Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, May 24, 2010

இயக்குனர் நாடித்துடிப்பு - ஹரி


சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த பத்திரிக்கை செய்தி இது. இயக்குனர் ஹரி நடிகர் விஜய்யிடம் ஒரு கதை சொல்ல, அதை நிராகரித்து அனுப்பிவிட்டார் இளைய தளபதி என்றது அந்த செய்தி. எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இப்போது நாம் கேள்விப்படும் செய்தி உண்மை என்று உறுதியாக சொல்லமுடியும். விஜய் படங்கள் ஏற்படுத்திய நஷ்டத்தை ஈடுகட்ட, ஹரியின் படத்தை வெளியிடுகிறார்கள்.



தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த ஹரி, முதலில் இயக்குனர் பாலசந்தரிடம் சேர்ந்து, பிறகு இயக்குனர் சரணிடம் ‘அல்லி அர்ஜூனா’ வரை பணியாற்றினார். முதல் படம் - ‘தமிழ்’. முதல் படத்தை மதுரை பேக்ட்ராப்பில் எடுத்தவர், அடுத்தடுத்து தனது படக்குழுவினரையும், பிறகு திரையரங்கில் ரசிகர்களையும் ஊர் ஊராக தமிழகம் முழுக்க கூட்டி சென்றார். பேரரசு, படத்தலைப்புக்கு ஒரு ஊரை முடிவு செய்துவிட்டு மற்றதை கவனிப்பார் என்றால், ஹரி கதைக்களத்திற்கு ஒரு ஊரை முடிவு செய்துவிட்டு மற்றதை பிறகு கவனிப்பார். படம் முழுக்க, ஊர் சம்பந்தப்பட்ட விஷயங்களை கதாபாத்திரங்கள் மூலம் பேசவிடுவார். படத்தலைப்பிலேயே ஒரு பாஸிட்டிவ்னெஸ் இருக்கும்.

சாமியில் திருநெல்வேலியையும், கோவிலில் நாகர்கோவிலையும், அருளில் கோயமுத்துரையும், ஐயாவில் தென்காசியையும் காட்டியவர், ஆறில் சென்னைக்கு வந்தார். அதற்கு பிறகு எடுத்த தாமிரபரணி, வேல், சேவல் படங்களுக்காக திரும்ப தெற்கேயே சென்றார். தற்போது, சிங்கமும் தூத்துக்குடி, திருநெல்வேலி வட்டாரங்களிலேயே எடுத்துள்ளார். தென்மாவட்டங்களில் அவருக்குரிய பரிச்சயங்களாலேயே, தொடர்ந்து அங்கு படமெடுப்பதாக காரணம் கூறியிருக்கிறார் ஹரி. (கவனிக்க: கதைக்களம் தான் வெவ்வேறு ஊர்கள். பெரும்பாலும் ஷூட்டிங் ஸ்பாட் - காரைக்குடி தான்.)

இதுவரை இவர் எடுத்த ஒன்பது படங்களில் சில தோல்வி படங்கள் இருந்தாலும், பெரும்பாலானவை வெற்றிப்படங்களே. தோல்விகளும் பெருமளவு தயாரிப்பாளர்களை பாதித்திருக்காது. ஏனெனில் திட்டமிட்டு படமெடுப்பதில் வல்லவர் இவர். சொன்ன தேதியில் படத்தை முடித்து, வெளியிடும் திறன் கொண்ட சொற்ப இயக்குனர்களில் ஒருவர் இவர்.

தயாரிப்பாளர்களிடையே, விநியோகஸ்தர்களிடயே நல்ல பெயர் இருந்தாலும், தீவிர தமிழ்ப்பட ரசிகர்களிடம் பிரபலமாக இருந்தாலும், பெரும்பாலோரின் பார்வையில் படாமல் இருக்கும் முன்னணி இயக்குனர் இவர். ஒருவகையில், இவருக்கு இது நல்லதாகவே அமைந்திருக்கிறது. இவர் படங்கள் அமைதியாக வெளியாகி, ஆர்பாட்டமாக ஓடும். சமீப காலங்களில், இது மாறி வருகிறது.

கலைஞர்கள் தங்கள் படைப்புகளைத் தாண்டி, மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது அவர்களது சில தனிப்பட்ட பண்புகளால் தான். ஹரியைப் பற்றி சொல்லும்போது, ஒருவர் விடாமல் அனைவரும் சொல்லும் விஷயம் - உழைப்பு & வேகம். ஒரு வேலையை எடுத்துக்கொண்டால், ராத்திரி பகல் என்று சிரமம் பார்க்காமல் செய்வது. இதனால் தான், தயாரிப்பாளர்கள் விரும்பும் இயக்குனராக தொடர்ந்து ஹரியால் இருக்க முடிகிறது. “பணம் முதலீடு செய்பவர்களை சந்தோஷப்படுத்தினால், ரசிகர்களையும் சந்தோஷப்படுத்த முடியும்” என்பது ஹரியின் எண்ணம். ரசிகர்களையும், முதலாளிகளையும் ஒருசேர திருப்தி செய்ய வேண்டுமென்பது நல்ல விஷயம் தானே?

கமர்ஷியல் படம் எடுப்பது ஒன்றும் தப்பான காரியமோ, சாதாரண காரியமோ அல்ல. அதற்கும் திறமை தேவை. ரசிகர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்ற எண்டர்டெயின்மெண்ட் லாஜிக் தெரிய வேண்டும். ஒரு மசாலா படமென்றால், சரியான விகிதத்தில், சரியான நேரத்தில் ஆக்‌ஷன் என்கிற காரத்தையும், காமெடி என்கிற இனிப்பையும், செண்டிமெண்ட் என்கிற உப்பையும் சேர்க்க வேண்டும். பெரும்பாலான சமயங்களில் இதை சரியாக செய்பவர் ஹரி.

ஆறு படத்தில் அதிக காரத்தையும், சேவல் படத்தில் அதிக உப்பையும் சேர்த்துவிட்டதே அப்படங்களின் தோல்விக்கு காரணம். எப்பேர்ப்பட்ட சமையல்காரர் என்றாலும், சமயங்களில் கூட குறைய ஆகத்தானே செய்யும்?



இன்றைய தேதியில் எந்தவொரு ஹீரோவையும் தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் சிறப்பாக கூட்டி செல்லும் ஆற்றல் உள்ள இயக்குனர் - ஹரி. விஷால் ஒரு பேட்டியில் தன்னை தமிழ்நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் கொண்டு சென்றது ஹரி தான் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும், ஹரி இன்னமும் அடக்கமாக, புகழ் வெளிச்சத்தில் தலையை காட்டாமல், ஒளிந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்.

அவர் சமீபத்தில் ஆனந்த விகடன் பேட்டியில் கூறியிருப்பது, “ஹரி டைரக்‌ஷனை நம்பி யாரும் படம் பார்க்க வர்றதில்லை. ஹீரோக்களை நம்பித்தான் வர்றாங்க. நான் அவங்க முதுகுக்குப் பின்னாடி பதுங்கிட்டு பில்ட்-அப் கொடுக்குறேன்... அவ்வளவுதான். நான் பாரதிராஜா, பாலா, அமீர், செல்வராகவன் மாதிரி இல்லை. என்னை மட்டும் வெச்சுக்கிட்டு ஜெயிக்க என்னால் முடியாது. நான் காவிய டைரக்டர் கிடையாது. பெரிய கிரியேட்டரும் கிடையாது. அதனால கமர்ஷியல் படம் பண்றேன்.”

உண்மைதான். இன்னொரு உண்மை. இவரை வைத்து படம் பண்ணும் தயாரிப்பாளர்கள் அனைவரும், இவரை வைத்து அடுத்து ஒரு படம் எடுக்கவும் தயாராக இருப்பார்கள். இது எல்லா இயக்குனர்களுக்கும் அமைவதில்லை.

