Please Visite here - www.cenimagallary.blogspot.com

Saturday, June 13, 2009

நயன் மீண்டும் 'மர்மப் பேச்சு'!

பிரபுதேவாவுடன் திருமணக் கோலத்தில் இருப்பது போல ஒரு பத்திரிகையில் இன்று படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் உண்மையானதல்ல என்றும் அது திட்டமிட்ட பொய், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்றும் நயன்தாரா மறுத்துள்ளார்.

அந்தப் பத்திரிகை மீது வழக்குப் போடுவது குறித்து யோசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவும் நயன்தாராவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அனைத்துப் பத்திரிகைகள் மற்றும் இணையத் தளங்களிலும் செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து இன்று வெளியான ஒரு வார இதழில் பிரபு தேவாவும் நயன்தாராவும் திருமணக் கோலத்தில் இருப்பது போல படங்கள் வெளியாகின.

இந்தப் படம் உண்மையல்ல என்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்றும் நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

"எனது திருமணம் [^] தனிப்பட்ட விஷயம். என் திருமணத்தை நான்தான் அறிவிக்க முடியும். இப்போதைக்கு கை நிறைய படங்கள் உள்ளன. அவற்றை முடிப்பதில்தான் என் முழுக் கவனமும்" என மீண்டும் மர்மமாகவே பேசியுள்ளார் நயன்தாரா.

இந்தப் படத்தை வெளியிட்ட பத்திரிகை மீது என்ன நடவடிக்கை எடுப்பது என யோசித்து வருவதாகவும், இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment