Sunday, June 28, 2009
கருணாநிதி ஓய்வெடுத்தால் கேஸ் போடுவோம் - விவேக்
கருணாநிதி கதை வசனம் எழுதும் நீயின்றி நானில்லை படத்தின் துவக்க விழா நேற்று சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது.
இந்த விழாவில் தமிழ் நடிகர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
ஏவிஎம் ஏசி ப்ளோருக்கு வெளியே பெரிய பந்தல் அமைக்கப்பட்டு அதனுள் மேடை போட்டிருந்தார்கள். விழாவில் பங்கேற்ற நடிகர் விவேக் பேசியதாவது:
"இந்த படத்தில் நானும் நடிக்க வேண்டும் என்று கலைஞர் விரும்புவதாக தயாரிப்பாளரும் டைரக்டரும் சொன்னார்கள். என் கேரக்டர், கதை போன்ற விவரங்களை கேட்டேன். எங்களுக்கு தெரியாது. முதல்வருக்குத்தான் தெரியும் என்றனர். எல்லாமே முதல்வருக்குத்தான் தெரியும் என்று அவர்கள் கூறியதால், ஸ்டண்ட் மாஸ்டர் யார் என்றேன் சும்மா கோத்து வாங்கலாம் என்ற எண்ணத்தில். அதற்கும் முதல்வர்தான் என்று அவசரத்தில் சொல்லிவிட்டு சமாளித்தார்கள்.
உண்மையில் கலைஞரும் 'சூப்பர் பைட் மாஸ்டர்'தான். அரசியலில் ஆரம்பித்து, இன்று வணங்காமண் கப்பல் இலங்கை சென்று சேரும் வரையில் எவ்வளவோ போராட்டங்களை சந்திக்கிறார்.
சினிமாவில் ரோப் கட்டி சண்டையிடுகின்றனர். அவர் 'ஹோப்' (நம்பிக்கையை) வைத்து போராடுகிறார். அதன் மூலம் எவ்வளவோ சாதித்து இருக்கிறார். வசனங்களை நீட்டியும் சுருக்கியும் சொல்ல அவரால்தான் முடியும். பராசக்தியில் ரங்கூனில் இருந்து வரும் சிவாஜி கணேசன் பிச்சை கேட்பவனை பார்த்து, 'தமிழ் நாட்டின் முதல் குரலே இப்படி இருக்கிறதே...' என்று நறுக்கென வசனம் பேசியது கலைஞரால் மட்டுமே செய்யக்கூடியது.
கலைஞர் ஒரு அரசு ஊழியர். அவருக்கு அரசு ஊழியர்களுக்குள்ள அத்தனை சலுகைகளும் உண்டு. ஒரே ஒரு சலுகையை தவிர. அந்தச் சலுகையை அவர் பெற்றால் நாம் அனைவரும் கேஸ் போடலாம். அந்தச் சலுகை 'ஓய்வு ஊதியம்' பெறுவது. அவருக்கு ஓய்வே கிடையாது. அப்படி ஓய்வு கேட்டால் நாங்கள் கேஸ் போடுவோம்...", என்றார்.
கமல்ஹாஸன்... ஆயுள் கால பேனா!
பின்னர் கமல்ஹாஸன் பேசியதாவது:
நான் ஒரு தடவை வெளிநாடு சென்றபோது ஆயுள் காலத்துக்குள் பயன்படக்கூடிய ஒரு பேனா பற்றி விளம்பரப்படுத்தி இருப்பதை பார்த்தேன். அதை கலைஞருக்கு வாங்கி தரலாமா என்று யோசித்தேன். ஆனால் அவருக்கு அது தேவையில்லை. நீண்ட காலமாக அவர் எழுதிக்கொண்டிருக்கிறார். எழுதுவதற்கு மை மட்டும் போதாது. அறிவும் வேண்டும்.
கலைஞர் எழுத்துக்களில் ஒளி வீசுகிறது. கலைஞர் வசனம் பேசித்தான் இந்த சினிமாவுக்கே வந்தேன். நடிக்கச் சொல்லி கேட்பவர்களிடம் அவர் வசனத்தை பேசித்தான் நடித்துக் காட்டி இருக்கிறோம். இன்னமும் அவரது பேனா எங்களுக்காக எழுத வேண்டும். கலை உலகில் தொடர்ந்து கோலோச்ச வேண்டும், என்றார்.
சூர்யா...
நடிகர் சூர்யா பேசியதாவது:
என்னுடைய நேருக்கு நேர் படத்தை கலைஞர் பார்த்து வாழ்த்தினார். அந்த வாழ்த்துக் கடிதம் என்னை இந்த அளவு உயர வைத்திருக்கிறது. தினமும் அவர் 16 மணி நேரம் உழைக்கிறார். வீட்டு வேலைகளை கூட சிறிது நேரம் நம்மால் செய்ய முடியவில்லை.