இவர் தன்னை பெரிய கிரியேட்டர் இல்லையென்று சொன்னாலும், இவருடைய திரைக்கதை சோர்வில்லாமல், வேகமாக செல்லும். சின்ன ட்விஸ்ட்டுகள், பின்பகுதியில் அமையும் முடிவுகளுக்கு ஏதுவாக முன்பகுதியில் வைக்கும் சம்பவங்கள் என சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.

அதே சமயம், குறைகள் இல்லாமல் இல்லை. வசனங்கள் கவனம் பெற வேண்டும் என்பதற்காக இவர் அமைக்கும் வசனங்கள், ஆரம்பத்தில் செம பஞ்ச் ரகமாக இருந்து, சமீப காலங்களில் லொட லொடவென்று மாறியிருக்கிறது. ”ஒருச்சாமி, ரெண்டு சாமி” வசனத்திற்காக, ரஜினியை கைத்தட்ட வைத்தவராயிற்றே? (ரஜினி ஹரியிடம் கதை கேட்டார் என்றும், ஐயா கதையை தான் ஹரி ரஜினியிடம் சொன்னார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஹரியின் மாஸ்டர் பீஸ் என்று நான் கருதுவது, ஐயாவைத் தான்)

இன்னொரு குறை - இவர் படங்களின் பாடல்கள். சிறந்த ட்யூனை, தன் இசையமைப்பாளர்களிடம் இருந்து கறப்பவரல்ல ஹரி. அதுவா அமைந்தால் உண்டு என்ற ரகம் தான். இவருடைய வேகமே, இது போன்ற விஷயங்களில் நெகட்டிவ் காரணமாக அமைந்துவிடுகிறது என்று நினைக்கிறேன். தற்போது, பாடல்கள் வேறு எழுத ஆரம்பித்து இருக்கிறார்.

இவருடைய அனைத்து படங்களுக்கும் ப்ரியன் தான் ஒளிப்பதிவு. எந்த குறையும் சொல்லமுடியாத ஒளிப்பதிவாளர். விஜயக்குமார் வீட்டு மாப்பிள்ளை என்பதால், இவர் படங்களில் விஜயக்குமார் கண்டிப்பாக இருப்பார். சகலை ஆகாஷையும் காணலாம். அருண் விஜய்? ம்ஹும்! அதுக்கு இன்னும் காலமிருக்கு.

’அருவா இயக்குனர்’ என்னும் விமர்சனத்திற்கு, இவருடைய பதில் - ”கிராமத்து மக்களின் வன்முறை வெளிப்பாடு அருவாள்” என்பது தான். ஆனாலும், இவர் படங்களில் சண்டைக்காட்சிகளின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கும். என்ன! சில படங்களில், ரத்தம் கொஞ்சம் ஓவராக சிந்தும். இவர் படங்களில் பறக்கும் கார் ஆக்‌ஷன் சீன்களுக்கு நான் ரசிகன். கார் வெடித்து மேலே பறக்காமல், ஐயா படத்தில் பக்கவாட்டில் பறந்து ஒரு பனை மரத்தில் மோதும். என்னே திங்கிங்! எனக்கும் தான் என்னே ரசனை!

எது எப்படியோ, பொழுதுபோக்கு படம் கொடுப்பதில் முக்கியமான இயக்குனர் - ஹரி. அதை மாஸ் எண்டர்டெயினராக கொடுப்பதில் முக்கியமானவர் - இயக்குனர் ஹரி.

பல வருடங்களுக்கு முன்பே, என் ப்ரொபைலில் ஹரியின் பெயரைப் போட்டுவிட்டு, இன்னமும் அவரைப் பற்றி ஒரு பதிவு போடாமல் இருந்தால் எப்படி? பதிவு போட்டாச்சு!

Google Calendar - Get alerts to your mobile phone and email

Girl Friend / Wife பிறந்த நாளன்னைக்கு வாழ்த்து சொல்ல மறந்துட்டு எத்தனை ஆண்மகண்கள் வசவு / அடி வாங்குறாங்களோ தெரியாது. அது அவர்களுக்கு தான் வெளிச்சம்.

சிலர் டைரியிலயோ காலண்டர்லயோ விவரமா குறிச்சி வச்சிட்டு வாழ்த்து சொல்லி வசவு வாங்குவதிலிருந்து தப்பிச்சிடுறாங்க.

ஒரு சிலர் கடமையே கண்ணாக சரியா அந்த தேதியை நியாபகம் வச்சி அசத்திடுறாங்க. ஆனா ஒரு Girl Friend இருந்தா இது பரவாயில்லை. நம்ம கோகுலத்து கண்ணன் கணக்கா இருப்பவங்களுக்கு இது கொஞ்சம் கஷ்டம் தான்.



எனக்கு ஒரு பழக்கம், எல்லா நண்பர்களளோட பிறந்த நாளையும் கூகிள் காலண்டர்ல குறிச்சி வச்சிக்கிறது.

சரி இதை எப்படி செய்யறதுனு பார்க்கலாம். ரொம்பவும் சுலபம் தான்.

https://www.google.com/calendar போங்க. உங்க google அக்கவுண்ட்ட லாகின் செஞ்சிக்கோங்க.

எந்த நாளை நீங்க நியாபகம் வச்சிக்கனுமோ அந்த நாளை கிளிக் பண்ணினா Event | Task அப்படினு ஒரு பொட்டி வரும்.

Edit event details » ஐ கிளிக்கி, What, When, Where, Description எல்லாம் கொடுத்து சேமிச்சிக்கோங்க.

பொறந்த நாளோ, திருமண நாளோ குறிச்சி வைக்கனும்னா, Repeatsங்கறதுல Yearly ஐ செலக்ட் பண்ணிட்டு, Ends: Never கொடுத்துக்கோங்க.

Description க்கு கீழ பாத்தீங்கண்ணா Options இருக்கும். இதுல உங்க மொபைலுக்கு SMSம் Emailம் எத்தனை நாள் / மணி நேரத்திற்கு முன்னாடி வரணும்னு செட் பண்ணிட்டா முடிஞ்சது.

சரி மொபைல் நம்பரை இதில் எப்படி இணைக்கிறதுனா? Settings >> Calender Settings >> Mobile Setup போய்ட்டு உங்க mobile number கொடுத்து Verification பண்ணிடுங்க.

அவ்வளவுதான், இனிமே முக்கியமான நாட்களை மறந்துட்டு Girl Friend கிட்டயோ Wife கிட்டயோ அடி வாங்க தேவையில்லை!

என்னை மாதிரி ஆபீஸ்ல கேமரா மொபைல் பயன்படுத்த கூடாதுங்கற கட்டாயத்துல Nokia 1112 மாதிரி ஆதி கால மொபைல் போன் படுத்துறவங்களுக்கு, உங்க மொபைல்ல பிறந்த நாள் வாழ்த்து செய்தியை தட்டச்சி முடிச்சிட்டு, Options >> sending options >> Send later >> Phone number / Sending Date / Time (ராத்திரி 12 மணி) கொடுத்து சேமிச்சி வச்சிட்டா, சரியா நம்ம செட் பண்ணிட நேரத்தில sms deliver ஆகும். ஆனா அது நம்ம நண்பர்களுக்கு சரியா 12 மணி வரைக்கும் முழிச்சிருந்து அனுப்பின மாதிரி தெரியும். நான் இப்படியெல்லாம் ஃபிராடு தனம் பண்ணி அசத்துவதுண்டு! இந்த வசதி உங்க மொபைல்ல இருக்கானு செக் பண்ணிக்கோங்க.....

