரிட்டி அங்கிள் என்னை பார்த்து
புன்முறுவல் செய்தார்.
"அண்ணே நீங்க டிக்கெட் எடுக்கும் போதே இந்திரவிழா
இந்திரவிழான்னு சொல்லும் போதே நான் உஷார் ஆகிரிக்கணும் தப்பு பண்ணிட்டேன் தலைவா" என்று அவரிடம் சொன்னேன்.
"இந்த படத்துக்கு வாமனன் எவ்வளவோ மேல்ப்பா"
என்றார் செக்யூரிட்டி.
"படம் எத்தனை மணிக்கு அண்ணே முடியும்" அவரிடம்
கேட்டேன்.
"9.20 க்கு தம்பி"
"இன்னும் ஒரு மணிநேரம் இந்த கொடுமையை பாக்கணுமா?"
"இந்த படம் பரவா இல்லை தம்பி இதுக்கு முன்னாடி ஞாபகங்கள்
அப்படின்னு ஒரு படம் ஒடிச்சு , தொடர்ந்து மூணு நாள் நைட்
ஷோ படம் ஒட்டல.யாரும் தியேட்டர் பக்கம் எட்டி கூட
பாக்கல"
# வழக்கம் போல் அரைமணி நேரம் பின்னாடி (தள்ளிட்டு)
வருபவர்களும்,அரைமணி நேரம் முன்னாடி போறவங்களுக்கும் இந்த படம் ஒரு வரபிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.
# விவேக்கின் மொக்கை காமெடி மேலும் படத்தை மொக்கை
ஆக்குகின்றது.சில காட்சிகள் ரசிக்கலாம்.
# ஸ்ரீகாந்த் பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, இனிமே அவரு
டான்ஸ் ஷோல மட்டும் தான் பாக்க முடியும்.
#கடைசி அரைமணி நேரம் நான் வீட்டுக்கு போய்விடலாம்
என்று எழுந்தேன் பார்த்த கரெக்ட்ஆ ஒரு நமீதா பாட்டு
அப்படியே உட்கார்ந்தேன், ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல
அந்த பாட்டுல.
#இந்திரவிழா ரொம்ப நாளாக படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது,
படத்தை பார்த்த பின் படம் ரிலீஸ் ஆகாமலேயே இருந்திருக்கலாம்
என்று நினைத்தேன்.
ஏ.வி.ஜி லிங்க் ஸ்கானர்
ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 லட்சம் இன்டர்நெட் வெப் சைட்டுகள் மறைந்திருந்து தாக்கும் பயமுறுத்தல்களால் கெடுக்கப் படுகின்றன. இவற்றில் 60 சதவிகிதம் தளங்களை மூடுகின்றன; அல்லது இணையத்தில் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்கின்றன. இதனால் நாம் அந்த தளங்களுக்கு வழங்கப்பட்ட லிங்க்குகள் பயனற்றதாய் அமைந்துவிடுகின்றன. இது போன்ற தளங்களுக்கு ஒருவர் விசிட் செய்தாலே போதும்; அவரின் கம்ப்யூட்டரிலிருந்தும் தகவல்கள் திருடப்படும். அவர் அந்த தளத்தில் எதனையும் கிளிக் செய்ய வேண்டியதே இல்லை. அந்த தளத்திற்குச் சென்று அதன் தகவல்களைப் பார்த்தாலே போதும்.
இது போல ஓர் இணைய தளத்தில் மறைந்திருந்து தாக்கும் விஷமத்தனமான புரோகிராம்களை வழக்கமான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் முற்றிலுமாகக் கண்டறிய முடியாது. இவற்றினைக் கண்டறிய புதிய வகை பாதுகாப்பு வளையம் தேவைப்படுகிறது. அதனைத்தான் ஏவிஜி நிறுவனம் தற்போது வழங்கியுள்ளது.
ஏவிஜி லிங்க் ஸ்கேனர் ஒருலிங்க் அல்லது ஒரு யு.ஆர்.எல்.முகவரியினைத் தருகையில் அதன் வெப் சைட்டை ஆய்வு செய்து அதில் இது போன்ற மறைந்திருந்து தாக்கும் பயமுறுத்தல்கள் இருக்கின்றனவா என்று பார்க்கிறது.
அப்படி ஒரு பயமுறுத்தல் இருக்கும் பட்சத்தில் இன்டர்நெட் பயன்படுத்துபவரை அந்த தளத்தைத் தங்கள் கம்ப்யூட்டருக்கு இறக்குவதிலிருந்து தடுக்கிறது.இதனால் விஸ்டா மற்றும் எக்ஸ்பியில் செயல்படுபவர்கள் இன்டர்நெட்டில் ஏதேனும் ஒரு லிங்க்கில் கிளிக் செய்தால் உடனே அது பிஷ்ஷிங் போன்ற பயமுறுத்தல்கள் அந்த தளத்தில் உள்ளனவா என்று அறிந்து கொள்ளலாம்.
கூகுள், யாஹூ மற்றும் எம்.எஸ்.என். மூலமாக தளங்களைத் தேடும்போதும் ஏவிஜி லிங்க் ஸ்கேனர் தேடலில் பட்டியலிடப்படும் தளங்களின் பாதுகாப்பு எத்தகையது என்று காட்டுகிறது. அதே போல நாம் புக் மார்க் செய்திடும் தளங்களின் முகவரிகள் மூலம் அந்த தளங்களை ஆய்வு செய்து ஆபத்து உள்ளதா என்று காட்டுகிறது.