ஆனால் அவர் மக்களுக்காக, மாவட்டத்துக்காக, மாநிலத்துக்காக எவ்வளவோ காரியங்களை செய்வது ஆச்சரியமாக உள்ளது. அவரிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. அவரால் திரை உலகம் பிரகாசமாக இருக்கிறது. இனி கலைஞறின்றி தமிழ் சினிமா இல்லை, என்றார்.
பெயரைச் சொல்கிறார்களே... மனோரமா
நடிகை மனோரமா பேசியதாவது:
எதிர்க்கட்சிகளில் இருப்பவர்களுக்கு மனசாட்சியே கிடையாதா... திரும்ப திரும்ப கலைஞரை பெயர் சொல்லி அழைக்கிறார்களே... அவர் வயசுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா...
கலைஞர் நாடகங்களில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். தி.மு.க. மேடை நாடகங்களில் அவர் கதாநாயகனாகவும் நான் கதாநாயகியாகவும் நடித்துள்ளோம். அவர் காங்கிரஸ்காரராக வருவார். நான் தி.மு.க. பெண்ணாக வந்து அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லி அவரை தி.மு.க.வுக்கு மாற வைப்பேன். அந்த நினைவுகள் இன்னும் என் மனதில் உள்ளன, என்றார்.
கனிமொழி எம்.பி., ராமநாராயணன், ஏ.வி.எம். சரவணன், சிவக்குமார், வி.சி. குகநாதன் ஆகியோரும் வாழ்த்திப் பேசினார்கள்.
விழாவில் கலைப்புலி சேகரன், இசையமைப்பாளர் தேவா, டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரன், தயாரிப்பாளர்கள் முரளிதரன், சிவசக்தி பாண்டியன், காஜா மொய்தீன், அன்பாலயா பிரபாகரன், பெப்சி முரளி, கே.எஸ். சீனிவாசன், எடிட்டர் மோகன், டைரக்டர் அரிராஜன், நடிகைகள் ஜெயதேவி, கார்த்திகா, முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
டைரக்டர் இளவேனில் வரவேற்றார். தயாரிப்பாளர் ஆறுமுகனேரி எஸ்.பி. முருகேசன், ஜெய முருகன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.
விழா ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் சிறப்பாக செய்திருந்தார்.
முன்னதாக வடபழனி நூறடி ரோட்டில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பெப்சி அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.tamiol, cinema, karunanithi, vivek
பென் டிரைவ் உஷார் மேட்டர்!
ஹலோ
"ஹலோ ..." ன்னு தூரத்திலிருந்து சத்தம் கேட்டவுடன் .."நம்மள எவண்டா கூப்பிடரவன்னு" திரும்பி பார்த்தா " எக்ஸ்கியுஸ் மீ சார் ..ஒன் மினிட் ப்ளீஸ்! அப்படின்னு டிப் டாப்பா ஒரு ஆள் என்னை நோக்கி வந்துகொண்டு இருந்தான்.
"சார் நான் ஒரு சேல்ஸ் மேன். என்கிட்ட பென் டிரைவ் நிறைய இருக்கு எல்லாமே 32 ஜி பி..
வெல ஒன்னும் அதிகமில்லை ஜஸ்ட் ஐந்நூறு ரூபா தான்" அப்படின்னான்!
என்னாது 32 ஜி பி யா ?
என்கிட்ட இருக்கிற லாப்டாப்பே நாப்பது ஜி.பிதான் தமாந்தூண்டு மெமரி ஸ்டிக்கு முப்பத்திரண்டு ஜி பி யா ? எத்தன படம் ,,எத்தன பிச்சரு எத்தன டேட்டா சேவ் பண்ணலாம்னு அப்படின்னு வாய திறந்துக்கிட்டு யோசித்துக்கொண்டிருக்கும் போதே என் பிரண்டு ஒருத்தன் "இருநூத்தி ஐம்பது ரூபான்னா வாங்கறோம்" அப்படின்னு பாதியாக குறைத்தான்.
அதிக பேரம் பேசாமல் டீலுக்கு ஒத்துக்கிட்டான்....
என்கூட இருந்த ஜுனியர் ஒருத்தன் "சார் இது வொர்க் ஆகுமா ஆகாதான்னு செக் பண்ணனும்னு" சொன்னதுதான் தாமதம் ...
"எட்றா லேப்டாப்பை சொருகுடா பென் டிரைவை" ன்னு செக் பண்ணா வெரி நைஸ்! வொர்க் ஆகுது.. :)
டேட்டாவை உள்ளேயும் வெளியவும் இழுத்து போட்டுபார்த்தா சும்மா கலக்கல்..
இன்னியோட இந்த ஒரு ஜி பி ரெண்டு ஜி பி பென் டிரைவை எல்லாம் சீண்டக்கூட மாட்டேன்னு, ஆசை ஆசையா இந்த 32 ஜி பி பென் டிரைவ் ஐ யூஸ் பண்ணேன்.
எங்க ஆபிசுல இருக்கறவங்க எல்லாம் என்கிட்ட கோபப்பட்டாங்க ஏன் எனக்கு ஒன்னு வாங்கலன்னு !
நான் சொன்னேன் "அவன் யாரோ எவனோ தெரியாது ..நாங்கல்லாம் .ஆபீஸ் முடிஞ்சி எங்க ஏரியாவில் இருக்கிற ஓர கடையில தம்மு பத்த வச்சிக்கிட்டு இருக்கும்போது ஒருத்தன் வந்து வித்துக்கிட்டு இருந்தான் அவன் அட்ரஸ் எல்லாம் கேட்கல .. வெரி சாரி" அப்படின்னுட்டேன்..
மறுபடியும் அவன பார்த்தா ..உங்க எல்லாத்துக்கும் வாங்கி வைக்கிறேன் ..மனச தேத்திக்குங்க மக்களேன்னு கர்வத்துடன் சொன்னேன்..
ஒவ்வொரு நாள் காலையிலும் எங்க ஆபிசுல இருப்பவர்கள் "அவன் கிடைச்சானா ..அவன் கிடைச்சானா " ன்னு ஒரே தொல்லை ...நானும் அந்த ஏரியா பூரா தேடி பார்த்துட்டேன் ஆளே அகப்படலன்னு! ஒரு பிட்ட போட்டுட்டு ஒவ்வொரு முறையும் எஸ்கேப் ஆகிடுவேன்
இதெல்லாம் எத்தன நாளைக்கின்றீங்க ...
வெறும் ஏழு நாள்தான் .
இப்பல்லாம் பென் டிரைவ் உள்ள இருந்த அத்தனை மேட்டரும் கரப்ட் ஆகுது .
எப்ப கரப்ட் ஆகும்ம்னு கணிக்க முடியல..... பார்மெட் பண்ணி உபயோகிக்கனும்....பிறகு மறுபடியும் கரப்ட் ஆகும் திரும்பவும் பார்மெட் ...SH** too hectic :(
இதனாலேயே மிக முக்கியமான டேட்டாக்களை உள்ளே வைப்பதில்லை
இதுக்கு முன்ன இருந்த அந்த ஒன் ஜி பி பென் டிரைவை தேடி கண்டு பிடிப்பதற்குள் போதும் போதும்ம்னு ஆயிடிச்சி .
இப்பவும் எங்க ஆபிசுல இருப்பவர்கள் கேட்கிறாங்க பென் டிரைவை விக்கிறவன்
கிடைச்சானான்னு..
ஆனா இந்த முறை உண்மையை சொன்னேன் "நானும் அந்த ஏரியா பூரா தேடி பார்த்துட்டேன் ஆளே அகப்படலன்னு!"....
thumbs.db என்றால் என்ன ?
இரண்டும் இல்லை, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 (SP4) விண்டோஸ் 2003 இவைகளில் சில டைரக்டரிகளில் இந்த பைல் தென்படும். இது அந்தந்த போல்டர்களில் படங்கள் இருந்தால் அதனை தம்ப்நெயிலாக(Thumbnail) கேச் செய்து வைத்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை.
இதன் மூலம் விண்டோஸ் அந்த போல்டரில் உள்ள பைலின் தம்ப்நெயில் வியூவை எக்ஸ்புளோரரில் ஒவ்வொருமுறையும் அந்த பைலை படித்து பின் காட்டுவதற்கு பதிலாக இந்த பைல் முலம் உடனே காட்டுகிறது. விஸ்டாவில் இப்படி தனித்தனியாக அந்தந்த போல்டரில் இல்லாமல் மொத்தமாக ஒரே பைலாக சிஸ்டம் போல்டரில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்த பைலின் ஒரே பிரச்சினை வன்தட்டில் சிறிது இடத்தை எடுத்து கொள்வதே. இது மிகச்சிறிய அளவே ஆனாலும், நிறைய போல்டர்களில் இருப்பதை கணக்கிட்டால் ஒரளவு இடம் எடுத்திருப்பது தெரியவரும். இதனை குறைந்த வன்தட்டு இடம் கொண்டிருப்பவர்கள் நீக்க நினைத்தால் கீழே உள்ளதை செய்து பாருங்கள்.
