Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, March 30, 2009

விஜய்.. அனுஷ்கா சந்தோஷம்!

விஜய்யுடன் நடிப்பது சந்தோஷமாகவும், அனுபவிக்கும் வகையிலும் இருப்பதாக கூறியுள்ளார் அனுஷ்கா.

ரெண்டு படத்தோடு தெலுங்குக்குப் போய் விட்டார் அனுஷ்கா. இப்போது அங்குள்ள ஹீரோயின்களை உண்டு, இல்லை என பண்ணி வருகிறார் தனது அருந்ததி மூலம்.

தமிழிலும் அருந்ததீ என்ற பெயரில் அப்படம் ரிலீஸாகி அனுஷ்காவின் பக்கம் கோலிவுட் பார்வையைத் திருப்பியுள்ளது.

அவரைத் தேடி தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ்ப் பட வாய்ப்புகளும் நிறைய வருகின்றன.

தற்போது தெலுங்கில் மகேஷ்பாபுவுடனும், தமிழில் விஜய் மற்றும் கார்த்தியுடனும் இணைந்து நடிக்கிறார் அனுஷ்கா.

விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. வேட்டைக்காரன் அனுபவம் வித்தியாசமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறதாம் அனுஷ்காவுக்கு.

விஜய்யுடன் நடிப்பது சுலபமல்ல. அவர் சிறந்த நடிக்ர. அவரது பன்ச் ரொம்பப் பிரபலமானது. அவருடன் நடித்த நாட்கள் மறக்க முடியாதவை என்கிறார் அனுஷ்கா.

மகேஷ்பாபுவுடன் நடிக்கும் தெலுங்குப் படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கியது. மகேஷ்பாபுவுடன் நான் நடிப்பது இதுவே முதல் முறை. ஜல்சா, அத்தடு ஆகிய பிரபல படங்களை இயக்கிய திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்தான் இதை இயக்குகிறார். இதனால் மகிழ்ச்சியாக உள்ளேன் என்கிறார் அனுஷ்கா.

பிரபாஸுடன் நடித்த படம் ரிலீஸுக்குத் தயாராகி விட்டதாம். அடுத்து கோபிசந்த்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம்.

மொத்தத்தில் கல்லாப் பெட்டி புல்லாயிட்டிருக்குன்னு சொல்லுங்கோ..

No comments:

Post a Comment