Please Visite here - www.cenimagallary.blogspot.com

Wednesday, April 29, 2009

பாவனாவுக்கு விருந்துடன் பாடம்

மகாத்மா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த பாவனாவன் நடிப்பில் கிறங்கிப் போன தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், உடனே அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்தளித்து உபசரித்தார்.


விருந்தில் அவரது மனைவி சிவரஞ்சனியும் கலந்து கொண்டார். சிவரஞ்சனி முன்னாள் நாயகி என்பது நினைவிருக்கலாம்.

தனக்குப் பிடித்த ஹீரோயின்களை இப்படித்தான் வீட்டுக்குக் கூட்டிப் போய் விருந்தளித்துக் கெளரவிப்பது ஸ்ரீகாந்த்தின் வழக்கம். அந்த வகையில் மகாத்மா படத்தில் பாவானாவின் நடிப்பில் அதிசயித்துப் போய் விருந்தளித்து விட்டார் ஸ்ரீகாந்த்.

விருந்தில் கலந்து கொண்ட சிவரஞ்சனி, பாவனாவுக்கு நிறைய டிப்ஸ்கள் கொடுத்தாராம். கூடவே சினிமா உலக அனுபவங்களையும் எடுத்துக் கூறினாராம்.

பாவனாவுக்கு தமிழ், மலையாளம் நன்கு வரும். தெலுங்கு தத்தக்கா புத்தக்காதான். எனவே தெலுங்கு உச்சரிப்பு குறித்தும் ஸ்ரீகாந்த் தம்பதியினர் பாடமே எடுத்து விட்டார்களாம்.

ஸ்ரீகாந்த் தம்பதியினரின் இந்த அன்பான உபசரிப்பில் நெகிழ்ந்து போய் விட்டாராம் பாவனா.

No comments:

Post a Comment