Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, July 2, 2009

கணினித் திரை நடவடிக்கைகளை நகர்படமாக்குவதற்கு


Camstudio என்பது ஒரு இலவச மென்பொருள். இதன் நிரலும் இலவசமாக வழங்கப்படுகிறது . கணினித் திரையில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒரு நகர்படமாக படம்பிடிப்பதற்கு (Screencast) இந்த மென்பொருள் உதவும். இதன் நடப்பு பதிப்பானது வெறும் 1.3 MB அளவு கொண்டது.

இதை ஒரு USB memory கருவியில் அடைத்து எளிதாகப் பயன்படுத்தலாம். இதன் புதிய பதிப்பான 2.0 ல், கணினித் திரையின் நடவடிக்கைகளை SWF (Shockwave Flash file ) கோப்பாக பதிந்திடும் வசதி உள்ளது. இதை Flash player வாயிலாக காண முடியும். கணினித் திரை நடவடிக்கைகளை AVI (Audio Video Interleave) ஆகவும் பதிந்திடலாம்.


இது 100% இலவசமான ஒரு மென்பொருள். உரிமம், உறுப்பினராதல் (license, registration) பற்றிய கவலையின்றி இதை அப்படியே பயன்படுத்தலாம்.

Download Link: http://camstudio.org/
AmazingPhotos

ஜாக்சன் உடல் அடக்கம் நெவர்லேன்டில் கிடையாது - ரசிகர்கள் ஏமாற்றம்

லாஸ் ஏஞ்சலெஸ்: மைக்கேல் ஜாக்சனின் உடல் அவரது பண்ணையான நெவர்லேன்டில் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது இன்னும் முடிவாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குவிந்துள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஜாக்சன் மரணம் குறித்த சர்ச்சையால் அவரது உடலை ரசிகர்கள் பார்வைக்கு வைப்பது தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் நாளை ஜாக்சனின் உடல் அவரது பண்ணையான நெவர்லேன்டில் பார்வைக்கு வைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

ஏற்கனவே இதை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நெவர்லேன்டில் குவிந்துள்ளனர். நாளை ஜாக்சனின் உடலை கடைசி முறையாக தரிசித்து விட வேண்டும் என ஆர்வத்துடன் உள்ளனர்.

ஆனால் இப்போது திடீரென அந்தத் திட்டம் ரத்தாகி விட்டதாம். இதுகுறித்து ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்னர்.

உடல் அடக்கம் குறித்து ஜாக்சன் குடும்ப செய்தித் தொடர்பாளர் கென் சன்ஷைன் கூறுகையில், வெள்ளிக்கிழமை வரை நெவர்லேன்டில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்கப் போவதற்கான அறிகுறிகள் இல்லை, அப்படி ஒரு திட்டமும் இதுவரை இல்லை என்றார்.

இதற்கிடையே, லாஸ் ஏஞ்சலஸிலேயே ஜாக்சனின் உடல் அடக்கம் நடைபெறும் எனவும் ஒரு தகவல் கூறுகிறது.

நெவர்லேன்ட் எஸ்டேட்டுக்கு ஜாக்சன் மட்டும் உரிமையாளர் இல்லை. தாமஸ் பாரக் என்ற கோடீஸ்வரரும் இதில் பங்குதாரர் ஆவார். எனவ அவரிடம் ஜாக்சன் உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாம். இருப்பினும் இதுதொடர்பாக சிக்கல் நிலவுவதால்தான் அங்கு உடல் அடக்கம் நடைபெறாது எனக் கூறப்படுகிறது.

ஜாக்சன் வீட்டில் சக்தி வாய்ந்த மருந்து கண்டுபிடிப்பு..

இதற்கிடையே, அறுவைச் சிகிச்சை போன்ற சமயங்களில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த மயக்க மரு்நது ஒன்று ஜாக்சன் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இது அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டால் உயிருக்கே உலை வைத்து விடுமாம்.

அந்த மருந்தின் பெயர் புரபோபால். அறுவைச் சிகிச்சைக்கு முன்பு இந்த மருந்து நோயாளிகளுக்கு அளிக்கப்படுவது வழக்கம். ஆனாலும் அளவு அதிகமாகி விட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

இந்த மருந்து ஜாக்சன் வீட்டில் இருந்ததாக ஒரு இணையதளம் தெரிவித்துள்ளது. இது எப்படி ஜாக்சன் வீட்டுக்கு வந்தது. இதை ஜாக்சன் பயன்படுத்தி வந்தாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Firefox 3.5 தமிழில் (பீட்டா)



நண்பர் தமிழ்நெஞம் அவர்கள் நெருப்பு நரி 3.5 வெளிவந்ததை அறிமுகப்படுத்தினார், ஆனால் தமிழில் வெளிவந்ததை அவர் குறிப்பிட தவறிவிட்டார். நெருப்பு நரி பீட்டா மொழிகளில் தமிழ் நெருப்பு நரி 3.5 வெளிவந்துள்ளது.

இதில் பிரச்சனை என்னவென்றால் தமிழ் நெருப்பு நரி 3.5 (பீட்டா) இரண்டு பதிப்புகளாக வெளியிட்டுள்ளனர்.



தமிழ் நெருப்பு நரி 3.5 (பீட்டா)

Firefox 3.5 தமிழில் (பீட்டா)

http://ta.www.mozilla.com/ta/

தமிழ் (இலங்கை) நெருப்பு நரி 3.5 (பீட்டா)

தமிழ் (இலங்கை) நெருப்பு நெரி 3.5 (பீட்டா)

http://ta-lk.www.mozilla.com/ta-LK/

இவ்விரு பதிப்புகளிளும் சிறு சிறு வித்தியாசங்கள் மட்டுமே இருக்கும் என நம்புகிறோம்.

தமிழ் நெருப்பு நரி 3.5 (பீட்டா) சாளரம்

hதமிழ் நெருப்பு நெரி 3.5 (பீட்டா) சாளரம்

தமிழ் (இலங்கை) நெருப்பு நரி 3.5 (பீட்டா) சாளரம்

தமிழ் (இலங்கை) நெருப்பு நெரி 3.5 (பீட்டா) சாளரம்

உபுந்து 9.04ல் நெருப்பு நரி 3.5 எப்படி நிறுவுவது பற்றி எங்களது ஆங்கில தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


THANKS:கார்த்திகேயன்:

இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் - சிரஞ்சீவி

ஹைதராபாத் : "ஒருவர் இரண்டு குதிரைகள் மீது சவாரி செய்ய முடியாது. அதே போலத்தான் நானும் இரு தொழில்களில் கவனம் செலுத்த விரும்பவில்லை. அரசியல்தான் இனி என் முழு நேரப் பணி. சினிமாவில் இனி நடிக்க மாட்டேன்" என பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி தெரிவித்தார்.

ஹைதராபாத் கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் சிரஞ்சீவி கூறியதாவது:

சினிமா துறை என் பிறந்த வீடு; அரசியல் புகுந்த வீடு. பிறந்த வீடு எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு சென்ற பின்னால் கணவரை பிரிந்து, பிறந்த வீட்டிற்கு போக முடியாதல்லவா? அதுபோலத்தான் நான் அரசியலுக்கு வந்ததில் தவறேதுமில்லை.

தற்போது என் எண்ணமெல்லாம் கட்சியை முழு அளவில் பலப்படுத்தி ஆட்சியைப் பிடித்து மக்களுக்கு பணி செய்வதில்தான் உள்ளது. மீண்டும் சினிமாவில் நடிக்கச் செல்வது தர்மமான செயல் இல்லை.

சமீபத்தில் ஆடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது மேலும் ஒரு சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்கும் என, வாய் தவறி கூறி விட்டேன். ஆனால், எதிர்காலத்தில் நிலைமை எப்படி இருக்குமோ சொல்ல முடியாது. என் உண்மையான நோக்கம், மனநிலை எல்லாமே இப்போது அரசியல்தான்.

கடந்த தேர்தலில் 'ரயில் இன்ஜின்' சின்னத்தால் ஏற்பட்ட குளறுபடியால் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது. தேர்தல் கமிஷனரிடம் புதிய சின்னம் கேட்க நான்கு சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

உதயசூரியன், குடை சின்னங்களை கேட்டு தலைமை தேர்தல் கமிஷனருக்கு கடிதம் எழுதி உள்ளோம். கட்சியினர் அனைவரும் உதயசூரியன் சின்னத்தை விரும்புகின்றனர்," என்றார்.