5 ஆண்டு உழைப்பில் யூடியுப்-ன் நிகரில்லாத மெகா சாதனை

இணையத்தில வீடியோ பார்க்க வேண்டும் என்றால் நாம்
உடனடியாக தேடுவது யூடியுப் தான் அந்த அளவிற்க்கு கடந்த
5 ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சி பெற்று தற்போது புது
சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. இதைப்பற்றிய சிறப்பு
பதிவு.

2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யூடியுப் நிறுவனம்
இணையதளத்தில் அனைவரும் இலவசமாக வீடியோ நிகழ்ச்சிகளை
இலவசமாக பகிர்ந்து கொள்ள இலவசமாக இடவசதி கொடுப்பது
உள்ளீட்ட பல சேவைகளை வழங்கியது. அனைத்தும் பார்ப்பதற்க்கு
நமக்கு புதிதாகத்தான் இருந்தது அதன் பின் ஒவ்வொருவருடமும்
இதன் சேவை அதிகமாக வழங்கப்பட்டுவருகிறது. இப்போது இதன்
வளர்ச்சி அளவுக்கு பல இலட்சம் வாடிக்கையாளரை பெற்றதோடு
மட்டுமல்ல ஒரே நாளில் இரண்டு பில்லியன் மக்கள் பார்க்கும்
ஒரு இணையதளமாக வளர்ந்துள்ளது என்றால் இதன் வளர்ச்சிக்கு
முக்கிய காரணம் உழைப்பு மட்டுமல்ல அதையும் தாண்டி யூடியுப்
நிறுவனத்தை 2006 ஆம் ஆண்டு கூகுள் வாங்கியதும் முக்கிய
காரணமாக உள்ளது. இதற்க்காக யூடியுப் நிறுவனத்தின் அனைத்து
ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இந்த வருடம் வரை உள்ள சாதனையை
விளக்கும் ஒரு வீடியோ காட்சியையும் இத்துடன் இணைத்துள்ளோம்


Tuesday, July 14, 2009

ஷ்ரியா 'சைஸ் ஜீரோ'!

கரீனா கபூர் 'தலைமையிலான' சைஸ் ஜீரோ 'குழுமத்தில்' இணைந்துள்ளார் ஷ்ரியா.

ஒல்லிபிச்சான் என்பதைத்தான் படு நேக்காக சைஸ் ஜீரோ என்று ஜென்டிலாக சொல்லிக் கொள்கிறார்கள். கிட்டப் போய்ப் பார்த்தால் லேசாக எலும்பு எட்டிப் பார்க்கும். அப்படி ஒரு மெலிசான உடம்பை எட்டுவதற்குப் பெயர்தான் சைஸ் ஜீரோ.

இந்த சைஸ் ஜீரோ என்ற வார்த்தை மிகவும் பிரபலமானவது கரீனா கபூரால்தான். அவர் தான் முதன் முதலில் தனது உடலை படு ஒல்லியாக மாற்றி அனைவரையும் வியக்க வைத்தார்.

அவரைத் தொடர்ந்து ஏகப்பட்ட நடிகைகள் சைஸ் ஜீரோவுக்கு மாறினார். ஷில்பா ஷெட்டி கூட சைஸ் ஜீரோவுக்கு மாறினார். இப்போது அந்த வரிசையில், ஷ்ரியாவும் இணைந்துள்ளார்.

சிவாஜி பட நாயகியான ஷ்ரியா, இந்தியிலும் தனது தடத்தை அழுத்தமாக பதிக்க முயன்று வருகிறார். அதற்கு முதல் படியாக சைஸ் ஜீரோவுக்கு மாறியுள்ளாராம்.

கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, வாய்க் கட்டுப்பாடு என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து இந்த சாதனையைப் படைத்துள்ளாராம் ஷ்ரியா.

பாலிவுட் இளசுகளுக்கு மத்தியில் எனது மெலிசு உடம்பு ரொம்பவே டாப்பாக இருக்கும் என்று பெருமையுடன் கூறுகிறாராம் ஷ்ரியா.

ஷ்ரியாவின் இந்தப் புதிய கோலத்தை கோலிவுட் ரசிகர்களும் காணலாம். கந்தசாமி படத்தில் சில காட்சிகளில் தனது உடல் அழகை எடுப்பாக காட்டும் வகையிலான காஸ்ட்யூம்களை அணிந்து ஆடியுள்ளாராம் பாடல் காட்சிகளில்.

ரஜினியோட நடிக்கணும்...' - நமீதாவின் கனவு!

பொதுவாக கோடம்பாக்கத்தில் நம்பர் ஒன் கிரீடம் ரஜினியுடன் நடித்தவுடன் கதாநாயகிகளுக்கு கிடைத்துவிடும்.

கவுதமிக்கு முதல் படத்திலேயே (குரு சிஷ்யன்) அந்த அந்தஸ்து வந்துவிட்டது. நயன்தாராவுக்கோ இரண்டாவது படத்தில் (சந்திரமுகி) அந்தக் கிரீடம் கிடைத்துவிட்டது. சிவாஜி என்ற ஒரே படம் ஸ்ரேயாவை சிகரத்தில் ஏற்றிவிட்டது. இந்த வரிசையில் அம்பிகா, ராதா, மீனா, சவுந்தர்யா, ரூபினி... இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம்.

இதையும் தாண்டி அசின், த்ரிஷா போன்ற நாயகிகள் முன்னணியில் இருக்கவே செய்கிறார்கள்.

நமீதாவுக்கு எப்படியும் முதல் நிலை நடிகையாக வரவேண்டும் என்ற கனவு நீண்ட நாட்களாகவே உள்ளது. ரஜினி அல்லது கமலுடன் நடித்தால் எப்படியும் முதல் நிலைக்கு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு.

சில ஆண்டுகளுக்கு முன் கமலுடன் ஒரு படம் நடிக்க வாய்ப்பு வந்து பின் நழுவிப் போனது.

இப்போது எப்படியாவது ரஜினி படத்தில் தலைகாட்டிவிட வேண்டும் எனத் துடிக்கிறாராம் நமீதா. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்றும், அவருடன் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் போதும், தனது சினிமா கனவு முழுவதும் நிறைவேறிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எந்திரனுக்குப் பிறகு ரஜினி படம் நடிப்பாரா என்பதைப் பொறுத்துதான் நமீதா ஆசை நிறைவேறுவதும் நிறைவேறாததும்.

எதுக்கும் ஒரு நடை ராகவேந்திரா மண்டபம் வரை போய் ரஜினியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கங்க நமீதா... இப்போதைக்கு உடனடியாக நடக்கக் கூடியது அதுதான்!

இந்திரவிழா விமர்சனம்.

இந்திரவிழா படத்துக்கு போனதுக்கு ஒரே காரணம் நமீதா.
தியேட்டரில் என்னையும் என் நண்பனையும் சேர்த்து சுமார்
இருபது பேர் படம் பார்த்தோம்.இது போன்று படங்கள் எடுப்பதில்
இயக்குனர்க்கு என்ன லாபமோ என்று தெரியவில்லை(இரண்டு
கதாநாயகிகள் தவிர).சில சுவையான சம்பவங்கள் படத்தின்
உள்ளேயும் வெளியேயும்:

********************************
# தியேட்டர் உள்ளே செல்லும் போதே செக்யூரிட்டி அங்கிள்
ஒன்னுக்கு ரெண்டு வாட்டி சொன்னாரு "தம்பி இந்திரவிழா
இந்திரவிழா படம் தான் ஓடுது வாமனன் காலையலே மட்டும் தான்"."இந்திரவிழா படத்துக்கு தான் வந்தோம், படம் போடுறிங்க
இல்ல, ஒரு வண்டியையும் காணோம்" என்று கேட்டேன் நான்.
"போங்க தம்பி இன்னும் படம் ஆரம்பிக்கல" என்றார்.

