Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, February 19, 2009

13 வயதில் தந்தையான இங்கிலாந்து சிறுவன்


இங்கிலாந்தில் 13 வயது சிறுவன் தந்தையாகி இருக்கிறான். இங்கிலாத்தில் வெளியாகும் சன் பத்திரிகை முதல் பக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டது. இந்த செய்தி லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் வயதுக்கு வந்ததுமே செக்ஸ் உறவில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் சிறுவயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

லண்டனிலுள்ள ஈஸ்ட்போர்ன் நகரில் ஆல்பி பட்டேன் (Alfie Patten) எனும் 12 வயது சிறுவனும் சேர்ந்தலி(Chantelle Steadman) என்ற 14 வயது சிறுமியும் ரகசிய உறவு வைத்து இருந்தனர்.

இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை செர்ந்தலிக்கு பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது .குழந்தை 3.27 கிலோகிராம் நிறையுடனும் அரோக்கியமாகவும் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


குழந்த்தையின் தாய்க்கு இப்போது 15 வயது ஆகிறது. குழந்தைக்கு தந்தையான சிறுவனுக்கு 13 வயதே ஆகிறது. அவர் 4 அடி உயரமே இருக்கிறார். அதற்குள் தந்தையாகி விட்டான்.



இதுபற்றி குழந்த்தையின் தந்தையான அல்பியிடம் கேட்டபோது , நானும் எனது காதலியும் ஒருநாள் பெற்றோர் வீட்டில் இல்லாதபோது பாதுகாப்பற்ற முறையில் உறவு வைத்துக்கொண்டோம். சர்ந்தலி கருவை கலைக்க கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்டபோது தான் தடுத்துவிட்டதாகவும். குழந்த்தை பிறப்பதை தான் விருப்பியதாகவும், எதிர்காலத்தில் பொருளாதார பிரச்சினைகளை பற்றி தான் கவலைப்படவில்லை என்றும் தனது தந்தை ஒருநாளைக்கு 10 ஸ்டேலிங் பவுன்ஸ் தான் பொக்கட் மணியாக தருவார் என்று கூறியுள்ளான்.

அந்த நாட்டில் இதுபோன்ற சம்பவம் நடப்பது சாதாரணமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 15 வயதுக்கு கீழ் உள்ள 35 ஆயிரம் சிறுமிகள் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். அதில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் 7 ஆயிரம் பேர்.

பிரிட்டனில் முதல்முறையாக இளவயதில் தந்தையானவர் என்ற பெருமையை பெட்போர்ட் மாநிலத்தை சேர்ந்த சேன் ஸ்ட்வார்ட்(Sean Stewart) ஆவார் . 1998 ஆம் ஆண்டில் இவருக்கு 12 வயது ஆனபோது பக்கத்துவீட்டு 15 வயது பெண்ணான எம்மாவேப்ச்டேர் (Emma Webster) உடன் உறவு வைத்து குழந்தைக்கு தந்தையானார் .ஆனால் இவர்கள் இருவரும் குழந்தை பிறந்து ஆறு மாதங்களிலேயே பிரித்துவிட்டனர்.

No comments:

Post a Comment