Please Visite here - www.cenimagallary.blogspot.com

Wednesday, March 11, 2009

ஷேவாக்கின் சாதனையுடன் தொடரை வென்றது

இந்தியா நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றது. ஒரு போட் டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
ஒருநாள் போட்டித் தொடரை சமப்படுத்துவதா தோல்வியடைவதா என்ற பலப் பரீட்சையில் இறங்கிய நியூஸிலாந்து, 84 ஓட்டங்களினால் தோல்வியடைந்து தொடரை இழந்தது. ஷேவாக்கின் அதிரடி ஓட்டங்களை இடையிடையே மழை குழப்பியதால் டக்லூயிஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் வெற்றி பெற்று நியூஸிலாந்து மண்ணில் புதிய சாதனை படைத்தது இந்தியா.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களை எடுத்தது.
ரைடட், மக்கலம் ஜோடி சிறப்பாக ஆரம்பத்தைக் கொடுத்து 19.1 ஓவர்கள் விளையாடி 102 ஓட்டங்களை எடுத்தனர். 57 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரைடட், 6 பவுன்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்கள் எடுத்த போது யுவராஜ் சிங் பந்தை ரெய் னாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். ரவ்ளர் 5 ஓட்டங்களுடனும் குப்தில் 25 ஓட்டங்களுடனும், வெளியேறினர்.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மக்களம் 95 பந்துகளுக்கு முகம் கொடு த்து 2 சிக்சர்களும் 7 பவுன்டரிகளும் அடங்கலாக 77 ஓட்டங்கள் எடுத்தார்.
ஓரம் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். மக்கிளிசனி ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் எலியட் ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இஷாந்த் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும், சஹீர்கான், யுவராஜ் சிங், பதான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.



271 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 23.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 201 ஓட்டங்கள் எடுத்ததால் டக்லூயிஸ் முறைப்படி 84 ஓட்டங்களினால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அணியின் வெற்றிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்பதை இந்திய வீரர்களான ஷேவாக்கும், கம்பீரும் நிரூபித்தனர்.
மழை குறுக்கிட்டதால் 47 ஓவர்களில் 281 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ஓவருக்கு 5.97 ஓட்டங்கள் அடிக்க வேண்டிய நிலையில் இந்திய அணி களமிறங்கியது. நிலைமையை உணர்ந்த ஷேவாக் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்தார்.
10 ஒவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் 43 ஓவர்களில் 263 ஓட்டங்கள் என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ஓவருக்கு 6.11 ஓட்டங்கள் என்ற நிலையில் இந்திய அணி களமிறங்கியது. நியூஸிலாந்து வீரர்களின் பந்தை நாலாதிசையிலும் விரட்டிய ஷேவாக் 31 பந்துகளில் எட்டு பவுன்டறிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் அடித்தார். 52 பந்துகளைச் சந்தித்த கம்பீர் ஐந்து பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களை எடுத்தார்.
60 பந்துகளைச் சந்தித்த ஷேவாக் நான்கு சிக்ஸர், 13 பௌண்டரிகள் அடங்கலாக 103 ஓட்டங்கள் அடித்து நியூஸிலாந்தில் புதிய சாதனை செய்தõர்.
1998 ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் 62 பந்துகளில் முன்னாள் இந்திய அணித்தலைவர் அஸார்தின் 100 ஓட்டங்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
23.3 ஓவர்களில் இந்திய அணி 201 ஓட்டங்கள் எடுத்திருக்கும் போது மீண்டும் மழை குழப்பியதால் டக்வேத் லூயிஸ் முறைப்படி 84 ஓட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியூஸிலாந்து மண்ணில் முதன் முதலாக இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
ஷேவாக் ஆட்டமிழக்காது 125 ஓட்டங்களையும், கம்பீர் ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களையும் எடுத்தனர். ஆட்டநாயக னாக ஷேவாக் தெரிவானார்.

No comments:

Post a Comment