முதலில் thumbs.db வருவதை தடுக்க
1) மை கம்ப்யூட்டடை கிளிக் செய்து அதில்
2) டூல்ஸ் என்பதை மெனுவில் தேர்ந்தெடுத்து
3) அதில் போல்டர் ஆப்சன் என்பதை சொடுக்கி
4) அதில் வியூ டேப் என்பதில்
5) "Do not cache thumbnails" என்பதை செக் செய்ய வேண்டும்.
6) பின்னர் ஒ.கே கொடுத்து
7) மை கம்ப்யூட்டரை கிளிக் செய்ய வேண்டும்.
ஏற்கெனவே உருவாக்கப்ப்ட்ட அனைத்தையும் நீக்க
1) ஸ்டார்ட் மெனு சென்று
2) அங்கு உள்ள சேர்ச் என்பதை கிளிக் செய்து
3) பின்வருவதில் All Files and Folders என்பதை தெரிவு செய்து
4) "all or part of the file name" என்பதில் thumbs.db என்று டைப் செய்து
5) Look in box, ல் Local Hard Drives என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
6) தேடலை ஆரம்பித்த பின் ஒரு பெரிய லிஸ்ட் வரும்
7) எடிட் மெனுவில் உள்ள செலக்ட் ஆல் பைல் என்பதை கிளிக் செய்து
8) பின்னர் பைல் என்பதில் டெலிட் கமண்ட்டை அழுத்தி, எல்லாவற்றையும் நீக்க வேண்டும்.
9) பின்னர் சேர்ச் விண்டோவை மூடி விடலாம்.
ஏதாவது தவறுகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். இந்தப்பதிவைப் பற்றிய உங்கள் கருத்தையும் பதிந்து செல்லுங்கள்.
thanks-கார்த்திக்
தனுஷின் ஆடுகளம்: த்ரிஷா விலகல்?
பெரும்பாலும் தெலுங்குப் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார் த்ரிஷா. தமிழில் சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா எனும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும்போது த்ரிஷாவுடன் சிம்பு மிகவும் நெருக்கமாகி விட்டதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வந்தன.
வழக்கம்போல சிம்பு மவுனம் காக்க, த்ரிஷா மட்டும் மழுப்பலாக பதில் கூறி வருகிறார். வதந்திகள் எனக்குப் புதிதல்ல என்றும், சிம்புவுடன் காதலா இல்லையா என்று சொல்ல மாட்டேன் என்றும் கூறிவருகிறார் த்ரிஷா.
இந்த நிலையில், தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் த்ரிஷா. இந்தப் படத்திலிருந்து இப்போது விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.
தனுஷுடன் நடிப்பதை சிம்பு விரும்பாததால்தான் த்ரிஷா விலகி விட்டார் என்றும் சிலர் கூறுகின்றனர்.
ஆனால் இன்னொரு தரப்போ, ஆடுகளம் படம், முழுக்க முழுக்க மதுரையில் 6 மாதம் தங்கியிருந்து நடிக்க வேண்டிய படம்.
மதுரையின் புழுதியில் புரண்டும், வெயிலில் காய்ந்தும் 'ரியலிஸ்டிக்காக' நடிக்க வேண்டியிருக்கும் என்றும், இந்த ரிஸ்க் எடுக்க விரும்பாததாலேயே அவர் விலகி விட்டார் என்றும் கூறுகின்றனர்.
மேலும் த்ரிஷாவுக்கு கைவசம் பெரிய படங்கள் பல உள்ளதாம். குறிப்பாக ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய்குமாருடன் நடிக்கும் இந்திப்படம் வேறு இந்த லிஸ்டில் புதிதாக இடம்பெற்று விட்டதால் தனுஷ் படத்தை தொங்கலில் விட்டுவிட்டார் த்ரிஷா என்றும் கூறப்படுகிறது.
தாயின் `செக்ஸ்’ படத்தை விற்ற மகள்
கனடாவின் ஒன்டாரியா பகுதியை சேர்ந்த 19 வயது பெண், தனது தாயின் படுக்கை அறையில் இருந்த கேமரா ஒன்றை 8 ஆயிரம் ரூபாய்க்கு ஒருவரிடம் விற்றார். இது அவருடைய தாயாருக்கு தெரியாது. அந்த கேமராவுக்குள் அந்த பெண்ணின் தாயும் அவருடைய காதலரும் விதம் விதமான கோணங்களில் எடுத்துக்கொண்ட `செக்ஸ்’ உறவு பட `டேப்’ இருந்து இருக்கிறது.