Wednesday, July 1, 2009

அதிவேக Firefox 3.5 வெளிவந்தது- தரவிறக்கத்திற்கு தயார்.



Firefox இணைய உலாவியின் 3.5 இறுதி பதிப்பு இன்று முதல் Mozilla தளத்தில் தரவிறக்க கிடைக்கிறது.விண்டோஸ்,மேக் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களுக்கும் தரவிறக்க கிடைக்கிறது.பல புதிய சிறப்பம்சங்களுடன் வந்துள்ள Firefox 3.5 மேலும் மிக வேகமாக இணைய பக்கங்களை தரவிறக்குகிறது.

Sunspider என்னும் Javascript சோதனையை 1524 மில்லி வினாடிகளில் முடிக்கிறது என Mozilla தளம் சொல்கிறது.எனது கணினியில் 1572 மில்லி வினாடிகளில் முடிக்கிறது.இணைய பக்கங்கள் படு வேகமாக தரவிறங்குகின்றன.

ரஜினியை திருமணத்திற்கு வரக்கூடாது என்று தடுத்த நடிகர்!



பைட் மாஸ்டரிடம் எடுபிடி வேலை பார்த்துக்கொண்டிருந்த ராகவாலாரன்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடன அசைவுகளை வெளிப்படுத்திக்கொண்டிருந்திருக்கிறார். நடன அசைவுகளிலும், பொதுவாகவே அவரது மேனரிசங்களில் ரஜினியின் ஸ்டைல் இருந்திருக்கிறது.

இதைக்கவனித்துவிட்ட ரஜினி ஷூட்டிங் முடிந்து காரில் கிளம்பும்போது லாரன்ஸிடம் நாளைக்கு வீட்டில் வந்து என்னைப்பாரு என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.


வீட்டுக்குப்போய் பார்த்ததும் உனக்கு திறமை இருக்கு..நல்ல எதிர்காலம் இருக்கு. அதை வீணடித்துக்கொள்ளாதே என்று நடன
இயக்குநரிடம் உதவியாளராக சேர்த்துவிட்டார்.அதிலிருந்து அவர் நடன இயக்குநராகி, நடிகரும் ஆகிவிட்டார்.


எடுபிடியாக இருந்த தன்னை புகழ் ஏணியில் ஏத்திவிட்ட ரஜினியிடம் சொல்லிவிட்டுத்தான் இன்றைக்கும் எந்த ஒரு
காரியத்தையும் செய்துவருகிறார் லாரன்ஸ்.


இந்நிலையில் லாரன்ஸ் தம்பி காதல்விவகாரம் ஏடாகூடாமாக இருக்க, கல்யாணமும் ஏடாகூடமாக ரகசியமாக நடந்து முடிந்திருக்கிறதாம்.

தனது
ஒவ்வொரு அசைவையும் அக்கறையுடன் கவனித்து வரும் ரஜினியிடம் சொல்லாமல் திருமணம் செய்யக்கூடாது என்று ரஜினிக்கு போன் போட்டாராம் லாரன்ஸ்.


ரஜினியிடம் தம்பியின் காதல், ரகசிய கல்யாணத்தை சொன்னதுமே அதனாலென்ன நான் வருகிறேன் எப்போ..எங்கே..என்று கேட்டாராம்
ரஜினி. ஆனால் லாரன்ஸோ, ஸார்..நீங்க இந்த கல்யாணத்திற்கு வரனுமென்று உங்ககிட்ட சொல்லல..அதே நேரத்துல உங்ககிட்ட சொல்லாம இருக்கவும் முடியல. அதனாலதான் சொன்னேன்.


இது ரகசிய கல்யாணம்..கொஞ்சம் விவகாரமான காதல் கல்யாணம். அதனால் நீங்க வரவேண்டாம். உங்க இமேஜ் பாதிக்கும்
என்று சொன்னாராம் லாரன்ஸ்.


‘இட்ஸ் ஓகே’ என்று ரஜினியும் போனை வைத்துவிட்டாராம்.


தாகூரை படித்த ஜாக்சன்-ரஹ்மானுடன் இணையவும் விரும்பினார்

பாப் மேதை மைக்கேல் ஜாக்சன் தனது வாழ்நாளின் கடைசி நாட்களி்ல் ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளை விரும்பிப் படித்து வந்துள்ளார். மேலும், இந்திய இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றவும் ஆர்வத்தோடு இருந்தாராம்.

ரஹ்மானுடன் இணைந்து புதிய ஆல்பம் ஒன்றை வெளியிடும் திட்டத்தில் அவர் தீவிரமாக இருந்துள்ளார். ஆனால் எல்லாமே கை கூடாமல் போய் விட்டது.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தி்ல் ரஹ்மானின் இசையை பார்த்துப் பிரமித்துப் போயே, ரஹ்மானுடன் இணைய ஜாக்சன் ஆர்வம் கொண்டாராம்.

தாகூரின் படைப்புகள் ஜாக்சனை வெகுவாக கவர்ந்து விட்டதாம். இதன் மூலம் இந்தியாவுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும் அவர் ஆர்வம் காட்டினாராம்.

இதுகுறித்து ரஹ்மானுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், லாஸ் ஏஞ்சலெஸில் நடந்த ஆஸ்கர் விருது விழாவின்போது ஜாக்சனை சந்தித்தார் ரஹ்மான். அப்போது ரஹ்மானிடம் தனது அடுத்த ஆல்பத்திற்கு இசையமைக்க வேண்டும் என ஜாக்சன் கோரிக்கை வைத்தார்.

இந்த ஆல்பத்தில் இந்திய உணர்வுகளை அதிகம் இடம் பெறச் செய்யவும் ஜாக்சன் திட்டமிட்டிருந்தார். இந்த ஆல்பம் தொடர்பாக அட்னான் சமியுடனும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் ஜாக்சன். இந்திய இசைக் கருவிகளான டோலக்கு, தபலா, சாரங்கி ஆகியவற்றையும் பயன்படுத்த திட்டமிட்டிருந்தார் ஜாக்சன் என்றார் அவர்.

யுனிட்டி ஆன்தம் (unity anthem) என்று இந்த ஆல்பத்திற்கு பெயரிட்டிருந்தார் ஜாக்சன். ஏற்கனவே ஜாக்சனும், ரஹ்மானும் ஏகம் சத்யம் என்ற பெயரிலான இசை வடிவத்திற்காக இணைந்தவர்கள் என்பது நினைவிருக்கலாம்.

இந்திய இசைப் பக்கம் ஜாக்சனின் கவனத்தை திருப்பியவர்களில் முக்கியமானவர் ஜாக்சனின் அண்ணனான ஜெர்மைன் ஜாக்சன்தான். அதற்கு முக்கிய காரணம், ஜெர்மைனின் மனைவி ஹலிமா சண்டிகரில் சில காலம் வசித்தவர் என்பதால்.

இதை விட முக்கியமாக ஜாக்சன், கடந்த சில ஆண்டுகளாக இந்து மதம் குறித்தும் ஆர்வம் கொண்டிருந்தாராம். அதுதொடர்பான நூல்களையும் படித்து வந்தாராம்.

இதுகுறித்து சர்வதேச இந்து கழகம் என்ற அமைப்பின் தலைவர் ராஜன் செத் கூறுகையில், தியானம் செய்வது எப்படி என்பது குறித்து ஜாக்சன் படித்து வந்தார். மேலும் ஒரு சுத்த சைவமாகவும் அவர் இருந்தார்.

நான் ஒரு முறை அவரை சந்திக்க நேர்ந்தபோது இந்துக் கடவுள்களான கணேசர், நடராஜர் ஆகியோரின் சிலைகளைக் கொடுத்து விளக்க முயன்றேன். அப்போது எனக்கு நன்றாக தெரியுமே என்றபோது நான் வியந்து போனேன்.

ஒரு முறையாவது அன்னை தெரசாவை சந்தித்து விட வேண்டும் என்று தீராத ஆசையுடன் இருந்தார். ஆனால் நிறைவேறவே இல்லை.

இந்தியா குறித்து மிகவும் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார் ஜாக்சன் என்றார்.

