Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, February 26, 2009

மார்ச் 23 -ல் நானோ அறிமுகம்!

இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டாடாவின் மக்கள் கார் நானோ வருகிற மார்ச் 23-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

இதுகுறித்து இன்று அதிகாரப்பூர்மாக தகவல் வெளியிட்டுள்ளது டாடா நிறுவனம்.

மும்பையில் நடைபெறும் விழாவில் இந்தக் காரை அறிமுகப்படுத்துகிறது டாடா. ஆனால் அறிமுகமாகும் தினத்தன்று இந்தக் கார்கள் விற்பனைக்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, ஏப்ரல் முதல்வாரத்தில் அனைத்து ஷோரூம்களிலும் பார்வைக்கு வைக்கப்படும் நானோ, வரும் ஏப்ரல் இரண்டாவது வாரத்திலிருந்து புக்கிங் செய்யப்படும்.

கார் டெலிவரி எப்போது என்பதை புக்கிங் நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் காரின் ஷோரூம் விலை ரூ.1 லட்சம் என்று கூறப்பட்டாலும், வரிகள் உள்பட அதன் உண்மையான விலை என்னவென்பதை மார்ச் 23 அன்றுதான் சொல்வார்களாம்.

No comments:

Post a Comment