கேமராவை வாங்கியவர் அந்த செக்ஸ் பட டேப்பை தனது நண்பர் மூலம் நகரம் முழுவதும் வலம் வரச்செய்துவிட்டார். தாயின் காதலன் மூலம் தகவல் தெரிந்ததும் உடனடியாக போலீசுக்கு புகார் செய்யப்பட்டு அதன்பேரில் கேமராவை திருடியதாக மகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமண வாழ்வு நீடிக்க
30 வயதுக்குப்பிறகு திருமணம் செய்து கொண்டால் தான் நீடித்த திருமண வாழ்வு கிடைக்கும் என்பது அமெரிக்காவில் நிலவி வரும் பொதுவான கருத்து ஆகும். ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு இதை தவறு என்று சித்தரிக்கிறது.
23 முதல் 27 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் தான் நீண்ட காலம் வெற்றிகரமான தம்பதிகளாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
டெக்சாஸ் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், 20 வயதுக்கு முன்பு நடக்கும் திருமணம் பெரும்பாலும் விவாகரத்தில் முடிவதாக தெரிய வந்து உள்ளது. முதிர்ந்த வயதில் நடக்கும் திருமணமும் நீடிப்பதில்லை என்றும் ஆய்வு கூறுகிறது.
1970களில் திருமண வயது என்பது ஆண்களுக்கு 23 என்றும், பெண்களுக்கு 21 என்றும் இருந்தது. இப்போது அது 27-26 ஆக உயர்ந்து உள்ளது என்றும் ஆய்வு கூறுகிறது.
கண்ணீரால் காப்பாற்றப்பட்ட பெண்
சீனாவைச் சேர்ந்த பெண் குவோயிங். 47 வயதான இவரது மூளையில் ரத்தக்குழாய் வெடித்ததில் இறந்து போனதாக கருதிய குடும்பத்தினர் இவரது உடலைத் தகனம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.
அப்போது மூடியிருந்த அவரது கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு வெளியானதைப் பார்த்த உறவினர் ï இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தார். அதனால் அவர் திரும்பவும் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த நிதி உதவியைக் கொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணம் அடைந்தார்.
தினதந்தி-
Friday, June 26, 2009
இந்திர விழா... நமீதாவின் நூதன பிரச்சாரம்!
நமீதா என்ன செய்தாலும் பெரிய செய்தியாகி விடுகிறது. குறிப்பிட்ட படத்துக்கு அல்லது அவர் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அதுவே பெரிய விளம்பரமாகவும் அமைந்துவிடுகிறது.
நமீதாவுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய இந்திர விழா படத் தயாரிப்பாளர் அவருக்கு ஒரு யோசனை கூறியுள்ளார்.
அவரது ரசிகர் மன்றத்தில் உள்ளவர்கள் மற்றும் தெரிந்த நபர்களுக்கெல்லாம் தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதி அதை இமெயில் மூலம் அனுப்பி வைப்பதே அந்த யோசனை.
அந்த இமயிலில், தானும் ஸ்ரீகாந்தும் நடித்துள்ள புதிய படமான இந்திர விழைவைக் காண வருமாறு அழைப்பு விடுத்துள்ளாராம். மேலும் அதிலேயே படத்தின் சிறப்புகள், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் விவரங்களையும் அவர் அனுப்பியுள்ளார்.
நமீதாவின் மெயில் கிடைத்த சந்தோஷத்தில் உடனே அனைத்து ரசிகர்களும் பதிலும் அனுப்பி உள்ளார்களாம்.
இதுபற்றி நமீதா கூறுகையில், இந்த இ-மெயில் விளம்பர யோசனையை தயாரிப்பாளர் சஞ்சீவ்சர்மாதான் சொன்னார். அது வித்தியாசமாகவும் இருந்தது. உடனடியாக தமிழ், ஆங்கிலத்தில் ரசிகர்களுக்கு இ-மெயில் அனுப்பினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. நிறைய ரசிகர்கள் வாழ்த்து அனுப்புகிறார்கள். அவர்களுக்கு உடனுக்குடன் பதிலும் அனுப்பி வருகிறேன், என்கிறார்.
BJP-யில் சேர்ந்தார் வடிவேலு -திடிக்கிடும் உண்மை
விட்டத்தை பார்த்து முட்டுக் கொடுத்து தூங்கி கொண்டு இருந்த வடிவேலுவின் வீட்டுக்கு திடிரென ஒரு காவி கோஸ்டி படை எடுத்தது ..
(வடிவேலுவின் mind வாய்ஸ் : அட நல்லாத்தானே போய்கிண்டு இருந்தது...)