விசாரணைக்கே வராததால் மோகினி தொடர்ந்த விவாகரத்து மனு தள்ளுபடி

நடிகை மோகினியும், அவரது கணவரும் தொடர்ந்து விவாகரத்து வழக்கு விசாரணைக்கு இருவரும் தொடர்ந்து வராமல் இருந்தாதல் வழக்கை சென்னை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

மகாலட்சுமி என்ற இயற் பெயர் கொண்ட மோகினி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் பரத். இருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.

இதன் விளைவாக இருவருக்கும் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கணவன், மனைவிக்கு இடையே பூசல் ஏற்பட்டது. பிரிந்தனர். விவாகரத்து செய்யவும் முடிவு செய்தனர்.

அதன் படி இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதன் பின்னர் இருவரும் சில விசாரணைகளுக்கு வந்து சென்றனர். ஆனால் அதன் பின்னர் இருவருமே வரவில்லை. தொடர்ந்து நான்கு முறையாக அவர்கள் இருவரும் வராததால் கோர்ட் மனுவை தள்ளுபடி செய்து விட்டது

எந்திரன்-சாபு சிரில் ஓவர் 'பீலா'!

எந்திரன் திரைப்படம் உலகின் மிகச் சிறந்த திரைப்படம் என்பதை நிரூபிக்கும் அளவு அமையும் என்கிறார் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில்.

இந்தியாவின் ட்ரெண்ட் செட்டர் எனும் அளவுக்கு மெகா படங்களுக்கு பிரமாண்டமான செட்களை அமைப்பதில் நிபுணர் சாபு சிரில். ரஜினியின் கனவுப் படமான எந்திரனுக்கு இவர்தான் கலை இயக்குனர்.

சென்னைக்கு அருகே மாயாஜால் எதிரே, சாபு சிரில் அமைத்துள்ள பிரமாண்ட செட்தான் இன்றைக்கு கிழக்குக் கடற்கரைச் சாலையின் மிகப்பெரிய சுற்றுலா மையமாகிவிட்டது.

இந்த செட்டுக்கு ஆன செலவு மட்டும் ரூ.5 கோடியாம். இந்திய திரையுலக வரலாற்றில் இத்தனை கோடி செலவழித்து க்ளைமாக்ஸுக்கு யாரும் செட் போட்டதில்லை என்கிறார்கள்.

இந்த மெகா செட்டில்தான் எந்திரனில் விஞ்ஞானியாக வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி 100 ரோபோக்களோடு மோதுவதாக காட்சிகளை எடுக்கிறார்கள். இந்த 100 ரோபோக்களும் விஞ்ஞானி ரஜினியைப் போன்றே தோற்றம் கொண்டவை என்பதுதான் இந்தக் காட்சியின் விசேஷம்.

எந்திரன் சிறப்பு குறித்து ஒரு நாளிதழுக்கு சாபு சிரில் அளித்துள்ள பேட்டி:

"5 ஆண்டு இடைவெளிக்குப் பின் நான் செய்யும் தமிழ் திரைப்படம் எந்திரன் - தி ரோபோ. அதிகமாக பாலிவுட் படங்களைத்தான் இப்போது ஒப்புக் கொள்கிறேன். காரணம், பாலிவுட் படங்களின் பட்ஜெட் பெரியது. பெரிய, வித்தியாசமான செட்களை அமைக்க சரியான களமாக அவை அமைகின்றன.

100 வது படம் எந்திரன்!

எந்திரனைப் பொறுத்தவரை, அது எனக்கு மிகவும் விருப்பமான ஒரு படம். காரணம் இதுதான் எனக்கு 100 வது படம். இந்தப் படத்தோடு இன்று நேற்றல்ல... 10 ஆண்டுகளாக எனக்கு தொடர்புண்டு. இந்தக் கதையை என்னிடம்தான் முதன்முதலில் சொன்னார் இயக்குநர் ஷங்கர். 10 ஆண்டுகளுக்கு முன்பே இதன் கலை இயக்குநராக ஒப்பந்தமாகிவிட்டேன். அப்போது இந்தப் படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்துக்கு போட்டோ செஷன் கூட நடந்தது.

ரஜினி - பொருத்தமான தேர்வு!

பின்னர் இந்தப் படத்தில் ஷாரூக் கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. இப்போது ரஜினிகாந்த் இந்தப்படத்தில் நடிக்கிறார். அவர் இந்தப் படத்துக்கு மிகப் பொருத்தமானவர்...

அலுமினியம் கலந்த உலோகத் தகடுகளால் (Aluminum Composite Panel) இந்தப் படத்துக்கு செட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரி செட் இந்தியாவிலேயே எந்திரனுக்குதான் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலுக்கு ஆபத்து விளைவிக்காத, மரத்தை விட மூன்றில் ஒரு பங்கு மட்டுமே செலவு பிடிப்பது இந்த அலுமினியக் கலவை தகடுகள். பார்ப்பதற்கும் மிகப் பிரமாதமான பினிஷிங் கிடைக்கும். விரும்பிய மாதிரி மடக்க முடியும். இன்னொன்று இந்த உலோகத்தை சுழற்சி முறையில் மறு பயன்பாட்டுக்கும் உபயோகிக்கலாம்.

குறித்த பட்ஜெட்டுக்குள் எடுக்கும் விஞ்ஞானப் படங்களில் பணிபுரிவதில் எப்போதுமே அதிக ஆர்வம் உண்டு எனக்கு. ஆனால் ஹாலிவுட்டுக்கு இணையாக இந்தியப் படங்களில் விஞ்ஞான செட்களை அமைப்பதில் உள்ள சவால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அந்த வகையில் எந்திரனுக்கு செட் அமைப்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலாக நினைக்கிறேன். உலகின் மிகச் சிறந்த கலைப் படைப்பாக எந்திரன் அமையும் என்பதை நிரூபிப்பேன்", என்கிறார் சாபு சிரில்.

ஆல் தி பெஸ்ட் எந்திரன் டீம்!

எந்த கோப்பிலிருந்தும் ஐகான் பெற மென்பொருள்




நிரலாக்கம் ( Programming ) செய்யும் அல்லது வலை வடிவாக்கம் (Web Designing ) செய்யும் நண்பர்களுக்கு ஐகான்களின் தேவை கண்டிப்பாக உண்டு. சில தளங்களில் ஐகான்கள் இலவசமாகவும் சிலவற்றில் கட்டணத்திற்கும் கிடைக்கின்றன. ஆனால் இதிலிருந்து மாறுபட்டு எந்த பயன்பாட்டு கோப்பிலிருந்தும் ( Exe Files ) மற்றும் DLL கோப்பிலிருந்தும் அவற்றின் ஐகான்களை நீங்கள் பெறலாம். அதற்கு தேவையான ஒரு மென்பொருள் தான் இது. கீழே உள்ள தளத்திலிருந்து இதை தரவிறக்கம் செய்யுங்கள்.


Icons from File





ஒரு குறிப்பிட்ட கோப்பை இதில் இழுத்து விட்டாலே போதும்.
அல்லது குறிப்பிட்ட போல்டரை தேர்வு செய்தால் அதில் உள்ள
அனைத்து கோப்புகளின் ஐகான்களை பெற்றுத்தரும். பின்னர்
நீங்கள் சேமித்துக்கொள்ளலாம்.

இலவசமாக பெற சில தளங்கள் :

http://www.freeiconsweb.com/


http://www.freeiconsdownload.com/

http://www.bestfreeicons.com/


http://www.iconstick.com/


http://www.icongalore.com/sales/purchase-and-download.php


http://fasticon.com/freeware/

http://www.iconspedia.com/

http://www.icondrawer.com/free.php

http://www.vbforfree.com/?p=363

http://tango.freedesktop.org/Tango_Icon_Gallery

நன்றி !

வேலைக்காரப் பெண்ணை ஷைனிதான் கற்பழித்தார் - டிஎன்ஏ சோதனை முடிவு

தனது வீட்டு வேலைக்காரப் பெண்ணை நடிகர் ஷைனி அகுஜா கற்பழித்தது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா கூறுகையில், வேலைக்காரப் பெண் கற்பழிக்கப்பட்டது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையில், தனது வீட்டு வேலைக்காரப் பெண்ணை நடிகர் ஷைனி அகுஜா கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தற்போது அந்த வாதத்திற்கு வலுவான முறையில் டிஎன்ஏ சோதனை முடிவுகள் வந்துள்ளன என்றார்.