இந்நாளில் வைரஸ்கள் மற்றும் பிற மால்வேர்கள் பரவுவதற்குச் சரியான தளங்களாக இணைய தளங்கள் இயங்குகின்றன. இவற்றில் தளங்களிலேயே மறைந்திருந்து தாக்கும் இந்த ஆன்லைன் பயமுறுத்தல்கள் மிகவும் ஆபத்தானவையாகும்.
எனவே தான் இவற்றை எச்சரிக்கும் பாதுகாப்பு வளையத்தினை வழங்குவதனை முதல் பணியாக மேற்கொண்டு இந்த ஏவிஜி லிங்க் ஸ்கேனரைத் தந்துள்ளோம் என்று இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த லிங்க் ஸ்கேனர் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இந்த பாதுகாப்பு வளையத்தின் செயல்பாடுகள் குறித்த உதவிக் கிடைக்கின்றன.இந்த பாதுகாப்பு வளையத்தினை விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா (32/64 பிட் தொகுப்பு) ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
உதவிக் குறிப்புக்களுக்கு : இங்கே கிளிக் செய்யவும்
இதைவிட மெக்கபி ஏற்கனவே சைட் அட்வைஸர் என்ற மென்பொருளை இலவசமாக தருகிறது.இதில் மிக கூடுதல் வசதி வேண்டும் என்றால் மட்டும் பணம் கொடுத்து ப்ரபெசனல் பதிப்பு வாங்க வேண்டும்.
மற்றபடி இதனை அப்படியே இலவசமாக பாவிக்க எந்த கட்டணமும் இல்லை.இதில் ஒவ்வொரு தளத்துக்கும் நுழைய முன்னரே சிவப்பு பச்சை என அந்த தளத்தின் நம்பகத்தனமையை காட்டி விடும்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
மீண்டும் இணையும் கஜினி நாயகர்கள் - மும்மொழியில் உருவாகிறது
ஒவ்வொரு மொழியாக அடித்தால் போதாது என்றோ என்னவோ, ஒரே நேரத்தில் மூன்று மொழிகளையும் கலக்கும் நோக்கில், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளி்ல இந்தப் படம் உருவாக்கப் போகிறார் முருகதாஸ்.
கஜினி, சூர்யாவுக்கு மிகப் பெரிய பிரேக். அதேபோல இந்தியிலும் கஜினியின் ரீமேக் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தமிழில் கஜினியின் நாயகனான சூர்யாவும், முருகதாஸும் மீண்டும் கை கோர்க்கிறார்கள். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் இப்படம் உருவாகிறது.
படத்தைத் தயாரிக்கப் போவதும் ஒரு பெரும் புள்ளிதான். துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், குருவி படத் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்தான் இந்த மெகா படத்தைத் தயாரிக்கிறார்.
இதுகுறித்து முருகதாஸ் கூறுகையில், ஆமாம், 3 மொழிகளில் இப்படத்தை உருவாக்கப் போகிறோம். சூர்யாதான் 3 மொழிகளிலும் நாயகன். மற்ற கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இது ஒரு முழுமையான ஆக்ஷன் படம். என்ன மாதிரியான ஆக்ஷன் என்பதை தற்போது இறுதி செய்து கொண்டிருக்கிறோம் என்றார் முருகதாஸ்.
சரி, ஷாருக்கானுடன் இணைவது என்னவாயி்ற்று என்று கேட்டபோது, ஷாருக்குடன் ஒரு கதையை டிஸ்கஸ் செய்தேன். அந்தக் கதையை இப்போது படமாக்கப் போகிறோம். எப்போது என்று கூற முடியாது.
நிச்சயம் இது ரமணாவின் ரீமேக் இல்லை. முற்றிலும் புதிய கதை. ஒரிஜினல் கதை என்றார் முருகதாஸ்.
தற்போது சூர்யா ஆதவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து ஹரி இயக்கத்தில் சிங்கத்தில் நடிக்க வேண்டியுள்ளது. இவற்றை முடித்த பின்னர் முருகதாஸ் படத்துக்கு வருகிறார் சூர்யா.
Sunday, July 12, 2009
பொன்னர்-சங்கர்: கருணாநிதி தொடங்கி வைத்தார்
முதல்வர் கருணாநிதி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவல் 'பொன்னர்-சங்கர்'.
கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த பொன்னர்- சங்கர் சகோதரர்களின் வீர வரலாற்றைச் சித்தரிக்கும் இந்த வீர காவியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகுந்த முக்கியம் வாய்ந்த பதிவாகப் பார்க்கப்படுகிறது.
கலைஞரை விமர்சிப்போரும் கூட போற்றிப் பாராட்டும் அளவு சிறப்பு பெற்றது பொன்னர் - சங்கர் நாவல்.
கொங்கு மண்டலத்தின் கலை, கலாச்சாரம், பண்பாட்டை மிக நுணுக்கமான முறையில் சித்தரித்திருப்பார் இந்த நூலில் கலைஞர்.
இந்த நாவலைப் படமாக்க பல இயக்குநர்கள் ஆர்வம் காட்டிய போதும், அந்த வாய்ப்பு நடிகர் தியாகராஜனுக்குக் கிடைத்துள்ளது. அவர் மகன் நடிகர் பிரசாந்த் பொன்னர்-சங்கர் ஆகிய இரு வேடங்களில் இந்தப் படத்தில் நடிக்கிறார்.