#படம் பார்த்த பத்தாவது நிமிடத்திலேயே படம் தேறாது என்று
தெரிந்த பின்னும் கனவு நாயகி நமீதா இன்னும் வரவில்லை
என்ற ஒரே காரணத்தால் படத்தை விழித்து கொண்டு
பார்த்தோம்.

#என்கிட்டே ஒரு கெட்ட பழக்கம்ங்க படம் மொக்கையா
இருந்துச்சுன்னா கொஞ்சம் கமெண்ட் அடிப்பேன். இந்த படத்துக்கு
சொல்லவே வேணாம். ஆனால் நான் கமெண்ட் அடிப்பதால்
முன்இருக்கை நபருக்கு கோபம் வந்து விட்டது.அது ஒன்னும்
இல்லைங்க மேல ஒரு நமீதா படம் இருக்குல அதுக்கு நான்
ஒன்னும் பெருசா சொல்லலங்க ,பக்கத்துல என் நண்பன்கிட்ட
தான் சொன்னேன்

"மேல பாருடா புலி தோலு, நடுவுல வரிக்குதிரை தோலு,
கிழே கறுப்பாடு தோலு. ஒரு தோலை மறைக்க எத்தனை
தோலு மச்சான்"(ஜெட்லி தத்துவம் நெ:356)

#ஒரு வழியா இன்டெர்வல் முடிஞ்சு வெளியே வந்தோம்,
திரும்பவும் நம்ம செக்யூரிட்டி அங்கிள் என்னை பார்த்து
புன்முறுவல் செய்தார்.
"அண்ணே நீங்க டிக்கெட் எடுக்கும் போதே இந்திரவிழா
இந்திரவிழான்னு சொல்லும் போதே நான் உஷார் ஆகிரிக்கணும் தப்பு பண்ணிட்டேன் தலைவா" என்று அவரிடம் சொன்னேன்.

"இந்த படத்துக்கு வாமனன் எவ்வளவோ மேல்ப்பா"
என்றார் செக்யூரிட்டி.

"படம் எத்தனை மணிக்கு அண்ணே முடியும்" அவரிடம்
கேட்டேன்.

"9.20 க்கு தம்பி"

"இன்னும் ஒரு மணிநேரம் இந்த கொடுமையை பாக்கணுமா?"

"இந்த படம் பரவா இல்லை தம்பி இதுக்கு முன்னாடி ஞாபகங்கள்
அப்படின்னு ஒரு படம் ஒடிச்சு , தொடர்ந்து மூணு நாள் நைட்
ஷோ படம் ஒட்டல.யாரும் தியேட்டர் பக்கம் எட்டி கூட
பாக்கல"

# வழக்கம் போல் அரைமணி நேரம் பின்னாடி (தள்ளிட்டு)
வருபவர்களும்,அரைமணி நேரம் முன்னாடி போறவங்களுக்கும் இந்த படம் ஒரு வரபிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.

# விவேக்கின் மொக்கை காமெடி மேலும் படத்தை மொக்கை
ஆக்குகின்றது.சில காட்சிகள் ரசிக்கலாம்.

# ஸ்ரீகாந்த் பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, இனிமே அவரு
டான்ஸ் ஷோல மட்டும் தான் பாக்க முடியும்.

#கடைசி அரைமணி நேரம் நான் வீட்டுக்கு போய்விடலாம்
என்று எழுந்தேன் பார்த்த கரெக்ட்ஆ ஒரு நமீதா பாட்டு
அப்படியே உட்கார்ந்தேன், ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல
அந்த பாட்டுல.

#இந்திரவிழா ரொம்ப நாளாக படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது,
படத்தை பார்த்த பின் படம் ரிலீஸ் ஆகாமலேயே இருந்திருக்கலாம்
என்று நினைத்தேன்.

ஏ.வி.ஜி லிங்க் ஸ்கானர்

ஏ.வி.ஜி. டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆன்லைனில் நமக்குக் கிடைக்கும் பயமுறுத்தல்களிலிருந்தும் நமக்குத் தெரியாமல் நம் சிஸ்டத்தை வந்தடையும் வைரஸ்களிலிருந்தும் பாதுகாக்கும் வகையில் ஏவிஜி லிங்க் ஸ்கேனர் (AVG Link scanner) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 லட்சம் இன்டர்நெட் வெப் சைட்டுகள் மறைந்திருந்து தாக்கும் பயமுறுத்தல்களால் கெடுக்கப் படுகின்றன. இவற்றில் 60 சதவிகிதம் தளங்களை மூடுகின்றன; அல்லது இணையத்தில் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்கின்றன. இதனால் நாம் அந்த தளங்களுக்கு வழங்கப்பட்ட லிங்க்குகள் பயனற்றதாய் அமைந்துவிடுகின்றன. இது போன்ற தளங்களுக்கு ஒருவர் விசிட் செய்தாலே போதும்; அவரின் கம்ப்யூட்டரிலிருந்தும் தகவல்கள் திருடப்படும். அவர் அந்த தளத்தில் எதனையும் கிளிக் செய்ய வேண்டியதே இல்லை. அந்த தளத்திற்குச் சென்று அதன் தகவல்களைப் பார்த்தாலே போதும்.

இது போல ஓர் இணைய தளத்தில் மறைந்திருந்து தாக்கும் விஷமத்தனமான புரோகிராம்களை வழக்கமான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் முற்றிலுமாகக் கண்டறிய முடியாது. இவற்றினைக் கண்டறிய புதிய வகை பாதுகாப்பு வளையம் தேவைப்படுகிறது. அதனைத்தான் ஏவிஜி நிறுவனம் தற்போது வழங்கியுள்ளது.

ஏவிஜி லிங்க் ஸ்கேனர் ஒருலிங்க் அல்லது ஒரு யு.ஆர்.எல்.முகவரியினைத் தருகையில் அதன் வெப் சைட்டை ஆய்வு செய்து அதில் இது போன்ற மறைந்திருந்து தாக்கும் பயமுறுத்தல்கள் இருக்கின்றனவா என்று பார்க்கிறது.

அப்படி ஒரு பயமுறுத்தல் இருக்கும் பட்சத்தில் இன்டர்நெட் பயன்படுத்துபவரை அந்த தளத்தைத் தங்கள் கம்ப்யூட்டருக்கு இறக்குவதிலிருந்து தடுக்கிறது.இதனால் விஸ்டா மற்றும் எக்ஸ்பியில் செயல்படுபவர்கள் இன்டர்நெட்டில் ஏதேனும் ஒரு லிங்க்கில் கிளிக் செய்தால் உடனே அது பிஷ்ஷிங் போன்ற பயமுறுத்தல்கள் அந்த தளத்தில் உள்ளனவா என்று அறிந்து கொள்ளலாம்.

கூகுள், யாஹூ மற்றும் எம்.எஸ்.என். மூலமாக தளங்களைத் தேடும்போதும் ஏவிஜி லிங்க் ஸ்கேனர் தேடலில் பட்டியலிடப்படும் தளங்களின் பாதுகாப்பு எத்தகையது என்று காட்டுகிறது. அதே போல நாம் புக் மார்க் செய்திடும் தளங்களின் முகவரிகள் மூலம் அந்த தளங்களை ஆய்வு செய்து ஆபத்து உள்ளதா என்று காட்டுகிறது.

இந்நாளில் வைரஸ்கள் மற்றும் பிற மால்வேர்கள் பரவுவதற்குச் சரியான தளங்களாக இணைய தளங்கள் இயங்குகின்றன. இவற்றில் தளங்களிலேயே மறைந்திருந்து தாக்கும் இந்த ஆன்லைன் பயமுறுத்தல்கள் மிகவும் ஆபத்தானவையாகும்.

எனவே தான் இவற்றை எச்சரிக்கும் பாதுகாப்பு வளையத்தினை வழங்குவதனை முதல் பணியாக மேற்கொண்டு இந்த ஏவிஜி லிங்க் ஸ்கேனரைத் தந்துள்ளோம் என்று இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த லிங்க் ஸ்கேனர் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இந்த பாதுகாப்பு வளையத்தின் செயல்பாடுகள் குறித்த உதவிக் கிடைக்கின்றன.இந்த பாதுகாப்பு வளையத்தினை விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா (32/64 பிட் தொகுப்பு) ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

உதவிக் குறிப்புக்களுக்கு : இங்கே கிளிக் செய்யவும்

இதைவிட மெக்கபி ஏற்கனவே சைட் அட்வைஸர் என்ற மென்பொருளை இலவசமாக தருகிறது.இதில் மிக கூடுதல் வசதி வேண்டும் என்றால் மட்டும் பணம் கொடுத்து ப்ரபெசனல் பதிப்பு வாங்க வேண்டும்.























மற்றபடி இதனை அப்படியே இலவசமாக பாவிக்க எந்த கட்டணமும் இல்லை.இதில் ஒவ்வொரு தளத்துக்கும் நுழைய முன்னரே சிவப்பு பச்சை என அந்த தளத்தின் நம்பகத்தனமையை காட்டி விடும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

மீண்டும் இணையும் கஜினி நாயகர்கள் - மும்மொழியில் உருவாகிறது

கஜினியைக் கொடுத்த இரு பெரும் நாயகர்களான சூர்யாவும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், மீண்டும் ஒரு மெகா திட்டத்திற்காக இணைகிறார்கள்.

ஒவ்வொரு மொழியாக அடித்தால் போதாது என்றோ என்னவோ, ஒரே நேரத்தில் மூன்று மொழிகளையும் கலக்கும் நோக்கில், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளி்ல இந்தப் படம் உருவாக்கப் போகிறார் முருகதாஸ்.

கஜினி, சூர்யாவுக்கு மிகப் பெரிய பிரேக். அதேபோல இந்தியிலும் கஜினியின் ரீமேக் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தமிழில் கஜினியின் நாயகனான சூர்யாவும், முருகதாஸும் மீண்டும் கை கோர்க்கிறார்கள். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் இப்படம் உருவாகிறது.

படத்தைத் தயாரிக்கப் போவதும் ஒரு பெரும் புள்ளிதான். துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், குருவி படத் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்தான் இந்த மெகா படத்தைத் தயாரிக்கிறார்.

இதுகுறித்து முருகதாஸ் கூறுகையில், ஆமாம், 3 மொழிகளில் இப்படத்தை உருவாக்கப் போகிறோம். சூர்யாதான் 3 மொழிகளிலும் நாயகன். மற்ற கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இது ஒரு முழுமையான ஆக்ஷன் படம். என்ன மாதிரியான ஆக்ஷன் என்பதை தற்போது இறுதி செய்து கொண்டிருக்கிறோம் என்றார் முருகதாஸ்.

சரி, ஷாருக்கானுடன் இணைவது என்னவாயி்ற்று என்று கேட்டபோது, ஷாருக்குடன் ஒரு கதையை டிஸ்கஸ் செய்தேன். அந்தக் கதையை இப்போது படமாக்கப் போகிறோம். எப்போது என்று கூற முடியாது.

நிச்சயம் இது ரமணாவின் ரீமேக் இல்லை. முற்றிலும் புதிய கதை. ஒரிஜினல் கதை என்றார் முருகதாஸ்.

தற்போது சூர்யா ஆதவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து ஹரி இயக்கத்தில் சிங்கத்தில் நடிக்க வேண்டியுள்ளது. இவற்றை முடித்த பின்னர் முருகதாஸ் படத்துக்கு வருகிறார் சூர்யா.

Sunday, July 12, 2009

பொன்னர்-சங்கர்: கருணாநிதி தொடங்கி வைத்தார்

பிரசாந்த் நடிக்கும் பொன்னர் சங்கர் வரலாற்றுத் திரைப்படத்தை தமிழக முதல்வர் கருணாநிதி இன்று துவக்கி வைத்தார்.

முதல்வர் கருணாநிதி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவல் 'பொன்னர்-சங்கர்'.

கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த பொன்னர்- சங்கர் சகோதரர்களின் வீர வரலாற்றைச் சித்தரிக்கும் இந்த வீர காவியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகுந்த முக்கியம் வாய்ந்த பதிவாகப் பார்க்கப்படுகிறது.

கலைஞரை விமர்சிப்போரும் கூட போற்றிப் பாராட்டும் அளவு சிறப்பு பெற்றது பொன்னர் - சங்கர் நாவல்.

கொங்கு மண்டலத்தின் கலை, கலாச்சாரம், பண்பாட்டை மிக நுணுக்கமான முறையில் சித்தரித்திருப்பார் இந்த நூலில் கலைஞர்.

இந்த நாவலைப் படமாக்க பல இயக்குநர்கள் ஆர்வம் காட்டிய போதும், அந்த வாய்ப்பு நடிகர் தியாகராஜனுக்குக் கிடைத்துள்ளது. அவர் மகன் நடிகர் பிரசாந்த் பொன்னர்-சங்கர் ஆகிய இரு வேடங்களில் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

தியாகராஜன் தயாரித்து இயக்குகிறார்.

இந்த படத்தின் தொடக்க விழா வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடந்தது.

படப்பிடிப்பை முறைப்படி துவக்கி வைத்த கருணாநிதி, விழாவில் பேசியதாவது:

பொன்னர்-சங்கர் படத்தொடக்க விழா வள்ளுவர் கோட்டத்தில் நடப்பது மனதுக்கு இதம் தரும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடராக எழுதப்பட்ட வரலாற்று ஓவியம் நிழற்படமாக, பேசும் படமாக, பலரும் இதுபற்றி பேசும் படமாக வெளிவர இருக்கிறது என்பதை நண்பர்கள் எடுத்துரைத்தார்கள்.

இந்த படத்தில் பல கதாபாத்திரங்கள் உலா வர உள்ளன. ஒவ்வொரு பாத்திரத்தையும் ஏற்று நடிப்பவர்கள் தகுதியானவர்கள்-பண்பட்ட நடிகர்கள். அவர்களை எல்லாம் இணைத்து இயக்குனர் தியாகராஜன் இயக்குகிறார்.

ஏற்கனவே 2 வேடங்களில் ஜீன்ஸ் படத்தில் நடித்து பெரும்புகழ் பெற்றவர் பிரசாந்த். இந்த படத்தில் பொன்னராகவும், சங்கராகவும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

முன்பு நடித்ததை விட இந்த படத்தில் பெரும் புகழை ஈட்டி தருவானாரால் அதைவிட எனக்கு வேறு பெருமை இல்லை. பிரசாந்த் நல்ல நடிகர். படித்த இளைஞர். மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். இடைப்பட்ட காலத்தில் கலைத்துறையில் இருந்து ஒதுங்கி காணப்பட்டாலும் இந்த படத்துக்கு பிறகு கலை உலகம் அவரை முழுமையாக பயன்படுத்தியே தீரும். அத்தகைய கட்டாயத்தை இந்தப் படம் ஏற்படுத்தும்.

வள்ளுவர் கோட்டத்தின் பின்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை சுற்றி பார்த்தாலே புரிந்துவிடும், தியாகராஜன் தயாரித்து தரும் இந்த படம் எத்தனை பிரமாண்டமாக அமையும்....பெரும் வெற்றியை பெறும் என்று!

தியாகராஜன் நல்ல இயக்குனர். திறமையான கலைஞர். அவரது உழைப்போடு, ஒத்துழைப்போடு இந்த படத்தின் வெற்றி விழாவிலும் கலந்து கொண்டு வாழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன், என்றார் கருணாநிதி.