ஷைனி அகுஜா தற்போது ஆர்தர் சாலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 14ம் தேதியன்று தனது வீட்டில் தனியாக இருந்த வேலைக்காரப் பெண்ணை கற்பழித்து விட்டதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது கணவர் நல்லவர், பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்பவர், வேண்டுமானால் வேலைக்காரப் பெண்தான் எனது கணவரை தூண்டி விட்டிருக்க வேண்டும் என்று ஷைனியின் மனைவி கூறியிருந்தார். இந்த நிலையில் டிஎன்ஏ சோதனை முடிவுகள் வந்துள்ளன.

இதற்கிடையே, ஜாமீன் கோரி ஷைனி சார்பில் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Sunday, June 28, 2009

கருணாநிதி ஓய்வெடுத்தால் கேஸ் போடுவோம் - விவேக்

கருணாநிதி ஒரு அரசு ஊழியர். ஒரு அரசு ஊழியருக்குள்ள அத்தனை சலுகைகளும் அவருக்கும் உண்டு. ஆனால் ஒரே ஒரு சலுகை மட்டும் அவருக்குக் கிடையாது. அப்படி அவர் அந்த சலுகையைப் பெற்றால் அவர் மீது கேஸ் போடுவோம், என்றார் நகைச்சுவை நடிகர் விவேக்.

கருணாநிதி கதை வசனம் எழுதும் நீயின்றி நானில்லை படத்தின் துவக்க விழா நேற்று சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது.

இந்த விழாவில் தமிழ் நடிகர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

ஏவிஎம் ஏசி ப்ளோருக்கு வெளியே பெரிய பந்தல் அமைக்கப்பட்டு அதனுள் மேடை போட்டிருந்தார்கள். விழாவில் பங்கேற்ற நடிகர் விவேக் பேசியதாவது:

"இந்த படத்தில் நானும் நடிக்க வேண்டும் என்று கலைஞர் விரும்புவதாக தயாரிப்பாளரும் டைரக்டரும் சொன்னார்கள். என் கேரக்டர், கதை போன்ற விவரங்களை கேட்டேன். எங்களுக்கு தெரியாது. முதல்வருக்குத்தான் தெரியும் என்றனர். எல்லாமே முதல்வருக்குத்தான் தெரியும் என்று அவர்கள் கூறியதால், ஸ்டண்ட் மாஸ்டர் யார் என்றேன் சும்மா கோத்து வாங்கலாம் என்ற எண்ணத்தில். அதற்கும் முதல்வர்தான் என்று அவசரத்தில் சொல்லிவிட்டு சமாளித்தார்கள்.

உண்மையில் கலைஞரும் 'சூப்பர் பைட் மாஸ்டர்'தான். அரசியலில் ஆரம்பித்து, இன்று வணங்காமண் கப்பல் இலங்கை சென்று சேரும் வரையில் எவ்வளவோ போராட்டங்களை சந்திக்கிறார்.

சினிமாவில் ரோப் கட்டி சண்டையிடுகின்றனர். அவர் 'ஹோப்' (நம்பிக்கையை) வைத்து போராடுகிறார். அதன் மூலம் எவ்வளவோ சாதித்து இருக்கிறார். வசனங்களை நீட்டியும் சுருக்கியும் சொல்ல அவரால்தான் முடியும். பராசக்தியில் ரங்கூனில் இருந்து வரும் சிவாஜி கணேசன் பிச்சை கேட்பவனை பார்த்து, 'தமிழ் நாட்டின் முதல் குரலே இப்படி இருக்கிறதே...' என்று நறுக்கென வசனம் பேசியது கலைஞரால் மட்டுமே செய்யக்கூடியது.

கலைஞர் ஒரு அரசு ஊழியர். அவருக்கு அரசு ஊழியர்களுக்குள்ள அத்தனை சலுகைகளும் உண்டு. ஒரே ஒரு சலுகையை தவிர. அந்தச் சலுகையை அவர் பெற்றால் நாம் அனைவரும் கேஸ் போடலாம். அந்தச் சலுகை 'ஓய்வு ஊதியம்' பெறுவது. அவருக்கு ஓய்வே கிடையாது. அப்படி ஓய்வு கேட்டால் நாங்கள் கேஸ் போடுவோம்...", என்றார்.

கமல்ஹாஸன்... ஆயுள் கால பேனா!

பின்னர் கமல்ஹாஸன் பேசியதாவது:

நான் ஒரு தடவை வெளிநாடு சென்றபோது ஆயுள் காலத்துக்குள் பயன்படக்கூடிய ஒரு பேனா பற்றி விளம்பரப்படுத்தி இருப்பதை பார்த்தேன். அதை கலைஞருக்கு வாங்கி தரலாமா என்று யோசித்தேன். ஆனால் அவருக்கு அது தேவையில்லை. நீண்ட காலமாக அவர் எழுதிக்கொண்டிருக்கிறார். எழுதுவதற்கு மை மட்டும் போதாது. அறிவும் வேண்டும்.

கலைஞர் எழுத்துக்களில் ஒளி வீசுகிறது. கலைஞர் வசனம் பேசித்தான் இந்த சினிமாவுக்கே வந்தேன். நடிக்கச் சொல்லி கேட்பவர்களிடம் அவர் வசனத்தை பேசித்தான் நடித்துக் காட்டி இருக்கிறோம். இன்னமும் அவரது பேனா எங்களுக்காக எழுத வேண்டும். கலை உலகில் தொடர்ந்து கோலோச்ச வேண்டும், என்றார்.

சூர்யா...

நடிகர் சூர்யா பேசியதாவது:

என்னுடைய நேருக்கு நேர் படத்தை கலைஞர் பார்த்து வாழ்த்தினார். அந்த வாழ்த்துக் கடிதம் என்னை இந்த அளவு உயர வைத்திருக்கிறது. தினமும் அவர் 16 மணி நேரம் உழைக்கிறார். வீட்டு வேலைகளை கூட சிறிது நேரம் நம்மால் செய்ய முடியவில்லை.

ஆனால் அவர் மக்களுக்காக, மாவட்டத்துக்காக, மாநிலத்துக்காக எவ்வளவோ காரியங்களை செய்வது ஆச்சரியமாக உள்ளது. அவரிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. அவரால் திரை உலகம் பிரகாசமாக இருக்கிறது. இனி கலைஞறின்றி தமிழ் சினிமா இல்லை, என்றார்.

பெயரைச் சொல்கிறார்களே... மனோரமா

நடிகை மனோரமா பேசியதாவது:

எதிர்க்கட்சிகளில் இருப்பவர்களுக்கு மனசாட்சியே கிடையாதா... திரும்ப திரும்ப கலைஞரை பெயர் சொல்லி அழைக்கிறார்களே... அவர் வயசுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா...

கலைஞர் நாடகங்களில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். தி.மு.க. மேடை நாடகங்களில் அவர் கதாநாயகனாகவும் நான் கதாநாயகியாகவும் நடித்துள்ளோம். அவர் காங்கிரஸ்காரராக வருவார். நான் தி.மு.க. பெண்ணாக வந்து அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லி அவரை தி.மு.க.வுக்கு மாற வைப்பேன். அந்த நினைவுகள் இன்னும் என் மனதில் உள்ளன, என்றார்.

கனிமொழி எம்.பி., ராமநாராயணன், ஏ.வி.எம். சரவணன், சிவக்குமார், வி.சி. குகநாதன் ஆகியோரும் வாழ்த்திப் பேசினார்கள்.

விழாவில் கலைப்புலி சேகரன், இசையமைப்பாளர் தேவா, டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரன், தயாரிப்பாளர்கள் முரளிதரன், சிவசக்தி பாண்டியன், காஜா மொய்தீன், அன்பாலயா பிரபாகரன், பெப்சி முரளி, கே.எஸ். சீனிவாசன், எடிட்டர் மோகன், டைரக்டர் அரிராஜன், நடிகைகள் ஜெயதேவி, கார்த்திகா, முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

டைரக்டர் இளவேனில் வரவேற்றார். தயாரிப்பாளர் ஆறுமுகனேரி எஸ்.பி. முருகேசன், ஜெய முருகன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.

விழா ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் சிறப்பாக செய்திருந்தார்.