தியாகராஜன் தயாரித்து இயக்குகிறார்.
இந்த படத்தின் தொடக்க விழா வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடந்தது.
படப்பிடிப்பை முறைப்படி துவக்கி வைத்த கருணாநிதி, விழாவில் பேசியதாவது:
பொன்னர்-சங்கர் படத்தொடக்க விழா வள்ளுவர் கோட்டத்தில் நடப்பது மனதுக்கு இதம் தரும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடராக எழுதப்பட்ட வரலாற்று ஓவியம் நிழற்படமாக, பேசும் படமாக, பலரும் இதுபற்றி பேசும் படமாக வெளிவர இருக்கிறது என்பதை நண்பர்கள் எடுத்துரைத்தார்கள்.
இந்த படத்தில் பல கதாபாத்திரங்கள் உலா வர உள்ளன. ஒவ்வொரு பாத்திரத்தையும் ஏற்று நடிப்பவர்கள் தகுதியானவர்கள்-பண்பட்ட நடிகர்கள். அவர்களை எல்லாம் இணைத்து இயக்குனர் தியாகராஜன் இயக்குகிறார்.
ஏற்கனவே 2 வேடங்களில் ஜீன்ஸ் படத்தில் நடித்து பெரும்புகழ் பெற்றவர் பிரசாந்த். இந்த படத்தில் பொன்னராகவும், சங்கராகவும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
முன்பு நடித்ததை விட இந்த படத்தில் பெரும் புகழை ஈட்டி தருவானாரால் அதைவிட எனக்கு வேறு பெருமை இல்லை. பிரசாந்த் நல்ல நடிகர். படித்த இளைஞர். மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். இடைப்பட்ட காலத்தில் கலைத்துறையில் இருந்து ஒதுங்கி காணப்பட்டாலும் இந்த படத்துக்கு பிறகு கலை உலகம் அவரை முழுமையாக பயன்படுத்தியே தீரும். அத்தகைய கட்டாயத்தை இந்தப் படம் ஏற்படுத்தும்.
வள்ளுவர் கோட்டத்தின் பின்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை சுற்றி பார்த்தாலே புரிந்துவிடும், தியாகராஜன் தயாரித்து தரும் இந்த படம் எத்தனை பிரமாண்டமாக அமையும்....பெரும் வெற்றியை பெறும் என்று!
தியாகராஜன் நல்ல இயக்குனர். திறமையான கலைஞர். அவரது உழைப்போடு, ஒத்துழைப்போடு இந்த படத்தின் வெற்றி விழாவிலும் கலந்து கொண்டு வாழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன், என்றார் கருணாநிதி.
தலையூர் காளியாக நெப்போலியன்...
இந்த படத்தில் மத்திய அமைச்சர் நெப்போலியன் தலையூர் காளி என்ற முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் ராஜாவாக நடித்த முதல் காட்சி இன்று கருணாநிதி முன்னிலையில் படமாக்கப்பட்டது.
ஏவி.எம்.சரவணன் கிளாப் செய்ய கருணாநிதி கேமராவை இயக்கி வைத்தார். மேடையில் ராஜ கம்பீரத்தோடு நெப்போலியன் கேமிரா முன்பு தோன்றியதை அங்கு திரண்டு இருந்தவர்கள் கைதட்டி ஆராவரம் செய்தனர்.
ராஜ்கிரண்
பொன்னர்-சங்கர் படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிப்பவர் ராஜ்கிரண். கலைஞரே இவரைத்தான் அந்த குறிப்பிட்ட வேடத்துக்கு பரிந்துரைத்தாராம்.
சத்யராஜ், பிரகாஷ்ராஜ், பொன் வண்ணன், ரியாஸ்கான், மனோரமா, குஷ்பு, அம்பிகா, சீதா உள்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்.
விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன், பாக்யராஜ், அபிராமி ராமநாதன், ஏவி.எம்.சரவணன், ராஜ்கிரண் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்கள்
சானியா விருப்பப்படி 2011ல் திருமணம்
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் நிச்சயதார்த்தம் நேற்று நடந்து முடிந்தது. அவருக்கும், அவரது சிறுவயது தோழர் சோரப் மிஸ்ரா என்பவருக்கும் திருமணம் முடிவானது.
நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக சானியாவுக்கு ரூ. 20 லட்சம் பிரத்யேக ஆடை தயாரிக்கப்பட்டிருந்தது. பிரபல பேஷன் டிசைனர் சாந்தனு-நிகில் இந்த உடையை வடிவமைத்திருந்தனர். மணமகன் சோரப் இதை சானியாவுக்கு பரிசாக வழங்கினார்.
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் தேதி குறித்தும் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்து சானியாவின் தந்தை இம்ரான் மிர்ஸா கூறுகையில்,
எங்கள மத வழக்கப்படி சானியாவின் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக முடிந்தது. அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் டென்னிஸ் விளையாட வேண்டும் என விரும்புகிறார். அதனால் திருமணத்தை 2 ஆண்டுகளுக்கு பின் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அவரது விருப்பப்படி இரண்டு ஆண்டுகள் பின் தான் திருமணம் நடக்கும். அவர் அடுத்த மாத கடைசியில் துவங்கும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடுவார். சோரப் மிஸ்ராவும் தற்போது எம்பிஏ படிக்க இங்கிலாந்து செல்கிறார். அவரும் இரண்டு ஆண்டுகளில் படிப்பை முடித்துவிடுவார் என்றார் இம்ரான் மிர்ஸா.
