Please Visite here - www.cenimagallary.blogspot.com

Sunday, July 5, 2009

கவிஞரைக் காய்ச்சிய 'பேனாக்கள்'!

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்? என்ற புதிய படத்தை இயக்குகிறார் கவிஞர் தபூ சங்கர்.

இந்தப் படத்துக்காக ஒரு பிரஸ் மீட் வைத்திருந்தார்கள்.

இன்னமும் ஆரம்பிக்கப்படாத இந்தப் படம் குறித்து தபூ சங்கர் ஏக பில்ட்அப் கொடுக்க, டென்ஷனான மூத்த செய்தியாளர்கள் சிலர் கேள்விகளால் காய்ச்சி எடுத்துவிட்டார்கள் தபூ சங்கரை.

சரி... இந்த தலைப்புக்கு என்னங்க அர்த்தம்?, என ஒரு மூத்த நிருபர் கேட்க, தபூவுக்கு கோபம் வந்துவிட்டது. சார், அது கவிதைங்க. அதுக்கெல்லாம் அர்த்தம் கேட்டா எப்படி? என்றார்.

நீங்க வெச்ச தலைப்புக்கே உங்களுக்கு அர்த்தம் சொல்லத் தெரியலியே... இந்தப் படத்தை சாதாரண ஜனங்களும் விளங்கிக்கிற மாதிரி எப்படி எடுக்கப் போறீங்க? - இது இன்னொரு நிருபர்.

சரி... இந்தப் படம் எப்படி இருக்கும் என்றாவது சொல்ல முடியுமா? என ஆரம்பித்தார் அடுத்த நிருபர்.

அதற்கு தபூ சங்கர், 'இது சேரன் படம் மாதிரி இருக்கும்'என்றார்.

உடனே குறுக்கிட்ட இன்னொருவர், 'அவர் படமே ஓட மாட்டேங்குது... இதுல அவரை மாதிரி படமெடுக்க நீங்க வந்துட்டீங்களா...சசிகுமார் படம் மாதிரி இருக்குமாங்க?' என்றார் நக்கலாக.

தபூ சங்கருக்கு கோபம் வந்துவிட்டது. ஆத்திரத்தில்,

'சசிகுமாரெல்லாம் இப்ப வந்தவருங்க. அவர்கூட என்னை கம்பேர் பண்ணாதீங்க. சேரன் எவ்வளவு சக்ஸஸ் கொடுத்தார்? அருமையான படங்களைக் கொடுத்த அவரைப் போன்ற ஒரு படைப்பாளி நான்...' என தம் கட்டி பேசிக் கொண்டிருக்க, கலைந்தது நிருபர் கூட்டம்!

ஜெயிக்கிறவங்களுக்குதான் சினிமா சொந்தம்னு விளங்க வைக்கும் பொறுமை நிருபர்களுக்கும் இல்லை, விளங்கிக் கொள்ளும் மனநிலையில் தபூ சங்கரும் இல்லை!

No comments:

Post a Comment