முன்னம் மண்டை glar அடிக்க வந்த அந்த பெரியவர் , நேரே வடிவேலுவிடம் போய், இங்க பெரிய நகைச்சுவை புயல் வடிவேலு எங்க என்று கேட்க ,
வடிவேலு : இங்கதான் இருகோம்லா ...
பெரியவர் : எங்க ஜி ?
வடிவேலு : ஏய் .. ஏய் ..நான் என்னை சொன்னேன் ...
பெரியவர் : சொர்ரிஜி ..நான் அத்வானி ஜி ...
வடிவேலு : சரி , வச்சுக்கோ ..
அத்வானி : பாஸ் ...!!!??????
வடிவேலு : என்னது பாஸ் ஆ? என்னங்கடா பாசமா கூப்பிடுறீங்க?
அத்வானி : நாங்க எல்லாம் இப்ப வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல சேர்ந்த்துட்டோம் ..அப்ப நீங்க தானே பாஸ் எங்களுக்கு (கோரசாக ) ..
வடிவேலு : என்னடா , எல்லோரும் கோராசா சொல்றீங்க ? அது சரி நான் இப்ப என்ன பண்ணட்டும் ?
அத்வானி : மன்மோகனை தூக்கணும் ..!!
வடிவேலு : யார்ரா அது ?
அத்வானி : நம்ம சங்கத்து ஆள , தோக்கடிச்ச்வன் ..
வடிவேலு : என்னது ?...மன்மோகனுக்கு கட்டம் சரி இல்லை .. அவனை ஒரு கை பார்க்கலாம் ...அம்மம் இது யாரு , குறு குருன்னு பார்க்கிறது ? ஏய் ..அப்படி எல்லாம் பார்க்க கூடாது ..
அத்வானி:அவர் தான் எங்களுக்கு முன்னாள் தலை "ராஜ்நாத் "..
வடிவேலு : அது எல்லாம் சரி . அண்ணன் குளிச்சு 40 நாள் ஆச்சு ..பல் வில்லாக்கி 10 நாள் ஆச்சு ,motion போய் 30 நாள் ஆச்சு, இது எல்லாம் சரி பண்ணி ,எனக்கு ஒரு மட்டன் பிரியாணி , லெக் பீசோட வாங்கி தருவீங்களா ?
வெங்கையா நாய்டு : எல்லாம் தரோம் ..ஒரு அறிக்கை விடனும் முதல்ல ...
வடிவேலு: இப்பவே கண்ணை கட்டுதே , யாருயா நீ ?
வெங்கையா நாய்டு : நான் வெங்கையா நாய்டு ஜி ..
வடிவேலு : என்ன வெங்காயமோ ..போ . ஆமாம் , வட நாட்டுல என்னை மாதிரி கருப்பா , அழகா (என்ன அங்க சிரிப்பு ... என்ன ஒரு வில்லத்தனம் ) இருந்தா ஒவ்வொரு வீட்டுலையும்10 , 10 நாள் வச்சு அழகு பார்பாங்கலாமே .அப்படியா ...?
ராஜ்நாத் : ஏன்... 10 நாள் போதுமா ?
வடிவேலு : தம்பி , நாங்க எல்லாம் கலவர பூமியில் கல்யாணம் பண்றவங்க ...புரியுதா ...என்ன லுக்கு ? லேடன் கிட்ட பேசுறிய ? புரியல , பின் லேடன் , பின் லேடன் ..... ஐயா , செக்ஸ் மூடுல இருக்கேன் ...அப்படியே அப்பிட் ஆய்டு புரியுதா ??
(வடிவேலுவின் mind வாய்ஸ் : இன்னுமா இந்த உலகம் நம்பளை நம்புது ...)
அத்வானி : தலை, ...பேட்டி எல்லாம் கொடுக்க தெரியுமா ..
வடிவேலு : ஏய் ..ஏய் ..யாரை பார்த்து .. கட்டுடா வண்டியை .. பிரஸ் கரங்களை கூப்பி டுடா
(ஓவர் டு பிரஸ் மீட் ...)
நக்கீரன் : நீங்க எந்த election- ல தோற்று இருக்கீங்க ?
வடிவேலு : ஹோ ...உங்களை எல்லாம் பார்த்த பாவமா இருக்கு .. நாங்க எல்லாம் எங்கேயும் தோற்றது இல்லை ..
நக்கீரன் : போன வாட்டி, கவுன்சிலர் election- ல தோற்றீன்களே ..
வடிவேலு : அது போன மாசம் , நான் சொல்றது இந்த மாசம் ..
ஜூனியர் விகடன் : உங்களுக்கும் , நமிதாவுக்கும் எதோ ஒரு ஒரு ....