புதிய வலைப்பதிவர்கள் தமது வலைப்பதிவில் followers வசதியை பெறுவது எப்படி.
இங்கே கிடைக்கின்ற HTML ஐ உங்கள் வலை பக்கத்தில் add widget இல் சேர்த்து விடுங்கள் இப்போ உங்கள் வலைப்பக்கத்திலும் followers....
இதில் இன்னுமோர் நன்மையும் இருக்கிறது நாம் ப்ளாக்கரில் இல்லாமல் வேறு இடங்களில் இருந்து Template download பண்ணி Template மாற்றுகின்ற பொழுது எமது வலைப்பதிவில் followers இல்லாமல் போகும் சந்தர்ப்பங்களில் எமது வலைப்பதிவில் ஏற்கனவே இருந்த followers இல்லையே என்று கவலைப்பட வேண்டியதில்லை. Google Friend Connect இல் எமது கணக்கின் மூலமாக உள் நுழைந்து இளந்த followers பெற முடியும்.
புதிய வலைப்பதிவர்கள் முயற்சி செய்து பாருங்கள்...
மயங்கி விழுந்தார் சோனா!
கவர்ச்சி நடிகை சோனா வெறும் வயிற்றுடன் நடனம் ஆடியதால், மயங்கி விழுந்தார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
சோனா அதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும் குசேலன்தான் அவரை தூக்கி விட்டது. இதையடுத்து தொடர்ந்து கவர்ச்சிகரமாக நடித்து வருகிறார் சோனா.
தற்போது வீர சோழன் என்ற படத்தில் கொய்யாப்பழ வியாபாரி வேடத்தில் நடிக்கிறார் சோனா. இதற்காக மானாமதுரை பகுதியில் பாட்டுப் பாடியபடி கொய்ப்பாழத்தை கையில் ஏந்தி சோனா விற்பது போல படமாக்கினர்.
சமீப காலமாக சோனா கடும் டயட்டில் இருக்கிறார். உடல் எடையைக் குறைப்பதற்காக இந்த டயட். மேலும், டான்ஸ் ஆடும்போதும் அவர் சாப்பிட மாட்டார். வெறும் ஜூஸ் மட்டும்தான் குடிப்பாராம்.
அதேபோல நேற்றும் கடும் வெயிலில், வைகை ஆற்றங்கரை ஓரமாக பாடலைப் படம் பிடித்தனர்.
அப்போது ஆடிக் கொண்டிருந்த சோனா திடீரென மயக்கம் போட்டு விழுந்து விட்டார். உடனே முகத்தில் தண்ணீரை அடித்து எழுப்பினர். டாக்டரை அழைத்து பரிசோதித்தபோது, வெறும் பசி மயக்கம்தான், வேறு ஒன்றும் இல்லை என்று கூறி அனைவரையும் நிம்மதியடைய வைத்தார்.
பின்னர் ரெஸ்ட் எடுத்த சோனா அதன் பின்னர் பாடல் காட்சியில் பங்கேற்று ஆடி முடித்தார்.
விண்டோஸ் 7 - கணினி திரையை தொட்டு இயக்கலாம்
இதன் படி கணினி திரையை தொட்டு இயக்கலாம்.
கணினியின் ஒரு பகுதியில் உள்ள தகவலை வேறொரு பகுதிக்கு நகர்த்துவதற்கு எமது கை விரலினால் அவற்றை தொட்டு இலகுவாக நகர்த்தலாம். இதற்கு விசைபலகையினதோ அல்லது சுட்டெலியினதோ உதவி தேவையேயில்லை
Thursday, July 9, 2009
ரஜினியை அழ வைத்த இயக்குநர்
நல்ல மெசேஜ் சொல்லும் படமோ, கமர்ஷியல் படமோ...ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டாலே அந்தப்படத்தின் இயக்குநரை அழைத்து பாராட்டுவது ரஜினியின் வழக்கம். அந்த மாதிரியான சமயங்களில் தனக்கு ஏதும் கதை வைத்திருக்கிறீர்களா என்று கேட்பதும் ரஜினியின் வழக்கம்.
இதனால் சில இயக்குநர்கள் ரஜினிக்கு கதை சொல்லியிருக்கிறேன் என்று பத்திரிக்கைகளில் சொல்லிவிடுவதால் சில காலங்கள் பாராட்டுவதை தவிர்த்து வந்தார். ஆனாலும் அவரால் ரொம்ப காலத்திற்கு அப்படி இருக்க முடியவில்லை.
நான் கடவுள் பார்த்துவிட்டு தமிழ்சினிமாவில் இப்படி ஒரு படம் இனி வருவதற்கு வாய்ப்பில்லை என்று பாராட்டித்தள்ளினார். வரிசையாக இன்னும் நிறைய படங்களை வாழ்த்தினார்.
தற்போது பசங்க படத்தை பார்த்துவிட்டு அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜை அழைத்து பாராட்டியிருக்கிறார்.
தனது படத்தின் வால் டீமோடு போய், வாயார பாராட்டுகளை வாங்கிய பாண்டிராஜ், அப்படியே ரஜினியை அழ வைத்துவிட்டார்.
சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த பாண்டிராஜ், ஏவிஎம் ஸ்டுடியோவில் வாட்ச் மேனாக வேலை பார்த்திருக்கிறார். சென்னைக்கு போயும் மகன் நல்லபடியாக வாழ வில்லையே என்ற ஏக்கத்தில் அவரது தாயார் இறந்துவிட்டாராம்.
பிறகு பாக்யராஜிடம் வேலைக்கு சேர்ந்து எப்படியோ முன்னேறி பட வாய்ப்பையும் பெற்ற பாண்டி, அந்த சந்தோஷத்தை அப்பாவிடம் சொல்லலாம் என்று போனால், அதை உணரவே முடியாத மனநோயாளி ஆகியிருந்தாராம் அவர்.
கவலையோடு சென்னை திரும்பிய பாண்டிராஜ் திரும்ப ஷ¨ட்டிங் போகும்போது அவரது அப்பா காணாமலேயே போயிருந்தார். எங்கெங்கோ தேடி அழைத்து வந்து வீட்டில் வைத்திருந்தாராம்.
ஆனால், இந்த நம்பிக்கையையும் ஏமாற்றிவிட்டு ஒரு நாள் இறந்தே போனார் இவரது அப்பா. ஊர் உலகமே எனது படத்தை பாராட்டுகிறது. நான் நன்றாக இருப்பதை அறியாமலே இறந்துவிட்டார்கள் எனது பெற்றோர் என்று பாண்டிராஜ் கண் கலங்க, அழுதே விட்டாராம் ரஜினி.
சிக்கலில் ஆயிரத்தில் ஒருவன்?
அந்த வகையில், 32 கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்ட புதுமையான படம் என செல்வராகவன் வர்ணித்த ஆயிரத்தில் ஒருவனை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பேச்சு.
கார்த்தி, ரீமா சென் ஆகியோர் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க பார்த்திபன், ஆண்ட்ரியா ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர்.
ஆனால், இந்தப் படம் வழக்கமான செல்வராகவன் டைப் காதல் படம் இல்லை என்பதே பல விநியோகஸ்தர்களின் குற்றச்சாட்டாக உள்ளதாம். (இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என இயக்குநரையே நிர்பந்திக்கும் விநியோகஸ்தர்களை இங்குதான் பார்க்க முடியும்!)
'சரித்திரப் படமாக ஆரம்பிக்கும் இந்தக் கதை, மக்களை எந்த அளவு கவரும் என கணிக்க முடியாததால், இந்த நெருக்கடியான சூழலில் இருக்கிற பணத்தைத் தொலைக்காமல் இருந்தால் போதும் என்ற முடிவோடு அமைதி காக்கிறோம்', என்றார் ஒரு விநியோகஸ்தர்.
இதனால் ஆடியோ வெளியாகி ஒருமாதமான பிறகும் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரனால் ரிலீஸ் குறித்து ஏதும் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை.
எனவே தனது சிறிய பட்ஜெட் படமான வாமனனை இப்போதைக்கு ரிலீஸ் செய்யும் தீவிரத்தில் உள்ளார் ரவீந்திரன்.
இருக்கிற டிவி சேனல்களும் படத்தை அடிமாட்டு விலைக்கு கேட்பதால் சொந்தமாகவே ரிலீஸ் செய்யலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.
நமீதாவே உன்னை நம்பி...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே ராஜேஸ்வர் இயக்கியிருக்கும் படம் இந்திரவிழா. இதில் நாயகனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக ஹேமமாலினி களமிறங்கியுள்ளார்.
ஹேமமாலினி இருந்தாலும் கூட நமீதாவின் கவர்ச்சி எல்லை கடந்த தீவரவாதம் போல படு உக்கிரமாக இருக்கிறதாம். கவர்ச்சியில் நமீதாவுடன் மல்லுக்கட்டும் அளவு ஆடைக் குறைப்பு புரட்சி செய்துள்ளாராம் ஹேமமாலினி. ஆனாலும் நமீதாவின் கவர்ச்சிதான் இந்தப் படத்துக்கு சகலமுமாக இருக்கிறது.
படத்தின் விளம்பர டிசைன்கள், பேனர்கள், கட் அவுட்டுகளில் தம்தூண்டு ட்ரெஸ்ஸில் நமீதா கிக்காக போஸ் கொடுக்கும் ஸ்டில்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
கெளரவ நடிகர் ரேஞ்சுக்கு சின்ன ஸ்டாம்பு சைசில் கதாநாயகனின் படத்தைதப் போட்டு வைத்துள்ளனர். சில போஸ்டர்களில் அதையும் காணோம்.
படத்தின் முக்கால்வாசி காட்சிகளில் நமீதாவுக்கு நீச்சலுடைக்கு சமமான காஸ்ட்யூம் மட்டும்தான் என்பதால், கவர்ச்சிப் பிரியர்கள் கல்லாவை நிரப்பி விடுவார்கள் என நம்புகிறார் ராஜேஸ்வர்.
'இனி அல்லாரும் மச்சான்ஸ்...!'
இதற்கிடையே, இனிமேல் நடிகை நமீதா ஆண்களை அண்ணா என்று அழைக்க மாட்டாராம். மாறாக காதுகள் இனிக்கும் வகையில் மச்சான்ஸ் என்றுதான் அழைக்கப் போகிறாராம்.