முன்னதாக வடபழனி நூறடி ரோட்டில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பெப்சி அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.Tags: tamiol, cinema, karunanithi, vivek

பென் டிரைவ் உஷார் மேட்டர்!

ஹலோ

"ஹலோ ..." ன்னு தூரத்திலிருந்து சத்தம் கேட்டவுடன் .."நம்மள எவண்டா கூப்பிடரவன்னு" திரும்பி பார்த்தா " எக்ஸ்கியுஸ் மீ சார் ..ஒன் மினிட் ப்ளீஸ்! அப்படின்னு டிப் டாப்பா ஒரு ஆள் என்னை நோக்கி வந்துகொண்டு இருந்தான்.

"சார் நான் ஒரு சேல்ஸ் மேன். என்கிட்ட பென் டிரைவ் நிறைய இருக்கு எல்லாமே 32 ஜி பி..
வெல ஒன்னும் அதிகமில்லை ஜஸ்ட் ஐந்நூறு ரூபா தான்" அப்படின்னான்!






என்னாது 32 ஜி பி யா ?
என்கிட்ட இருக்கிற லாப்டாப்பே நாப்பது ஜி.பிதான் தமாந்தூண்டு மெமரி ஸ்டிக்கு முப்பத்திரண்டு ஜி பி யா ? எத்தன படம் ,,எத்தன பிச்சரு எத்தன டேட்டா சேவ் பண்ணலாம்னு அப்படின்னு வாய திறந்துக்கிட்டு யோசித்துக்கொண்டிருக்கும் போதே என் பிரண்டு ஒருத்தன் "இருநூத்தி ஐம்பது ரூபான்னா வாங்கறோம்" அப்படின்னு பாதியாக குறைத்தான்.

அதிக பேரம் பேசாமல் டீலுக்கு ஒத்துக்கிட்டான்....

என்கூட இருந்த ஜுனியர் ஒருத்தன் "சார் இது வொர்க் ஆகுமா ஆகாதான்னு செக் பண்ணனும்னு" சொன்னதுதான் தாமதம் ...
"எட்றா லேப்டாப்பை சொருகுடா பென் டிரைவை" ன்னு செக் பண்ணா வெரி நைஸ்! வொர்க் ஆகுது.. :)

டேட்டாவை உள்ளேயும் வெளியவும் இழுத்து போட்டுபார்த்தா சும்மா கலக்கல்..
இன்னியோட இந்த ஒரு ஜி பி ரெண்டு ஜி பி பென் டிரைவை எல்லாம் சீண்டக்கூட மாட்டேன்னு, ஆசை ஆசையா இந்த 32 ஜி பி பென் டிரைவ் ஐ யூஸ் பண்ணேன்.

எங்க ஆபிசுல இருக்கறவங்க எல்லாம் என்கிட்ட கோபப்பட்டாங்க ஏன் எனக்கு ஒன்னு வாங்கலன்னு !

நான் சொன்னேன் "அவன் யாரோ எவனோ தெரியாது ..நாங்கல்லாம் .ஆபீஸ் முடிஞ்சி எங்க ஏரியாவில் இருக்கிற ஓர கடையில தம்மு பத்த வச்சிக்கிட்டு இருக்கும்போது ஒருத்தன் வந்து வித்துக்கிட்டு இருந்தான் அவன் அட்ரஸ் எல்லாம் கேட்கல .. வெரி சாரி" அப்படின்னுட்டேன்..

மறுபடியும் அவன பார்த்தா ..உங்க எல்லாத்துக்கும் வாங்கி வைக்கிறேன் ..மனச தேத்திக்குங்க மக்களேன்னு கர்வத்துடன் சொன்னேன்..


ஒவ்வொரு நாள் காலையிலும் எங்க ஆபிசுல இருப்பவர்கள் "அவன் கிடைச்சானா ..அவன் கிடைச்சானா " ன்னு ஒரே தொல்லை ...நானும் அந்த ஏரியா பூரா தேடி பார்த்துட்டேன் ஆளே அகப்படலன்னு! ஒரு பிட்ட போட்டுட்டு ஒவ்வொரு முறையும் எஸ்கேப் ஆகிடுவேன்


இதெல்லாம் எத்தன நாளைக்கின்றீங்க ...

வெறும் ஏழு நாள்தான் .

இப்பல்லாம் பென் டிரைவ் உள்ள இருந்த அத்தனை மேட்டரும் கரப்ட் ஆகுது .
எப்ப கரப்ட் ஆகும்ம்னு கணிக்க முடியல..... பார்மெட் பண்ணி உபயோகிக்கனும்....பிறகு மறுபடியும் கரப்ட் ஆகும் திரும்பவும் பார்மெட் ...SH** too hectic :(

இதனாலேயே மிக முக்கியமான டேட்டாக்களை உள்ளே வைப்பதில்லை
இதுக்கு முன்ன இருந்த அந்த ஒன் ஜி பி பென் டிரைவை தேடி கண்டு பிடிப்பதற்குள் போதும் போதும்ம்னு ஆயிடிச்சி .

இப்பவும் எங்க ஆபிசுல இருப்பவர்கள் கேட்கிறாங்க பென் டிரைவை விக்கிறவன்
கிடைச்சானான்னு..

ஆனா இந்த முறை உண்மையை சொன்னேன் "நானும் அந்த ஏரியா பூரா தேடி பார்த்துட்டேன் ஆளே அகப்படலன்னு!"....




thumbs.db என்றால் என்ன ?

இதை கணணி பயன்படுத்துபவர்கள் ஒருதடவையேனும் உங்கள் கணனியில் கண்டிருப்பீர்கள். கம்ப்யூட்டரில் thumbs.db என்ற பைல் உள்ளதே, அழித்தாலும் போக மாட்டேன்கிறது, இது என்ன வைரஸா, இல்லை ஸ்பைவேரா? என்று குழம்பியிருப்பீர்கள்.

இரண்டும் இல்லை, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 (SP4) விண்டோஸ் 2003 இவைகளில் சில டைரக்டரிகளில் இந்த பைல் தென்படும். இது அந்தந்த போல்டர்களில் படங்கள் இருந்தால் அதனை தம்ப்நெயிலாக(Thumbnail) கேச் செய்து வைத்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை.

இதன் மூலம் விண்டோஸ் அந்த போல்டரில் உள்ள பைலின் தம்ப்நெயில் வியூவை எக்ஸ்புளோரரில் ஒவ்வொருமுறையும் அந்த பைலை படித்து பின் காட்டுவதற்கு பதிலாக இந்த பைல் முலம் உடனே காட்டுகிறது. விஸ்டாவில் இப்படி தனித்தனியாக அந்தந்த போல்டரில் இல்லாமல் மொத்தமாக ஒரே பைலாக சிஸ்டம் போல்டரில் சேமித்து வைக்கப்படுகிறது.

இந்த பைலின் ஒரே பிரச்சினை வன்தட்டில் சிறிது இடத்தை எடுத்து கொள்வதே. இது மிகச்சிறிய அளவே ஆனாலும், நிறைய போல்டர்களில் இருப்பதை கணக்கிட்டால் ஒரளவு இடம் எடுத்திருப்பது தெரியவரும். இதனை குறைந்த வன்தட்டு இடம் கொண்டிருப்பவர்கள் நீக்க நினைத்தால் கீழே உள்ளதை செய்து பாருங்கள்.

முதலில் thumbs.db வருவதை தடுக்க

1) மை கம்ப்யூட்டடை கிளிக் செய்து அதில்

2) டூல்ஸ் என்பதை மெனுவில் தேர்ந்தெடுத்து

3) அதில் போல்டர் ஆப்சன் என்பதை சொடுக்கி

4) அதில் வியூ டேப் என்பதில்

5) "Do not cache thumbnails" என்பதை செக் செய்ய வேண்டும்.


6) பின்னர் ஒ.கே கொடுத்து

7) மை கம்ப்யூட்டரை கிளிக் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே உருவாக்கப்ப்ட்ட அனைத்தையும் நீக்க

1) ஸ்டார்ட் மெனு சென்று

2) அங்கு உள்ள சேர்ச் என்பதை கிளிக் செய்து

3) பின்வருவதில் All Files and Folders என்பதை தெரிவு செய்து

4) "all or part of the file name" என்பதில் thumbs.db என்று டைப் செய்து


5) Look in box, ல் Local Hard Drives என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

6) தேடலை ஆரம்பித்த பின் ஒரு பெரிய லிஸ்ட் வரும்

7) எடிட் மெனுவில் உள்ள செலக்ட் ஆல் பைல் என்பதை கிளிக் செய்து

8) பின்னர் பைல் என்பதில் டெலிட் கமண்ட்டை அழுத்தி, எல்லாவற்றையும் நீக்க வேண்டும்.