தலையூர் காளியாக நெப்போலியன்...

இந்த படத்தில் மத்திய அமைச்சர் நெப்போலியன் தலையூர் காளி என்ற முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் ராஜாவாக நடித்த முதல் காட்சி இன்று கருணாநிதி முன்னிலையில் படமாக்கப்பட்டது.

ஏவி.எம்.சரவணன் கிளாப் செய்ய கருணாநிதி கேமராவை இயக்கி வைத்தார். மேடையில் ராஜ கம்பீரத்தோடு நெப்போலியன் கேமிரா முன்பு தோன்றியதை அங்கு திரண்டு இருந்தவர்கள் கைதட்டி ஆராவரம் செய்தனர்.

ராஜ்கிரண்

பொன்னர்-சங்கர் படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிப்பவர் ராஜ்கிரண். கலைஞரே இவரைத்தான் அந்த குறிப்பிட்ட வேடத்துக்கு பரிந்துரைத்தாராம்.

சத்யராஜ், பிரகாஷ்ராஜ், பொன் வண்ணன், ரியாஸ்கான், மனோரமா, குஷ்பு, அம்பிகா, சீதா உள்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்.

விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன், பாக்யராஜ், அபிராமி ராமநாதன், ஏவி.எம்.சரவணன், ராஜ்கிரண் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்கள்

சானியா விருப்பப்படி 2011ல் திருமணம்

ஹைதராபாத்: இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸாவின் திருமணம் அவரது விருப்பப்படி இரண்டு ஆண்டுகளுக்கு பின் 2011ல் நடக்கும் என அவரது தந்தை இம்ரான் மிர்ஸா தெரிவித்துள்ளார்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் நிச்சயதார்த்தம் நேற்று நடந்து முடிந்தது. அவருக்கும், அவரது சிறுவயது தோழர் சோரப் மிஸ்ரா என்பவருக்கும் திருமணம் முடிவானது.

நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக சானியாவுக்கு ரூ. 20 லட்சம் பிரத்யேக ஆடை தயாரிக்கப்பட்டிருந்தது. பிரபல பேஷன் டிசைனர் சாந்தனு-நிகில் இந்த உடையை வடிவமைத்திருந்தனர். மணமகன் சோரப் இதை சானியாவுக்கு பரிசாக வழங்கினார்.

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் தேதி குறித்தும் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்து சானியாவின் தந்தை இம்ரான் மிர்ஸா கூறுகையில்,

எங்கள மத வழக்கப்படி சானியாவின் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக முடிந்தது. அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் டென்னிஸ் விளையாட வேண்டும் என விரும்புகிறார். அதனால் திருமணத்தை 2 ஆண்டுகளுக்கு பின் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அவரது விருப்பப்படி இரண்டு ஆண்டுகள் பின் தான் திருமணம் நடக்கும். அவர் அடுத்த மாத கடைசியில் துவங்கும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடுவார். சோரப் மிஸ்ராவும் தற்போது எம்பிஏ படிக்க இங்கிலாந்து செல்கிறார். அவரும் இரண்டு ஆண்டுகளில் படிப்பை முடித்துவிடுவார் என்றார் இம்ரான் மிர்ஸா.

புதிய வலைப்பதிவர்கள் தமது வலைப்பதிவில் followers வசதியை பெறுவது எப்படி.

இன்று புதிய பதிவர்கள் எல்லோரும் தேடிக்கொண்டிருக்கும் ஒரு விடயம்தான் தங்களது வலைப்பதிவிலே followers இல்லையே என்ற பிரட்சனை.

இதனை Google Friend Connect மூலமாக இலகுவாக ப்ளக்குகளிலே இணைத்துக்கொள்ள முடியும். இது பலருக்குத் தெரிந்து இருந்தாலும் சில புதிய பதிவர்களுக்கு தெரியாது. இதனை எப்படிப்பெறலாம் என்று தலையை பிய்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

நானும் ஆரம்பத்திலே எனது ப்ளாக்கிலும் followers widget இல்லாமல் பல மாதங்களாக எங்கே பெறுவது இந்த widget ஐ என்று தேடிக்கொண்டிருந்தேன். ஒரு வாறாக கண்டு பிடித்து விட்டேன் அதனை புதிய பதிவர்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்

இதனை எப்படி எமது பிளக்கிலே இணைத்துக் கொள்ளலாம் என்பதை படங்கள் மூலமாக தருகின்றேன்.

முதலில் இங்கே செல்லுங்கள்...









இங்கே கிடைக்கின்ற HTML ஐ உங்கள் வலை பக்கத்தில் add widget இல் சேர்த்து விடுங்கள் இப்போ உங்கள் வலைப்பக்கத்திலும் followers....

இதில் இன்னுமோர் நன்மையும் இருக்கிறது நாம் ப்ளாக்கரில் இல்லாமல் வேறு இடங்களில் இருந்து Template download பண்ணி Template மாற்றுகின்ற பொழுது எமது வலைப்பதிவில் followers இல்லாமல் போகும் சந்தர்ப்பங்களில் எமது வலைப்பதிவில் ஏற்கனவே இருந்த followers இல்லையே என்று கவலைப்பட வேண்டியதில்லை. Google Friend Connect இல் எமது கணக்கின் மூலமாக உள் நுழைந்து இளந்த followers பெற முடியும்.


புதிய வலைப்பதிவர்கள் முயற்சி செய்து பாருங்கள்...

மயங்கி விழுந்தார் சோனா!

வெறும் வயிறுடன் நடனம் ஆடியதால் மயக்கம் போட்டு விழுந்து விட்டார் சோனா.

கவர்ச்சி நடிகை சோனா வெறும் வயிற்றுடன் நடனம் ஆடியதால், மயங்கி விழுந்தார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

சோனா அதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும் குசேலன்தான் அவரை தூக்கி விட்டது. இதையடுத்து தொடர்ந்து கவர்ச்சிகரமாக நடித்து வருகிறார் சோனா.

தற்போது வீர சோழன் என்ற படத்தில் கொய்யாப்பழ வியாபாரி வேடத்தில் நடிக்கிறார் சோனா. இதற்காக மானாமதுரை பகுதியில் பாட்டுப் பாடியபடி கொய்ப்பாழத்தை கையில் ஏந்தி சோனா விற்பது போல படமாக்கினர்.

சமீப காலமாக சோனா கடும் டயட்டில் இருக்கிறார். உடல் எடையைக் குறைப்பதற்காக இந்த டயட். மேலும், டான்ஸ் ஆடும்போதும் அவர் சாப்பிட மாட்டார். வெறும் ஜூஸ் மட்டும்தான் குடிப்பாராம்.

அதேபோல நேற்றும் கடும் வெயிலில், வைகை ஆற்றங்கரை ஓரமாக பாடலைப் படம் பிடித்தனர்.

அப்போது ஆடிக் கொண்டிருந்த சோனா திடீரென மயக்கம் போட்டு விழுந்து விட்டார். உடனே முகத்தில் தண்ணீரை அடித்து எழுப்பினர். டாக்டரை அழைத்து பரிசோதித்தபோது, வெறும் பசி மயக்கம்தான், வேறு ஒன்றும் இல்லை என்று கூறி அனைவரையும் நிம்மதியடைய வைத்தார்.

பின்னர் ரெஸ்ட் எடுத்த சோனா அதன் பின்னர் பாடல் காட்சியில் பங்கேற்று ஆடி முடித்தார்.