வடிவேலு : அது பாகிஸ்தானின் வெளி நாட்டு சதி ..
குமுதம் : உங்கள் வீட்டுல கல்லு எரிய , விஜய காந்த் ஒரு கல் குவாரியே குத்தகைக்கு எடுத்து இருக்காராமே ?
வடிவேலு : என்னது , திரும்பவுமா ... வெள்ளை கொடிக்கு மீண்டும் வேலையா ? வேணாம் போதும் ..இனிமே நீ பேச கூடாது ..என்னை உசுபேத்தி , உசுபேத்தி அழ வைப்ப , நான் அதுக்கு ஆள் இல்லை ..
அப்போது திடிரென 4 , 5 குண்டாஸ் ஒன்னு சேர்ந்து வடிவேலுவை அலேக்காக தூக்கி கொண்டு போயினர் ..
ஒரு காட்டுக்குள் , ஒரு குடிசைக்கு வெளியே அவர் தூக்கி எரிய படுகிறார் ....
அதற்க்கு அப்புறம் ...
வடிவேலு : ஏய் ,ஏய் யார் மேல கை வச்சிருக்கீங்க தெரியுமா , தெரியுமா ..தெரியுமா ?
கூட்டம் : தெரியாது ..சொல்லு டா நாயே, யார் நீ ?
வடிவேலு : தெரியாமத்தானே நானே கேட்குறேன் ...
கூட்டம் : து ..தூ .. து ..தூ ..
வடிவேலு : அப்படி துப்பிட்டு , வேலை வெட்டிக்கு போகாம சமைஞ்ச புள்ள கணக்கா என்ன ஒரு லுக் ?
கூட்டம் : எங்க அக்காதான் உன்னை தூக்க சொன்னாங்க ..
வடிவேலு : உங்க அக்க வேற இருக்கால ..உங்க கொக்கா ... வர சொல்லு ..வர சொல்லு ..அவளை வர சொல்லு ...
திடிரென மூக்கில் ஒரு குத்து விழ ..
வடிவேலு : டேய் , பேச்சு பேச்ச இருக்கும் போது , என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு .. இப்பவாச்சும் சொல்லுங்கடா உங்க அக்கா யாருடா ?
கூட்டம் ஒரு பக்கமா கையை காண்பிக்க , அங்கே ஒரு நாற்காலியில் ஒரு பெண் அமர்ந்து இருந்தார் ..
அங்கே சிங்க நடை நடந்து சென்ற வடிவேலு
வடிவேலு : ஹேய் செல்லம் , என் மேல அவ்வளவு வெறியா ? காதல் என்றால் இது அல்லவா காதல் ..
பெண் : டேய் ..டேய் ..
வடிவேலு : ஓஹோ ..ஒரே அவசரம் போ உனக்கு ..ஆமாம் என் மேல காதல் வர எது செல்லம் காரணம் ? என் BJP- தலைவர் பதவியா ? இல்லை என் முரட்டு தோல் உடம்பா ? உன் மூஞ்ச காட்டு என் செல்லம் ?
அந்த பெண் , மெதுவாக திரும்பி .... திரும்பி .... தன் முகத்தை காட்ட ..
நடு நடுங்கி போனார் நம்ம கை புள்ள
அது வேற யாரும் இல்ல நம்ம மம்தா
மம்தா மோகன்லால் இல்ல மம்தா பானர்ஜி ..
அடுத்த நாள் பொதிகையில் ...
காணமல் போனவர் பற்றிய அறிவிப்பு
பெயர் வடிவேலு , காணமல் போன போது சிகப்பு நிற சட்டையும் , மஞ்சள் நிற கால் ஆடையும் அணிந்து இருந்தார் ... என்று ஒரு 54 வயது இளம்பெண் செய்தி வாசித்துக் கொண்டு இருந்தார் ....
THANKS :-MANTHIRA AASAIKAL
"Size Zero" கிளப்பும் பீதி!
விபச்சாரம் , புது நடிகை-2 இயக்குநர்கள் கைது!
சென்னையில் விபசாரத்தில் ஈடுபடுவோரை பிடிக்க விபசார தடுப்பு பிரிவு போலீசார் மீண்டும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வடபழனி பஸ் நிலையம் அருகே இரு திரைப்பட இயக்குநர்கள் இளம்பெண்களின் படங்களைக் காட்டி இளைஞர்களை விபச்சாரத்துக்கு அழைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக மாநகர விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீசார், துணை கமிஷனர் விஜயகுமாரி, உதவி கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையில் சம்பவ இடத்துக்கு கிளம்பினர். அனைவரும் சாதாரண உடையில் களமிறங்கினர்.