9) பின்னர் சேர்ச் விண்டோவை மூடி விடலாம்.

ஏதாவது தவறுகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். இந்தப்பதிவைப் பற்றிய உங்கள் கருத்தையும் பதிந்து செல்லுங்கள்.

thanks-கார்த்திக்

தனுஷின் ஆடுகளம்: த்ரிஷா விலகல்?

தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் ஆடுகளம் படத்திலிருந்து நடிகை த்ரிஷா விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பெரும்பாலும் தெலுங்குப் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார் த்ரிஷா. தமிழில் சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா எனும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும்போது த்ரிஷாவுடன் சிம்பு மிகவும் நெருக்கமாகி விட்டதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வந்தன.

வழக்கம்போல சிம்பு மவுனம் காக்க, த்ரிஷா மட்டும் மழுப்பலாக பதில் கூறி வருகிறார். வதந்திகள் எனக்குப் புதிதல்ல என்றும், சிம்புவுடன் காதலா இல்லையா என்று சொல்ல மாட்டேன் என்றும் கூறிவருகிறார் த்ரிஷா.

இந்த நிலையில், தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் த்ரிஷா. இந்தப் படத்திலிருந்து இப்போது விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.

தனுஷுடன் நடிப்பதை சிம்பு விரும்பாததால்தான் த்ரிஷா விலகி விட்டார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் இன்னொரு தரப்போ, ஆடுகளம் படம், முழுக்க முழுக்க மதுரையில் 6 மாதம் தங்கியிருந்து நடிக்க வேண்டிய படம்.

மதுரையின் புழுதியில் புரண்டும், வெயிலில் காய்ந்தும் 'ரியலிஸ்டிக்காக' நடிக்க வேண்டியிருக்கும் என்றும், இந்த ரிஸ்க் எடுக்க விரும்பாததாலேயே அவர் விலகி விட்டார் என்றும் கூறுகின்றனர்.

மேலும் த்ரிஷாவுக்கு கைவசம் பெரிய படங்கள் பல உள்ளதாம். குறிப்பாக ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய்குமாருடன் நடிக்கும் இந்திப்படம் வேறு இந்த லிஸ்டில் புதிதாக இடம்பெற்று விட்டதால் தனுஷ் படத்தை தொங்கலில் விட்டுவிட்டார் த்ரிஷா என்றும் கூறப்படுகிறது.

தாயின் `செக்ஸ்’ படத்தை விற்ற மகள்


Posted by Uyir 27 June 2009

கனடாவின் ஒன்டாரியா பகுதியை சேர்ந்த 19 வயது பெண், தனது தாயின் படுக்கை அறையில் இருந்த கேமரா ஒன்றை 8 ஆயிரம் ரூபாய்க்கு ஒருவரிடம் விற்றார். இது அவருடைய தாயாருக்கு தெரியாது. அந்த கேமராவுக்குள் அந்த பெண்ணின் தாயும் அவருடைய காதலரும் விதம் விதமான கோணங்களில் எடுத்துக்கொண்ட `செக்ஸ்’ உறவு பட `டேப்’ இருந்து இருக்கிறது.

கேமராவை வாங்கியவர் அந்த செக்ஸ் பட டேப்பை தனது நண்பர் மூலம் நகரம் முழுவதும் வலம் வரச்செய்துவிட்டார். தாயின் காதலன் மூலம் தகவல் தெரிந்ததும் உடனடியாக போலீசுக்கு புகார் செய்யப்பட்டு அதன்பேரில் கேமராவை திருடியதாக மகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



திருமண வாழ்வு நீடிக்க


30 வயதுக்குப்பிறகு திருமணம் செய்து கொண்டால் தான் நீடித்த திருமண வாழ்வு கிடைக்கும் என்பது அமெரிக்காவில் நிலவி வரும் பொதுவான கருத்து ஆகும். ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு இதை தவறு என்று சித்தரிக்கிறது.

23 முதல் 27 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் தான் நீண்ட காலம் வெற்றிகரமான தம்பதிகளாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

டெக்சாஸ் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், 20 வயதுக்கு முன்பு நடக்கும் திருமணம் பெரும்பாலும் விவாகரத்தில் முடிவதாக தெரிய வந்து உள்ளது. முதிர்ந்த வயதில் நடக்கும் திருமணமும் நீடிப்பதில்லை என்றும் ஆய்வு கூறுகிறது.

1970களில் திருமண வயது என்பது ஆண்களுக்கு 23 என்றும், பெண்களுக்கு 21 என்றும் இருந்தது. இப்போது அது 27-26 ஆக உயர்ந்து உள்ளது என்றும் ஆய்வு கூறுகிறது.



கண்ணீரால் காப்பாற்றப்பட்ட பெண்

சீனாவைச் சேர்ந்த பெண் குவோயிங். 47 வயதான இவரது மூளையில் ரத்தக்குழாய் வெடித்ததில் இறந்து போனதாக கருதிய குடும்பத்தினர் இவரது உடலைத் தகனம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.

அப்போது மூடியிருந்த அவரது கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு வெளியானதைப் பார்த்த உறவினர் ï இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தார். அதனால் அவர் திரும்பவும் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த நிதி உதவியைக் கொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணம் அடைந்தார்.

தினதந்தி-

அழகிய செயற்கை நீரூற்றுகள் - அறிவியல் அதிசயம்













Friday, June 26, 2009

இந்திர விழா... நமீதாவின் நூதன பிரச்சாரம்!

தனது இந்திர விழா படத்தை திரண்டு வந்து பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்து 22 ஆயிரம் இமெயில்களை ரசிகர்களுக்கு அனுப்பியுள்ளாராம் நடிகை நமீதா.

நமீதா என்ன செய்தாலும் பெரிய செய்தியாகி விடுகிறது. குறிப்பிட்ட படத்துக்கு அல்லது அவர் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அதுவே பெரிய விளம்பரமாகவும் அமைந்துவிடுகிறது.

நமீதாவுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய இந்திர விழா படத் தயாரிப்பாளர் அவருக்கு ஒரு யோசனை கூறியுள்ளார்.

அவரது ரசிகர் மன்றத்தில் உள்ளவர்கள் மற்றும் தெரிந்த நபர்களுக்கெல்லாம் தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதி அதை இமெயில் மூலம் அனுப்பி வைப்பதே அந்த யோசனை.

அந்த இமயிலில், தானும் ஸ்ரீகாந்தும் நடித்துள்ள புதிய படமான இந்திர விழைவைக் காண வருமாறு அழைப்பு விடுத்துள்ளாராம். மேலும் அதிலேயே படத்தின் சிறப்புகள், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் விவரங்களையும் அவர் அனுப்பியுள்ளார்.

நமீதாவின் மெயில் கிடைத்த சந்தோஷத்தில் உடனே அனைத்து ரசிகர்களும் பதிலும் அனுப்பி உள்ளார்களாம்.

இதுபற்றி நமீதா கூறுகையில், இந்த இ-மெயில் விளம்பர யோசனையை தயாரிப்பாளர் சஞ்சீவ்சர்மாதான் சொன்னார். அது வித்தியாசமாகவும் இருந்தது. உடனடியாக தமிழ், ஆங்கிலத்தில் ரசிகர்களுக்கு இ-மெயில் அனுப்பினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. நிறைய ரசிகர்கள் வாழ்த்து அனுப்புகிறார்கள். அவர்களுக்கு உடனுக்குடன் பதிலும் அனுப்பி வருகிறேன், என்கிறார்.

BJP-யில் சேர்ந்தார் வடிவேலு -திடிக்கிடும் உண்மை


விட்டத்தை பார்த்து முட்டுக் கொடுத்து தூங்கி கொண்டு இருந்த வடிவேலுவின் வீட்டுக்கு திடிரென ஒரு காவி கோஸ்டி படை எடுத்தது ..

(வடிவேலுவின் mind வாய்ஸ் : அட நல்லாத்தானே போய்கிண்டு இருந்தது...)