உலகின் மிக வினோதமான 10 பாலங்கள் - அறிவியல் அதிசயம்

Most weirdest Bridges in the world









விண்டோஸ் 7 - கணினி திரையை தொட்டு இயக்கலாம்

மைக்கிரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 என்னும் இயங்கு தளத்தை தொடுதிரை வசதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் படி கணினி திரையை தொட்டு இயக்கலாம்.
கணினியின் ஒரு பகுதியில் உள்ள தகவலை வேறொரு பகுதிக்கு நகர்த்துவதற்கு எமது கை விரலினால் அவற்றை தொட்டு இலகுவாக நகர்த்தலாம். இதற்கு விசைபலகையினதோ அல்லது சுட்டெலியினதோ உதவி தேவையேயில்லை



Thursday, July 9, 2009

ரஜினியை அழ வைத்த இயக்குநர்


நல்ல மெசேஜ் சொல்லும் படமோ, கமர்ஷியல் படமோ...ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டாலே அந்தப்படத்தின் இயக்குநரை அழைத்து பாராட்டுவது ரஜினியின் வழக்கம். அந்த மாதிரியான சமயங்களில் தனக்கு ஏதும் கதை வைத்திருக்கிறீர்களா என்று கேட்பதும் ரஜினியின் வழக்கம்.

இதனால் சில இயக்குநர்கள் ரஜினிக்கு கதை சொல்லியிருக்கிறேன் என்று பத்திரிக்கைகளில் சொல்லிவிடுவதால் சில காலங்கள் பாராட்டுவதை தவிர்த்து வந்தார். ஆனாலும் அவரால் ரொம்ப காலத்திற்கு அப்படி இருக்க முடியவில்லை.

நான் கடவுள் பார்த்துவிட்டு தமிழ்சினிமாவில் இப்படி ஒரு படம் இனி வருவதற்கு வாய்ப்பில்லை என்று பாராட்டித்தள்ளினார். வரிசையாக இன்னும் நிறைய படங்களை வாழ்த்தினார்.

தற்போது பசங்க படத்தை பார்த்துவிட்டு அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜை அழைத்து பாராட்டியிருக்கிறார்.

தனது படத்தின் வால் டீமோடு போய், வாயார பாராட்டுகளை வாங்கிய பாண்டிராஜ், அப்படியே ரஜினியை அழ வைத்துவிட்டார்.


சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த பாண்டிராஜ், ஏவிஎம் ஸ்டுடியோவில் வாட்ச் மேனாக வேலை பார்த்திருக்கிறார். சென்னைக்கு போயும் மகன் நல்லபடியாக வாழ வில்லையே என்ற
ஏக்கத்தில் அவரது தாயார் இறந்துவிட்டாராம்.

பிறகு பாக்யராஜிடம் வேலைக்கு சேர்ந்து எப்படியோ முன்னேறி பட வாய்ப்பையும் பெற்ற பாண்டி, அந்த சந்தோஷத்தை அப்பாவிடம் சொல்லலாம் என்று போனால், அதை உணரவே முடியாத மனநோயாளி ஆகியிருந்தாராம் அவர்.

கவலையோடு சென்னை திரும்பிய பாண்டிராஜ் திரும்ப ஷ¨ட்டிங் போகும்போது அவரது அப்பா காணாமலேயே போயிருந்தார். எங்கெங்கோ தேடி அழைத்து
வந்து வீட்டில் வைத்திருந்தாராம்.

அப்பாவின் கண் எதிரிலேயே தனது பசங்க பட ஷ§ட்டிங்கையும் நடத்தியிருக்கிறார். அவருக்கு புரியவில்லை என்றாலும், இதை பார்த்தாவது பழைய நிலைக்கு வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கம்தான்.

ஆனால், இந்த நம்பிக்கையையும் ஏமாற்றிவிட்டு ஒரு நாள் இறந்தே போனார் இவரது அப்பா. ஊர் உலகமே எனது படத்தை பாராட்டுகிறது. நான் நன்றாக இருப்பதை அறியாமலே
இறந்துவிட்டார்கள் எனது பெற்றோர் என்று பாண்டிராஜ் கண் கலங்க, அழுதே விட்டாராம் ரஜினி.

சிக்கலில் ஆயிரத்தில் ஒருவன்?

புதிய முயற்சிக்கு முதலில் கைகொடுக்கத் தயங்குவதும், அந்த முயற்சி வெற்றி பெறுவது போலத் தெரிந்தால் சொந்தம் கொண்டாட ஓடி வருவதும் தமிழ் சினிமாவுக்குப் புதுசா என்ன!

அந்த வகையில், 32 கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்ட புதுமையான படம் என செல்வராகவன் வர்ணித்த ஆயிரத்தில் ஒருவனை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பேச்சு.

கார்த்தி, ரீமா சென் ஆகியோர் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க பார்த்திபன், ஆண்ட்ரியா ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆனால், இந்தப் படம் வழக்கமான செல்வராகவன் டைப் காதல் படம் இல்லை என்பதே பல விநியோகஸ்தர்களின் குற்றச்சாட்டாக உள்ளதாம். (இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என இயக்குநரையே நிர்பந்திக்கும் விநியோகஸ்தர்களை இங்குதான் பார்க்க முடியும்!)

'சரித்திரப் படமாக ஆரம்பிக்கும் இந்தக் கதை, மக்களை எந்த அளவு கவரும் என கணிக்க முடியாததால், இந்த நெருக்கடியான சூழலில் இருக்கிற பணத்தைத் தொலைக்காமல் இருந்தால் போதும் என்ற முடிவோடு அமைதி காக்கிறோம்', என்றார் ஒரு விநியோகஸ்தர்.

இதனால் ஆடியோ வெளியாகி ஒருமாதமான பிறகும் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரனால் ரிலீஸ் குறித்து ஏதும் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை.

எனவே தனது சிறிய பட்ஜெட் படமான வாமனனை இப்போதைக்கு ரிலீஸ் செய்யும் தீவிரத்தில் உள்ளார் ரவீந்திரன்.

இருக்கிற டிவி சேனல்களும் படத்தை அடிமாட்டு விலைக்கு கேட்பதால் சொந்தமாகவே ரிலீஸ் செய்யலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.

நமீதாவே உன்னை நம்பி...

நமீதாவின் முழுக் கவர்ச்சியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படமான இந்திரவிழா நாளை வெளியாகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே ராஜேஸ்வர் இயக்கியிருக்கும் படம் இந்திரவிழா. இதில் நாயகனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக ஹேமமாலினி களமிறங்கியுள்ளார்.

ஹேமமாலினி இருந்தாலும் கூட நமீதாவின் கவர்ச்சி எல்லை கடந்த தீவரவாதம் போல படு உக்கிரமாக இருக்கிறதாம். கவர்ச்சியில் நமீதாவுடன் மல்லுக்கட்டும் அளவு ஆடைக் குறைப்பு புரட்சி செய்துள்ளாராம் ஹேமமாலினி. ஆனாலும் நமீதாவின் கவர்ச்சிதான் இந்தப் படத்துக்கு சகலமுமாக இருக்கிறது.

படத்தின் விளம்பர டிசைன்கள், பேனர்கள், கட் அவுட்டுகளில் தம்தூண்டு ட்ரெஸ்ஸில் நமீதா கிக்காக போஸ் கொடுக்கும் ஸ்டில்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

கெளரவ நடிகர் ரேஞ்சுக்கு சின்ன ஸ்டாம்பு சைசில் கதாநாயகனின் படத்தைதப் போட்டு வைத்துள்ளனர். சில போஸ்டர்களில் அதையும் காணோம்.

படத்தின் முக்கால்வாசி காட்சிகளில் நமீதாவுக்கு நீச்சலுடைக்கு சமமான காஸ்ட்யூம் மட்டும்தான் என்பதால், கவர்ச்சிப் பிரியர்கள் கல்லாவை நிரப்பி விடுவார்கள் என நம்புகிறார் ராஜேஸ்வர்.

'இனி அல்லாரும் மச்சான்ஸ்...!'