சிவாஜி கணேசன் தனது ரசிகர்களை பிள்ளைகளே என்று அன்பாக அழைப்பார். ரஜினியோ கண்ணா என்பார். விஜய்யோ 'ண்ணா' என்பார்.
இப்படிப்பட்ட தமிழ் சினிமா பரம்பரையில் வந்தவரான நமீதா தனது ரசிக மக்களை, குறிப்பாக ஆண்களை மச்சான்ஸ் என்று எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக கூப்பிட்டு வருகிறார். இருப்பினும் படப்பிடிப்புத் தளத்தில் மட்டும் சிலரை அண்ணா என்று அவர் அழைப்பதாக அப்படி அழைக்கப்பட்டவர்கள் மன வருத்தம் அடைந்ததாக செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் அவர்களின் மனம் குளிரும்படியான ஒரு செய்தியை அவிழ்த்து விட்டுள்ளார் நமீதா.
எனக்கு ஆண்கள் அனைவருமே மச்சான்ஸ்தான். யாரையும் அண்ணா என அழைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் நமீதா.
ஜெகன்மோகினி படப்பிடிப்பின்போது, தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் நமீதா பேசுகையில், வடிவேலு சார் காமெடி எனக்கு மிகவும் பிடிக்கும். நான்தான் இப்படத்தில் வடிவேலு சாரும் கண்டிப்பாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
ஆனால், அண்ணன், தங்கை வேடத்தை எங்களுக்குக் கொடுக்காதீர்கள், காமடியாக வையுங்கள் என்று கூறியிருந்தேன். இருந்தாலும் இப்படத்தில் எனக்கு அண்ணனாகத்தான் அவர் வருகிறார்.
ஆனால் அவரை அண்ணா என்று நான் அழைக்க மாட்டேன். சார் என்றுதான் கூப்புடுவேன். என்னைப் பொருத்தவரை ஆண்கள் எல்லோருமே எனக்கு மச்சான்ஸ்தான். யாரையும் அண்ணா என கூப்பிட மாட்டேன்.
எனக்குக் கல்யாணமாகும் வரை எனது உடலை அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் வைத்துக் கொள்ளும் கடமை எனக்கு உள்ளது. கல்யாணத்தை ரகசியமாக நடத்த மாட்டேன். எல்லோரையும் கூப்பிட்டு விருந்து வைப்பேன் என்று கூறுகிறார் நமீதா.
நமீதாவின் இந்த இனிப்பான செய்தி வந்த நாள்தான் ரசிகர்களுக்கெல்லாம் இனிய நாள்...
அடுத்த ஆண்டில் கூகிள் ஆபரேடிங் சிஸ்டம் -கூகிள் அறிவிப்பு
கூகிள் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது .அடுத்த ஆண்டு நடுவில் கூகிள் (Chrome OS) ஆபரேடிங் சிஸ்டம் வெளியிடுகிறோம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.ஓபன் சோர்ஸ் முறையில் அந்த (os) இயங்கும் என்று அறிவிக்க பட்டுள்ளது.மேலும் இந்த புதிய (os)லைட் வெயிட் ஆகா இருக்கும் லினக்ஸ் கெர்னலை அடிபடையாக கொண்டு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் புதிய ப்ராஜெக்ட் கூகிள் (android) லிருந்து வித்யாசபடும் என்றும் அறிவித்துள்ளது .
புதிய இயங்குதளம் மூலம் இணையம் தொடர்பான சேவைகளை உடனடியாக பெறமுடியும் என்றும் .மேலும் வைரஸ் போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்கும் வகையில் இந்த இயங்கு தளம் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இந்த இயங்குதளத்தின் முக்கிய குறிக்கோள் வேகம்,பாதுகாப்பு,எளிமை. அதாவது இந்த புதிய (os) இயக்குவதற்கு வேகமாகவும் ,வைரஸ் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பாவும் ,பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும் இருக்கும்.இந்த இயங்கு தளம் இணையத்தை அடிபடையாக கொண்டு இயங்கும் என்றும் அதனால் ஏற்கனவே உள்ள இணையம் தொடர்பான (web based applications)மென் பொருட்கள் எந்த மாற்றமும் செய்யாமல் இதில் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடுவில் (netbooks)இக்கு கூகிள் கிரோம் (0s)வெளியிடப்படும் பின்பு ஆல்பா பதிப்பு வெளியிட்டு பல்வேறு விதமான சோதனைகள் மேற்கொள்ள படும் என்று கூறியுள்ளது .
கூகுளின் இந்த அதிரடி அறிவிப்பால் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும் கூகுளுக்கும் கடும் போட்டி நிலவும்.கூகுளின் சவாலை மைக்ரோசாப்ட் சமாளிக்குமா ? என்பதை பொறுத்து இருந்து பார்போம் .
மேலும் தகவல்களுக்கு கூகுளின் ப்ளாக் சென்று பார்க்கவும்.
-http://googleblog.blogspot.com/2009/07/introducing-google-chrome-os.html
ரஹ்மானுக்கு டாக்டர் பட்டமளித்து கவுரவித்த லண்டன் பல்கலைக்கழகம்
சர்வதேச திரையுலகில் இந்தியாவை தலைநிமிரச் செய்த ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மானுக்கு பிரிட்டனின் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம் நேற்று டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
இசைத் துறையில் ரஹ்மான் செய்துள்ள அபார சாதனைகளுக்காக இந்த பெருமைக்குரிய விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இதற்கான விழா லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் விமரிசையாக நடந்தது.