அப்போது சுமார் நடுத்தர வயது ஆள் ஒருவர் போலீசாரிடம் சென்று, ரூ 5000 கொடுத்தால் சினிமா நடிகை போன்ற அழகான பெண்னுடன் செக்ஸ் வைத்து உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்தாராம். உடனே ஒப்புக்க கொண்ட போலீசார், அந்த நபரின் காரைப் பின்தொடர்ந்துள்ளனர். சின்மயா நகரில் ஒரு வீட்டின் முன் நின்றது அந்தக் கார்.
உடனடியாக போலீசார் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரிய வந்தது.
விபச்சாரத்தில் வீணா (19) என்ற சினிமா நடிகையும் ஈடுபட்டிருந்தார். இவர் கேரளத்துப் பெண். உனக்காகப் பிறந்தேன் என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். முருகதாஸ் எனும் புதிய படத்தில் நாயகியாகவும் நடிக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் விபசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் வீணா.
"படங்களில் நடிக்க அடிக்கடி சென்னை வந்து செல்வேன்.இப்போது இரு புதிய படங்களில் நடித்துக் கொண்டுள்ளேன். அவற்றில் உனக்காகப் பிறந்தேன் விரைவில் வெளியாக உள்ளது. முருகதாஸ் படப்பிடிப்பில் உள்ளது. அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் விபச்சாரத்தில் ஈடுபட்டேன்..." என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வீணாவை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பழம் பெரும் நாடக நடிகரும், சினிமா டைரக்டருமான விஜயகுமார் என்ற விஜயசாரதி (70) மற்றும் மலையாள பட டைரக்டர் ஜோசப் என்ற வர்கீஸ் (38) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
விஜயசாரதியின் சொந்த ஊர் சேலம் ஆத்தூர். இவர் கடந்த 40 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வருகிறார்.
விஜயசாரதி மற்றும் வர்கீஸ் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வீணா, பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Wednesday, June 24, 2009
பணம் பறித்த வழக்கில் ஸ்லம்டாக் மில்லியனர் பட நடிகர் கைது
பிரபல தயாரிப்பாளர் ராமானந்த் சாகரின் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்புப் பிரிவு தலைவராகவும், ஆடை வடிவமைப்பு இயக்குநராகவும் பணியாற்றி வருபவர் பாதிக்கப்பட்ட அந்த நபர்.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஜாவேத் கூன் என்ற கேரக்டரில் நடித்தவர்தான் அஜீத் பாண்டே. டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இயக்குநரை அணுகிய அவர் தனது பெயர் இர்பான் ஹுஸ்ரி என்றும், சோட்டா ஷகீலின் தம்பி எனவும் கூறி மிரட்டியுள்ளார். அஜீத் பாண்டே என்பவருக்கு தொடர்களில் நடிக்க வாய்ப்பு தர வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து இணை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா கூறுகையில், பாதிக்கப்பட்ட நபரரை அணுகிய பாண்டே, தன்னை ஹூஸ்ரி என்று அறிமுகப்படுத்தியுள்ளார். சோட்டா ஷகீலின் தம்பி என்றும் கூறியுள்ளார். அஜீத் பாண்டேவுக்கு நடிக்க வாய்ப்பு தருமாறும் மிரட்டியுள்ளார்.
ஆனால் அப்படியெல்லாம் திடீரென யாருக்கும் வாய்ப்பளிக்க முடியாது என அந்த இயக்குநர் கூறவே, அப்படியானால் ரூ. 20 லட்சம் கொடு, இல்லாவிட்டால் உயிருடன் இருக்க முடியாது என்று மிரட்டியுள்ளார். பின்னர் அவர் போய் விட்டார்.
இதுகுறித்து அந்த இயக்குநர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தினர். இயக்குநரின் செல்போனில் முன்பு பேசியிருந்தார் பாண்டே. அதை வைத்து எங்கிருந்து போன் வந்தது என்பதை அறிந்தோம்.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா என்ற இடத்தில் அந்த போனுக்கான சிம் கார்டு வாங்கப்பட்டிருந்தது. அஜீத் பாண்டேதான் தனது பெயரில் அதை வாங்கியிருந்தார் என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து பாண்டேவுக்கு வலை விரிக்கப்பட்டது. பயந்தார் ரயில் நிலையத்தில் வைத்து பாண்டேவை போலீஸார் கைது செய்தனர் என்றார் ராகேஷ் மரியா.
ஜெய் ஹனுமான் உள்ளிட்ட சில முக்கிய சீரியல்களில் நடித்தவராம் இந்த பாண்டே.
நடிக்க வாய்ப்பு கேட்டு தாதாவின் பெயரை பயன்படுத்திய பாண்டே இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.