இதற்கிடையே, இனிமேல் நடிகை நமீதா ஆண்களை அண்ணா என்று அழைக்க மாட்டாராம். மாறாக காதுகள் இனிக்கும் வகையில் மச்சான்ஸ் என்றுதான் அழைக்கப் போகிறாராம்.

சிவாஜி கணேசன் தனது ரசிகர்களை பிள்ளைகளே என்று அன்பாக அழைப்பார். ரஜினியோ கண்ணா என்பார். விஜய்யோ 'ண்ணா' என்பார்.

இப்படிப்பட்ட தமிழ் சினிமா பரம்பரையில் வந்தவரான நமீதா தனது ரசிக மக்களை, குறிப்பாக ஆண்களை மச்சான்ஸ் என்று எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக கூப்பிட்டு வருகிறார். இருப்பினும் படப்பிடிப்புத் தளத்தில் மட்டும் சிலரை அண்ணா என்று அவர் அழைப்பதாக அப்படி அழைக்கப்பட்டவர்கள் மன வருத்தம் அடைந்ததாக செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் அவர்களின் மனம் குளிரும்படியான ஒரு செய்தியை அவிழ்த்து விட்டுள்ளார் நமீதா.

எனக்கு ஆண்கள் அனைவருமே மச்சான்ஸ்தான். யாரையும் அண்ணா என அழைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் நமீதா.

ஜெகன்மோகினி படப்பிடிப்பின்போது, தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் நமீதா பேசுகையில், வடிவேலு சார் காமெடி எனக்கு மிகவும் பிடிக்கும். நான்தான் இப்படத்தில் வடிவேலு சாரும் கண்டிப்பாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

ஆனால், அண்ணன், தங்கை வேடத்தை எங்களுக்குக் கொடுக்காதீர்கள், காமடியாக வையுங்கள் என்று கூறியிருந்தேன். இருந்தாலும் இப்படத்தில் எனக்கு அண்ணனாகத்தான் அவர் வருகிறார்.

ஆனால் அவரை அண்ணா என்று நான் அழைக்க மாட்டேன். சார் என்றுதான் கூப்புடுவேன். என்னைப் பொருத்தவரை ஆண்கள் எல்லோருமே எனக்கு மச்சான்ஸ்தான். யாரையும் அண்ணா என கூப்பிட மாட்டேன்.

எனக்குக் கல்யாணமாகும் வரை எனது உடலை அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் வைத்துக் கொள்ளும் கடமை எனக்கு உள்ளது. கல்யாணத்தை ரகசியமாக நடத்த மாட்டேன். எல்லோரையும் கூப்பிட்டு விருந்து வைப்பேன் என்று கூறுகிறார் நமீதா.

நமீதாவின் இந்த இனிப்பான செய்தி வந்த நாள்தான் ரசிகர்களுக்கெல்லாம் இனிய நாள்...

அடுத்த ஆண்டில் கூகிள் ஆபரேடிங் சிஸ்டம் -கூகிள் அறிவிப்பு


Jul 8, 2009




கூகிள் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது .அடுத்த ஆண்டு நடுவில் கூகிள் (Chrome OS) ஆபரேடிங் சிஸ்டம் வெளியிடுகிறோம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.ஓபன் சோர்ஸ் முறையில் அந்த (os) இயங்கும் என்று அறிவிக்க பட்டுள்ளது.மேலும் இந்த புதிய (os)லைட் வெயிட் ஆகா இருக்கும் லினக்ஸ் கெர்னலை அடிபடையாக கொண்டு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் புதிய ப்ராஜெக்ட் கூகிள் (android) லிருந்து வித்யாசபடும் என்றும் அறிவித்துள்ளது .

புதிய இயங்குதளம் மூலம் இணையம் தொடர்பான சேவைகளை உடனடியாக பெறமுடியும் என்றும் .மேலும் வைரஸ் போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்கும் வகையில் இந்த இயங்கு தளம் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இந்த இயங்குதளத்தின் முக்கிய குறிக்கோள் வேகம்,பாதுகாப்பு,எளிமை. அதாவது இந்த புதிய (os) இயக்குவதற்கு வேகமாகவும் ,வைரஸ் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பாவும் ,பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும் இருக்கும்.இந்த இயங்கு தளம் இணையத்தை அடிபடையாக கொண்டு இயங்கும் என்றும் அதனால் ஏற்கனவே உள்ள இணையம் தொடர்பான (web based applications)மென் பொருட்கள் எந்த மாற்றமும் செய்யாமல் இதில் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடுவில் (netbooks)இக்கு கூகிள் கிரோம் (0s)வெளியிடப்படும் பின்பு ஆல்பா பதிப்பு வெளியிட்டு பல்வேறு விதமான சோதனைகள் மேற்கொள்ள படும் என்று கூறியுள்ளது .

கூகுளின் இந்த அதிரடி அறிவிப்பால் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும் கூகுளுக்கும் கடும் போட்டி நிலவும்.கூகுளின் சவாலை மைக்ரோசாப்ட் சமாளிக்குமா ? என்பதை பொறுத்து இருந்து பார்போம் .

மேலும் தகவல்களுக்கு கூகுளின் ப்ளாக் சென்று பார்க்கவும்.
-http://googleblog.blogspot.com/2009/07/introducing-google-chrome-os.html

ரஹ்மானுக்கு டாக்டர் பட்டமளித்து கவுரவித்த லண்டன் பல்கலைக்கழகம்


ர்வதேச திரையுலகில் இந்தியாவை தலைநிமிரச் செய்த ஆஸ்கர் arr-at-middlesex-031நாயகன் ஏஆர் ரஹ்மானுக்கு பிரிட்டனின் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம் நேற்று டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

இசைத் துறையில் ரஹ்மான் செய்துள்ள அபார சாதனைகளுக்காக இந்த பெருமைக்குரிய விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இதற்கான விழா லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் விமரிசையாக நடந்தது. arr-2

மிடில்செக்ஸ் பல்கலைக் கழக துணைவேந்தர் ரஹ்மானுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். இந்த விருதினைப் பெறும் அளவுக்கு ரஹ்மான் என்னென்ன சாதனைகள் புரிந்தார் என்பதையும் பல்கலைக் கழகம் சிறு கையேடாகவே வழங்கியிருந்தது.

விழாவில் சென்னையிலிருந்து ஆடியோ மீடியா நிறுவனத்தைச் சேர்ந்த செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழா நிறைவில், மிடில்செக்ஸ் பல்கலைக் கழக துணைவேந்தர், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் ரஹ்மானுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஆஷஸ்:பாண்டிங், காடிச் சதம்-ஆஸி. பதிலடி

கார்டிப்: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் கேப்டன் பாண்டிங், சைமன் காடிச் சதம் கடந்து அசத்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 435 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் கார்டிப் நகரில் நடக்கிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து, துவக்கத்திலே பிளின்டாபின் விக்கெட்டை இழந்தது. அவர் 37 ரன்களுக்கு அவுட்டானார். ஆண்டர்சன் 26, பிராட் 19 ரன்கள் எடுத்தனர்.

கடைசிநேரத்தில் களமிறங்கிய சுவான் அதிரடியாக பேட் செய்தார். அவர் 40 பந்தில் 47 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து 106.5 ஓவரில் 435 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

அடுத்து பேட் செய்த ஆஸ்திரேலியாவுக்கு ஹக்ஸ், காடிச் ஜோடி சிறப்பான துவக்கம் தாந்தது. ஹக்ஸ் 36 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்த வந்த பாண்டிங், காடிச்சுடன் இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை விளாசி தள்ளியது. இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இருவரும் சதம் கடந்த அசத்தினர். இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 71 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. காடிச் 104, பாண்டிங் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.