மிடில்செக்ஸ் பல்கலைக் கழக துணைவேந்தர் ரஹ்மானுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். இந்த விருதினைப் பெறும் அளவுக்கு ரஹ்மான் என்னென்ன சாதனைகள் புரிந்தார் என்பதையும் பல்கலைக் கழகம் சிறு கையேடாகவே வழங்கியிருந்தது.
விழாவில் சென்னையிலிருந்து ஆடியோ மீடியா நிறுவனத்தைச் சேர்ந்த செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழா நிறைவில், மிடில்செக்ஸ் பல்கலைக் கழக துணைவேந்தர், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் ரஹ்மானுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஆஷஸ்:பாண்டிங், காடிச் சதம்-ஆஸி. பதிலடி
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் கார்டிப் நகரில் நடக்கிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து, துவக்கத்திலே பிளின்டாபின் விக்கெட்டை இழந்தது. அவர் 37 ரன்களுக்கு அவுட்டானார். ஆண்டர்சன் 26, பிராட் 19 ரன்கள் எடுத்தனர்.
கடைசிநேரத்தில் களமிறங்கிய சுவான் அதிரடியாக பேட் செய்தார். அவர் 40 பந்தில் 47 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து 106.5 ஓவரில் 435 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
அடுத்து பேட் செய்த ஆஸ்திரேலியாவுக்கு ஹக்ஸ், காடிச் ஜோடி சிறப்பான துவக்கம் தாந்தது. ஹக்ஸ் 36 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்த வந்த பாண்டிங், காடிச்சுடன் இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை விளாசி தள்ளியது. இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இருவரும் சதம் கடந்த அசத்தினர். இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 71 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. காடிச் 104, பாண்டிங் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Sunday, July 5, 2009
கவிஞரைக் காய்ச்சிய 'பேனாக்கள்'!
இந்தப் படத்துக்காக ஒரு பிரஸ் மீட் வைத்திருந்தார்கள்.
இன்னமும் ஆரம்பிக்கப்படாத இந்தப் படம் குறித்து தபூ சங்கர் ஏக பில்ட்அப் கொடுக்க, டென்ஷனான மூத்த செய்தியாளர்கள் சிலர் கேள்விகளால் காய்ச்சி எடுத்துவிட்டார்கள் தபூ சங்கரை.
சரி... இந்த தலைப்புக்கு என்னங்க அர்த்தம்?, என ஒரு மூத்த நிருபர் கேட்க, தபூவுக்கு கோபம் வந்துவிட்டது. சார், அது கவிதைங்க. அதுக்கெல்லாம் அர்த்தம் கேட்டா எப்படி? என்றார்.
நீங்க வெச்ச தலைப்புக்கே உங்களுக்கு அர்த்தம் சொல்லத் தெரியலியே... இந்தப் படத்தை சாதாரண ஜனங்களும் விளங்கிக்கிற மாதிரி எப்படி எடுக்கப் போறீங்க? - இது இன்னொரு நிருபர்.
சரி... இந்தப் படம் எப்படி இருக்கும் என்றாவது சொல்ல முடியுமா? என ஆரம்பித்தார் அடுத்த நிருபர்.
அதற்கு தபூ சங்கர், 'இது சேரன் படம் மாதிரி இருக்கும்'என்றார்.
உடனே குறுக்கிட்ட இன்னொருவர், 'அவர் படமே ஓட மாட்டேங்குது... இதுல அவரை மாதிரி படமெடுக்க நீங்க வந்துட்டீங்களா...சசிகுமார் படம் மாதிரி இருக்குமாங்க?' என்றார் நக்கலாக.
தபூ சங்கருக்கு கோபம் வந்துவிட்டது. ஆத்திரத்தில்,
'சசிகுமாரெல்லாம் இப்ப வந்தவருங்க. அவர்கூட என்னை கம்பேர் பண்ணாதீங்க. சேரன் எவ்வளவு சக்ஸஸ் கொடுத்தார்? அருமையான படங்களைக் கொடுத்த அவரைப் போன்ற ஒரு படைப்பாளி நான்...' என தம் கட்டி பேசிக் கொண்டிருக்க, கலைந்தது நிருபர் கூட்டம்!
ஜெயிக்கிறவங்களுக்குதான் சினிமா சொந்தம்னு விளங்க வைக்கும் பொறுமை நிருபர்களுக்கும் இல்லை, விளங்கிக் கொள்ளும் மனநிலையில் தபூ சங்கரும் இல்லை!
மைக்கேல் ஜாக்சனுக்கு 25,000 டாலர் செலவில் சவப்பெட்டி
தி புரோமெதியான் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சவப்பெட்டி தங்க முலாம் பூசப்பட்டதாகும். வெண்கலத்தால் ஆன அந்த சவப்பெட்டியின் உள்ளே வெல்வெட் விரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடம்பர சவப்பெட்டியை ஜாக்சனின் சொந்த மாகாணமான இன்டியானாவைச் சேர்ந்த பேட்ஸ்வில்லி காஸ்கட் கம்பெனி என்ற நிறுவனம் தயாரித்துக் கொடுத்துள்ளது.
ஜாக்சனின் உடல் அடக்கம் நாளை மறு நாள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளன.