முன்னம் மண்டை glar அடிக்க வந்த அந்த பெரியவர் , நேரே வடிவேலுவிடம் போய், இங்க பெரிய நகைச்சுவை புயல் வடிவேலு எங்க என்று கேட்க ,

வடிவேலு : இங்கதான் இருகோம்லா ...

பெரியவர் : எங்க ஜி ?

வடிவேலு : ஏய் .. ஏய் ..நான் என்னை சொன்னேன் ...

பெரியவர் : சொர்ரிஜி ..நான் அத்வானி ஜி ...

வடிவேலு : சரி , வச்சுக்கோ ..

அத்வானி : பாஸ் ...!!!??????

வடிவேலு : என்னது பாஸ் ஆ? என்னங்கடா பாசமா கூப்பிடுறீங்க?

அத்வானி : நாங்க எல்லாம் இப்ப வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல சேர்ந்த்துட்டோம் ..அப்ப நீங்க தானே பாஸ் எங்களுக்கு (கோரசாக ) ..

வடிவேலு : என்னடா , எல்லோரும் கோராசா சொல்றீங்க ? அது சரி நான் இப்ப என்ன பண்ணட்டும் ?

அத்வானி : மன்மோகனை தூக்கணும் ..!!

வடிவேலு : யார்ரா அது ?

அத்வானி : நம்ம சங்கத்து ஆள , தோக்கடிச்ச்வன் ..

வடிவேலு : என்னது ?...மன்மோகனுக்கு கட்டம் சரி இல்லை .. அவனை ஒரு கை பார்க்கலாம் ...அம்மம் இது யாரு , குறு குருன்னு பார்க்கிறது ? ஏய் ..அப்படி எல்லாம் பார்க்க கூடாது ..

அத்வானி:அவர் தான் எங்களுக்கு முன்னாள் தலை "ராஜ்நாத் "..

வடிவேலு : அது எல்லாம் சரி . அண்ணன் குளிச்சு 40 நாள் ஆச்சு ..பல் வில்லாக்கி 10 நாள் ஆச்சு ,motion போய் 30 நாள் ஆச்சு, இது எல்லாம் சரி பண்ணி ,எனக்கு ஒரு மட்டன் பிரியாணி , லெக் பீசோட வாங்கி தருவீங்களா ?


வெங்கையா நாய்டு : எல்லாம் தரோம் ..ஒரு அறிக்கை விடனும் முதல்ல ...

வடிவேலு: இப்பவே கண்ணை கட்டுதே , யாருயா நீ ?

வெங்கையா நாய்டு : நான் வெங்கையா நாய்டு ஜி ..

வடிவேலு : என்ன வெங்காயமோ ..போ . ஆமாம் , வட நாட்டுல என்னை மாதிரி கருப்பா , அழகா (என்ன அங்க சிரிப்பு ... என்ன ஒரு வில்லத்தனம் ) இருந்தா ஒவ்வொரு வீட்டுலையும்10 , 10 நாள் வச்சு அழகு பார்பாங்கலாமே .அப்படியா ...?

ராஜ்நாத் : ஏன்... 10 நாள் போதுமா ?

வடிவேலு : தம்பி , நாங்க எல்லாம் கலவர பூமியில் கல்யாணம் பண்றவங்க ...புரியுதா ...என்ன லுக்கு ? லேடன் கிட்ட பேசுறிய ? புரியல , பின் லேடன் , பின் லேடன் ..... ஐயா , செக்ஸ் மூடுல இருக்கேன் ...அப்படியே அப்பிட் ஆய்டு புரியுதா ??

(வடிவேலுவின் mind வாய்ஸ் : இன்னுமா இந்த உலகம் நம்பளை நம்புது ...)

அத்வானி : தலை, ...பேட்டி எல்லாம் கொடுக்க தெரியுமா ..

வடிவேலு : ஏய் ..ஏய் ..யாரை பார்த்து .. கட்டுடா வண்டியை .. பிரஸ் கரங்களை கூப்பி டுடா
(ஓவர் டு பிரஸ் மீட் ...)

நக்கீரன் : நீங்க எந்த election- ல தோற்று இருக்கீங்க ?

வடிவேலு : ஹோ ...உங்களை எல்லாம் பார்த்த பாவமா இருக்கு .. நாங்க எல்லாம் எங்கேயும் தோற்றது இல்லை ..

நக்கீரன் : போன வாட்டி, கவுன்சிலர் election- ல தோற்றீன்களே ..

வடிவேலு : அது போன மாசம் , நான் சொல்றது இந்த மாசம் ..

ஜூனியர் விகடன் : உங்களுக்கும் , நமிதாவுக்கும் எதோ ஒரு ஒரு ....

வடிவேலு : அது பாகிஸ்தானின் வெளி நாட்டு சதி ..

குமுதம் : உங்கள் வீட்டுல கல்லு எரிய , விஜய காந்த் ஒரு கல் குவாரியே குத்தகைக்கு எடுத்து இருக்காராமே ?

வடிவேலு : என்னது , திரும்பவுமா ... வெள்ளை கொடிக்கு மீண்டும் வேலையா ? வேணாம் போதும் ..இனிமே நீ பேச கூடாது ..என்னை உசுபேத்தி , உசுபேத்தி அழ வைப்ப , நான் அதுக்கு ஆள் இல்லை ..


அப்போது திடிரென 4 , 5 குண்டாஸ் ஒன்னு சேர்ந்து வடிவேலுவை அலேக்காக தூக்கி கொண்டு போயினர் ..

ஒரு காட்டுக்குள் , ஒரு குடிசைக்கு வெளியே அவர் தூக்கி எரிய படுகிறார் ....

அதற்க்கு அப்புறம் ...

வடிவேலு : ஏய் ,ஏய் யார் மேல கை வச்சிருக்கீங்க தெரியுமா , தெரியுமா ..தெரியுமா ?

கூட்டம் : தெரியாது ..சொல்லு டா நாயே, யார் நீ ?

வடிவேலு : தெரியாமத்தானே நானே கேட்குறேன் ...

கூட்டம் : து ..தூ .. து ..தூ ..

வடிவேலு : அப்படி துப்பிட்டு , வேலை வெட்டிக்கு போகாம சமைஞ்ச புள்ள கணக்கா என்ன ஒரு லுக் ?

கூட்டம் : எங்க அக்காதான் உன்னை தூக்க சொன்னாங்க ..

வடிவேலு : உங்க அக்க வேற இருக்கால ..உங்க கொக்கா ... வர சொல்லு ..வர சொல்லு ..அவளை வர சொல்லு ...

திடிரென மூக்கில் ஒரு குத்து விழ ..

வடிவேலு : டேய் , பேச்சு பேச்ச இருக்கும் போது , என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு .. இப்பவாச்சும் சொல்லுங்கடா உங்க அக்கா யாருடா ?

கூட்டம் ஒரு பக்கமா கையை காண்பிக்க , அங்கே ஒரு நாற்காலியில் ஒரு பெண் அமர்ந்து இருந்தார் ..

அங்கே சிங்க நடை நடந்து சென்ற வடிவேலு

வடிவேலு : ஹேய் செல்லம் , என் மேல அவ்வளவு வெறியா ? காதல் என்றால் இது அல்லவா காதல் ..

பெண் : டேய் ..டேய் ..

வடிவேலு : ஓஹோ ..ஒரே அவசரம் போ உனக்கு ..ஆமாம் என் மேல காதல் வர எது செல்லம் காரணம் ? என் BJP- தலைவர் பதவியா ? இல்லை என் முரட்டு தோல் உடம்பா ? உன் மூஞ்ச காட்டு என் செல்லம் ?

அந்த பெண் , மெதுவாக திரும்பி .... திரும்பி .... தன் முகத்தை காட்ட ..

நடு நடுங்கி போனார் நம்ம கை புள்ள

அது வேற யாரும் இல்ல நம்ம மம்தா

மம்தா மோகன்லால் இல்ல மம்தா பானர்ஜி ..

அடுத்த நாள் பொதிகையில் ...

காணமல் போனவர் பற்றிய அறிவிப்பு
பெயர் வடிவேலு , காணமல் போன போது சிகப்பு நிற சட்டையும் , மஞ்சள் நிற கால் ஆடையும் அணிந்து இருந்தார் ... என்று ஒரு 54 வயது இளம்பெண் செய்தி வாசித்துக் கொண்டு இருந்தார் ....

