Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, July 9, 2009

நமீதாவே உன்னை நம்பி...

நமீதாவின் முழுக் கவர்ச்சியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படமான இந்திரவிழா நாளை வெளியாகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே ராஜேஸ்வர் இயக்கியிருக்கும் படம் இந்திரவிழா. இதில் நாயகனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக ஹேமமாலினி களமிறங்கியுள்ளார்.

ஹேமமாலினி இருந்தாலும் கூட நமீதாவின் கவர்ச்சி எல்லை கடந்த தீவரவாதம் போல படு உக்கிரமாக இருக்கிறதாம். கவர்ச்சியில் நமீதாவுடன் மல்லுக்கட்டும் அளவு ஆடைக் குறைப்பு புரட்சி செய்துள்ளாராம் ஹேமமாலினி. ஆனாலும் நமீதாவின் கவர்ச்சிதான் இந்தப் படத்துக்கு சகலமுமாக இருக்கிறது.

படத்தின் விளம்பர டிசைன்கள், பேனர்கள், கட் அவுட்டுகளில் தம்தூண்டு ட்ரெஸ்ஸில் நமீதா கிக்காக போஸ் கொடுக்கும் ஸ்டில்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

கெளரவ நடிகர் ரேஞ்சுக்கு சின்ன ஸ்டாம்பு சைசில் கதாநாயகனின் படத்தைதப் போட்டு வைத்துள்ளனர். சில போஸ்டர்களில் அதையும் காணோம்.

படத்தின் முக்கால்வாசி காட்சிகளில் நமீதாவுக்கு நீச்சலுடைக்கு சமமான காஸ்ட்யூம் மட்டும்தான் என்பதால், கவர்ச்சிப் பிரியர்கள் கல்லாவை நிரப்பி விடுவார்கள் என நம்புகிறார் ராஜேஸ்வர்.

'இனி அல்லாரும் மச்சான்ஸ்...!'

இதற்கிடையே, இனிமேல் நடிகை நமீதா ஆண்களை அண்ணா என்று அழைக்க மாட்டாராம். மாறாக காதுகள் இனிக்கும் வகையில் மச்சான்ஸ் என்றுதான் அழைக்கப் போகிறாராம்.

சிவாஜி கணேசன் தனது ரசிகர்களை பிள்ளைகளே என்று அன்பாக அழைப்பார். ரஜினியோ கண்ணா என்பார். விஜய்யோ 'ண்ணா' என்பார்.

இப்படிப்பட்ட தமிழ் சினிமா பரம்பரையில் வந்தவரான நமீதா தனது ரசிக மக்களை, குறிப்பாக ஆண்களை மச்சான்ஸ் என்று எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக கூப்பிட்டு வருகிறார். இருப்பினும் படப்பிடிப்புத் தளத்தில் மட்டும் சிலரை அண்ணா என்று அவர் அழைப்பதாக அப்படி அழைக்கப்பட்டவர்கள் மன வருத்தம் அடைந்ததாக செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் அவர்களின் மனம் குளிரும்படியான ஒரு செய்தியை அவிழ்த்து விட்டுள்ளார் நமீதா.

எனக்கு ஆண்கள் அனைவருமே மச்சான்ஸ்தான். யாரையும் அண்ணா என அழைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் நமீதா.

ஜெகன்மோகினி படப்பிடிப்பின்போது, தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் நமீதா பேசுகையில், வடிவேலு சார் காமெடி எனக்கு மிகவும் பிடிக்கும். நான்தான் இப்படத்தில் வடிவேலு சாரும் கண்டிப்பாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

ஆனால், அண்ணன், தங்கை வேடத்தை எங்களுக்குக் கொடுக்காதீர்கள், காமடியாக வையுங்கள் என்று கூறியிருந்தேன். இருந்தாலும் இப்படத்தில் எனக்கு அண்ணனாகத்தான் அவர் வருகிறார்.

ஆனால் அவரை அண்ணா என்று நான் அழைக்க மாட்டேன். சார் என்றுதான் கூப்புடுவேன். என்னைப் பொருத்தவரை ஆண்கள் எல்லோருமே எனக்கு மச்சான்ஸ்தான். யாரையும் அண்ணா என கூப்பிட மாட்டேன்.

எனக்குக் கல்யாணமாகும் வரை எனது உடலை அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் வைத்துக் கொள்ளும் கடமை எனக்கு உள்ளது. கல்யாணத்தை ரகசியமாக நடத்த மாட்டேன். எல்லோரையும் கூப்பிட்டு விருந்து வைப்பேன் என்று கூறுகிறார் நமீதா.

நமீதாவின் இந்த இனிப்பான செய்தி வந்த நாள்தான் ரசிகர்களுக்கெல்லாம் இனிய நாள்...

No comments:

Post a Comment