கூகிள் குரோம் இப்பொழுது தமிழில்
கூகிள் குரோம் 2.0 இப்பொழுது 8 இந்திய மொழிகளில் வந்துள்ளது அவை தமிழ், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தரவிறக்கம் செய்து கொள்ள்லாம்.
கூகிள் குரோம் தமிழில் தரவிறக்கம் செய்ய முதலில் கூகிள் குரோம் இணைய பக்கத்திற்கு சென்று கீழே காண்பிக்கப்பட்டுள்ள் படத்தை போல் தமிழ் மொழியை தேர்வு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூகிள் குரோம் மெனு
கூகிள் குரோமின் அம்சங்கள்
Google Chrome என்பது, வலையை வேகமாக, பாதுகாப்பாக மற்றும் எளிதாக அணுகுவதற்கு உதவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் குறைந்தபட்ச வடிவமைப்பையும் ஒருங்கே கொண்டுள்ள ஓர் உலாவியாகும் மேலும் தமிழில் படிக்க .
கூகிள் குரோம் உலாவியை கட்டமைத்தற்கான காரணத்தைப் பற்றி:
Google இல் பெரும்பாலான நேரம் உலாவியிலேயே நாங்கள் செலவிடுகிறோம். தேடுவது, அரட்டையடிப்பது, மின்னஞ்சலனுப்புவது மற்றும் ஒருங்கிணைவது ஆகிய அனைத்தையும் ஓர் உலாவியில் செய்கிறோம். உங்கள் எல்லோரையும் போலவே, எங்கள் ஓய்வு நேரத்தில் ஷாப்பிங், வங்கிப் பணிகள், செய்திகள் படிப்பது மற்றும் நண்பர்களிடம் பேசுவது போன்றவற்றைச் செய்கிறோம் – இவை அனைத்தும் ஓர் உலாவியைப் பயன்படுத்தியே செய்கிறோம். மக்கள் ஆன்லைனில் செலவிடும் நேரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது, மேலும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வலை உருவான போது கற்பனை செய்தும் பார்க்காத விஷயங்களை இப்போது செய்கிறார்கள் மேலும் தமிழில் படிக்க.
வலை டெவலப்பர்களுக்கான தகவல்
இணையப் பயனர்களுக்கு இன்றைய நிலையில் Firefox, Safari, Opera, இப்போது Google Chrome உட்பட, பலவகையான வலை உலாவிகளைத் தேர்வுசெய்யும் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் வலைப்பக்கங்கள் ஒவ்வொரு உலாவியிலும் வெவ்வேறு விதமாக தோற்றமளிக்கின்றன மற்றும் செயல்புரிகின்றன. எனவே நீங்கள் வடிவமைத்த அமைப்பிலேயே, உங்களுடைய அனைத்து பயனர்களும் வலைப்பக்கங்களைக் காண்கிறார்கள் என்பதை உறுதி செய்ய, அனைத்து உலாவிகளிலும் உங்கள் தளத்தைச் சோதிக்க வேண்டியது அவசியம் மேலும் தமிழில் படிக்க.
நாடோடிகள்.. சாதனை மேல் சாதனை!!
ரசிகர்கள் ஆர்ப்பரிப்பிலும் வசூலிலும் திரையரங்குகள் அதிர்வது ஒருபக்கம் (ஒரு வார கலெக்ஷன் ரூ.4 கோடி என்கிறது கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ்!!)... இந்த வாரம் மட்டும் 20 கூடுதல் பிரிண்டுகள் போடப்பட்டுள்ளன. 26 திரையரங்குகளில் கூடுதலாகத் திரையிடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் ஒரே ஒரு காட்சியாக மட்டும்தான் இந்தப் படத்தை சத்யம் திரையரங்கில் (அதுவும் சிறிய அரங்கில்) வெளியிட்டனர். படத்தின் வசூலைப் பார்த்ததும், இப்போது பெரிய அரங்கில் கூடுதல் காட்சிகளுடன் கலக்கிக் கொண்டிருக்கிறது நாடோடிகள்.
மறுபக்கம் இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பு செலவை விட அதிகமாம் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ள விலை என்கிறார்கள் சில தயாரிப்பு நிர்வாகிகள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி தெலுங்குப் பதிப்பைத் தயாரித்த பெல்லம்கொண்டா சுரேஷ்தான் இந்தப் படத்தையும் வாங்கியுள்ளார்.
இன்னொன்று நாடோடிகளின் தொலைக்காட்சி உரிமையை ஜீ நிறுவனம் பெற்றுள்ளது. ரூ.1.30 கோடிக்கு பேசி முடித்து, சன் - கலைஞர் தொலைக்காட்சிகளை மலைக்க வைத்துள்ளனர் ஜீ நிறுவனத்தினர்.
எப்பூடி!
Thursday, July 2, 2009
AVI கோப்புகளை MP4 கோப்புகளாக மாற்ற
AVI கோப்புகளை MP4 ஆக மாற்றுவதற்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் Convert AVI to MP4. இதன் மூலம் WMA, MOV, MPEG1 / MPEG2, DivX ஆகிய பல்வேறு விதமான கோப்பு வடிவங்களை MP4 ஆக மாற்ற முடியும்.
மிகஎளிமையான முகப்பைக் கொண்ட மென்பொருள் இது. இது Windows XP மற்றும் Windows Vista இந்த இயங்குதளங்களில் இயங்கும்.