THANKS :-MANTHIRA AASAIKAL

"Size Zero" கிளப்பும் பீதி!


Size Zero வா என்னய்யா இது புது கதையா இருக்குன்னு கேட்கிற ஆளா! அப்ப இதை படிங்க..ஓரளவு சுவாராசியமாகவும் இருக்கும் அதே சமயம் என்ன கொடுமை சார் இது! ன்னு டென்ஷன் பண்ணுவதாகவும் இருக்கும்.


நீங்க ஃபேஷன் டிவி பார்த்து இருப்பீங்க அதுல பார்த்தீங்கன்னா வர பொண்ணுக எல்லாம் பெரும்பாலும் குச்சி குச்சி யா இருப்பாங்க, ஃபேஷன், ஸ்டைல் என்றாலே இப்ப அப்படி தான் ஆகி விட்டது..இப்ப என்ன பிரச்சனைனா மேலை நாடுகள்ல இது வியாதி மாதிரி ஆகி விட்டது. அதாவது பொண்ணுக தங்கள் உடம்பை எலும்பு தெரியும் படி இளைக்க வைத்து திரிவது தான் தற்போதைய ஃபேஷன், அடப்பாவிகளா! என்னய்யா இது உலக கொடுமையா இருக்குன்னு சொல்றீங்களா! அப்படி எல்லாம் சொல்லப்படாது... தொடர்ந்து படிங்க..


எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்

நம்ம ஊர்ல எப்படி நடிகர் நடிகைகளை பார்த்து ரசிகர்கள் தங்கள் ஸ்டைல் களை மாற்றி கொள்கிறார்களோ அதே போல ஹாலிவுட் ல இருக்கிற நடிகர் நடிகையர் மற்றும் அங்குள்ள செலிபிரிட்டிகள் என்ன செய்தாலும் அதை அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்றும் கூட்டமும் உண்டு, இவங்க நமக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல. தற்போது ஹாலிவுட் கதாநாயகிகள் பலரை இந்த வியாதி பிடித்து ஆட்டுகிறது அதனால் தங்கள் எடையை தாறுமாறாக குறைத்து அபாயகரமாக போய் கொண்டு இருக்கிறார்கள் ஆர்வம் முற்றி போய். இவர்களை பார்த்து பலரும் உடல் இளைக்க முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.




மேலை நாடு பிரபலங்களான Victoria Beckham [ஃபுட்பால் விளையாட்டு வீரர் பெக்காமின் மனைவி, முன்பு Spice girls ல் இருந்தவர்(பார்க்க மேலே உள்ள முன் பின் திரும்பி இருக்கும் படம்)], Nicole Richie (கீழே பிகினியில் பீச்சில் ஓடி வரும் படம்,சூப்பர் ஃபிகர் ங்க இந்த பொண்ணு இப்ப பாருங்க எப்படி கொடுமையா இருக்குன்னு) ஆகியோர் இந்த Size Zero ல ரொம்ப பிரபலம், தற்போது இந்தியாவில் இதை ஆரம்பித்து இருப்பவர் பாலிவுட் கரீனா கபூர், பாவம்!! சல்மான் தான் கடுப்பாகிட்டாரு ..அதோட இல்லாமல் இப்படி இருக்கிறது கேவலமா இருக்குன்னு வேறு கூறி கரீனாவ கடுப்படித்து விட்டாரு ;-)



சரி size zero னா என்ன?

Women's Dresses and Suits

United States 4 6 8 10 12 14 16 18
Europe (Italy) 38 40 42 44 46 48 50 52
Europe (Scandinavia and Germany) 34 36 38 40 42 44 46 48
Europe (France, Spain and Portugal) 36 38 40 42 44 46 48 50
Europe (UK and Ireland) 8 10 12 14 16 18 20 22
Japan 5 7 9 11 13 15 17 19

இது பற்றி புதிதாக கேள்விபடுகிறவர்களுக்கு இந்த அளவுகள் குழப்பமாக தான் இருக்கும்

ஒவ்வொரு நாட்டிலும் உடைகளின் அளவு வெவ்வேறாக குறிக்கப்படுகிறது, நம்ம ஊர்லையே ஒவ்வொரு ப்ரேண்டுக்கும் ஒவ்வொரு சைஸ் இருக்கும், "கில்லெர்" ஜீன் ஒரு சைஸ் ல இருக்கும் "லீ" ஜீன் ஒரு சைஸ் ல இருக்கும், நாம கில்லெர் அளவு நினைத்து போட்டு பார்க்காம "லீ" எடுத்துட்டு வந்தா அது கூடவோ அல்லது குறைவாகவோ அளவு இருந்து விடும். தற்போது அமெரிக்காவில் பெண்களுக்கு இருப்பதிலேயே குறைந்த அளவாக 4 (அட்டவணையை பார்க்க) என்று குறிப்பிடப்படுகிறது இந்த உடை (எடை) கலாச்சாரம் பரவிய பிறகு உடைகளின் அளவு Size Zero ஆகி விட்டது, சுருக்கமா சொல்வது என்றால் இது தான் பெண்களுக்கு கடைசி அளவு இதற்க்கு கீழே சிறியதா உடை கிடையாது.

இதையும் தாண்டி "௦௦" (Double Zero) வும் வந்து விட்டது!!!! குண்டாக அல்லது சாதாரணமாக இருந்த பலரும் உடல் மெலிய டயட் மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் மற்றும் உடல் குறைய என்னென்ன வழிகள் உள்ளனவோ அவை அனைத்தையும் பயன்படுத்த துவங்கி விட்டனர். மெல்லிதாக கூட இல்லாமல் அதை விட அபாயகரமாக மெலிய துவங்கி விட்டனர். இதை போல இல்லாதவர்கள் இப்படி நாம் இல்லையே என்று மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டனர்!! இதனால் உடலை எப்படி மற்றவர்களை போல இளைக்க வைப்பது என்று கவலையுடனே இருக்கிறார்கள்!!!

இங்கிலாந்து மற்றும் சில நாடுகளில் இதை போல Size Zero ல இருக்கிற பெண்களை ஃபேஷன் ஷோ க்களில் கலந்து கொள்ள அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், ரொம்ப மோசமான உடல்நிலையில் இருக்கிறார்கள் என்று தவிர்க்கிறார்கள்.


இந்த size zero ல இருக்கிறவங்க Anorexia நோய் வந்தவர்களை போல் உள்ளதாக கூறுகிறார்கள், இந்த நோய் வந்தவர்கள் உடல் எடை குறைந்து மெல்லியதாக காணப்படுவார்கள். எனவே size zero என்றாலே Anorexia வும் விவாதத்தில் கலந்து கொள்கிறது.




நம்ம ஊர்ல எல்லாம் இப்படி இருந்தா ரசிகர்கள் தெறித்து ஓடிடுவாங்க, நம்மவர்களுக்கு நமீதா மாதிரி புஷ்டியா!! இருந்தா தான் ரசிப்பாங்க. நமீதா இப்படி ஒரு முயற்சி செய்தா எத்தனை ரசிகர்கள் கொந்தளிச்சுடுவாங்கன்னு கொஞ்சம் யோசித்து பாருங்க :-))) நடிகைகள் குச்சி குச்சி யா இருந்தா கொலை வெறி ஆகிடுவாங்க.. "தோரணை" படத்துல ஸ்ரேயா size zero க்கு முயற்சித்து இருப்பாங்க படம் பார்த்த பல பேர், என்னப்பா இது! ஸ்ரேயா ஹாஸ்பிடல்ல இருந்து நேரா வந்துடுச்சா! என்று வெறுத்து போய்ட்டாங்க.. விஷால் கூட லிப் டு லிப் முத்தம் ல கூட ஒண்ணும் கிளுகிளுப்பே இல்லைன்னு அழுகாத குறையா சொல்றாங்க..அதனால நம்ம ஊருக்கு இதெல்லாம் ஒத்து வராது (கேர்ள்ஸ் நோட் திஸ் பாய்ண்ட்)

இவங்க எல்லாம் கஷ்டப்பட்டு size zero க்கு முயற்சி செய்துட்டு இருக்காங்க, நானெல்லாம் அதெல்லாம் செய்யாமையே அந்த அளவிற்கு மோசம் இல்லை என்றாலும் கிட்ட தான் இருக்கிறேன் :-)))